இலக்கியம்

காப்காவின் அம்மா

கடந்த சில நாட்களாகவே காப்காவின் (Franz Kafka  )அம்மாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன், காப்காவிற்கு அவரது அப்பாவினைப் பிடிக்காது, அப்பா தன்னை எந்த அளவு கட்டுபடுத்தி வைத்திருந்தார் என்ற கோபத்தை, வலியை Letter to My Father என காப்கா எழுதியிருக்கிறார்,  அந்த கடித்த்திற்கு மறுப்பு போல நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கோடிமர் காப்காவிற்கு அவனது தந்தை எழுதியது போல ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், Letter from his Father -Nadine Gordimer இரண்டையும் …

காப்காவின் அம்மா Read More »

பார்த்தேன் படித்தேன்

ருஷ்டியின் Midnight’s Children நாவலை வாசித்திருக்கிறேன், அது எனக்கு அவ்வளவு ஈர்ப்புடையதாகயில்லை, ஆனால் சில நாட்களுக்கு முன்பாகத் தீபா மேத்தா இயக்கத்தில் அதைப் படமாகப்பார்த்தேன், படம் எனக்குப் பிடித்திருந்தது, மறுபடியும் அந்த நாவலை படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், தீபா மேத்தா நாவலுக்கு மிக நெருக்கமாகப் படமாக்கியிருக்கிறார், ருஷ்டியின் சமீபத்தைய புத்தகமான Joseph Anton அவர் மீது பட்வா விதிக்கபட்ட நாளில் துவங்கி அவர் தப்பியோடிய நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது, மரணம் துரத்தும் ஒரு எழுத்தாளனின் …

பார்த்தேன் படித்தேன் Read More »

ஹெமிங்வேயின் காளைச்சண்டை

‘’காளைச்சண்டை என்பது ஒரு விளையாட்டல்ல, அது ஒரு மூன்று அங்கங்கள் உள்ள துன்பவியல் நாடகம். அதை ஒரு நடனத்தைப் பார்ப்பது போலத் தான் நாம் ரசிக்கவேண்டும். சாவை மிகுந்த நெருக்கத்தில் சந்தித்து அதன் முகத்தை ஆராய்வது தான் காளைச்சண்டை என்று கூடச் சொல்லலாம். உண்மையில் காளைச்சண்டையில் காளையை அடக்க வரும் வீரன் ஒரு கணித ஆசிரியர் கரும்பலகையின் முன்னால் நின்று கொண்டு தனது தியரத்தை விளக்கி சொல்வது போலச் சாவின் அறியப்படாத புதிரை கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகிறான். …

ஹெமிங்வேயின் காளைச்சண்டை Read More »

பைனாக்குலர்

ஆன்டன் செகாவின் படிப்பு அறையில் எப்போதுமே ஒரு பைனாக்குலரை வைத்திருப்பார், அது எதற்காக என அவரிடம் ஒரு நாடக நடிகை  கேட்ட போது செகாவ் சிரித்துக் கொண்டே சொன்னார் இது தான் என்னைக் காப்பாற்றும் தேவதை” “எப்படி?”  என்று  அந்தப் பெண் கேட்டாள் “ஒன்றும் பிரமாதமில்லை. யாராவது இங்கே வந்து, சம்பந்தமில்லாமல் , தங்கள் கெட்டிக்காரத்தனதை கொட்டி உளற ஆரம்பித்தால், நான் இந்த பைனாக்குலரை எடுத்துக் கொண்டு ஜன்னலுக்கு அருகில் போய் நின்று கொள்வேன், திடீரென ஆழ்ந்த …

பைனாக்குலர் Read More »

மகாபாரதம் படிப்பது எப்படி

மகாபாரதம்  முழுமையாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதை எப்படித் துவங்குவது, என்ன புத்தகத்தை நீங்கள் சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார், இதே கேள்விகளை பல நேரங்களில் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறை பதில் சொல்லும் போது இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், இன்றைக்கு நண்பர் கேட்டதும் நான் பயின்ற வழிமுறைகளைத் தெரிவித்தேன் மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் எதற்காகப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் …

மகாபாரதம் படிப்பது எப்படி Read More »

கார்வரும் செகாவும்

உலக அளவில் சிறுகதை எழுத்தில் பெரும்சாதனை புரிந்தவர் ஆன்டன் செகாவ், அவரது பாணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று புதிய பாய்ச்சலை  நிகழ்த்தியவர் ரேமண்ட் கார்வர், (Raymond Carver) கச்சிதமான சிறுகதை என்பதற்கு அடையாளமாக கார்வரின் சிறுகதைகளைச் சொல்லலாம், அமெரிக்கச்சிறுகதை ஆசிரியர்களில் கார்வரே முதன்மையானவர், செகாவ் பாணி சிறுகதைகளின் முக்கிய அம்சங்கள், குறைவான வார்த்தைகளில் கதை சொல்வது, தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்குவது, துல்லியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, இந்த மூன்றுடன் கதையின் போக்கில் சட்டென  நிகழும் ஒரு பரவசம், …

கார்வரும் செகாவும் Read More »

புல்லினைக் கடக்கும் காற்று

ஒனா நோ கோமாச்சி (Ono no Komachi) எனும் ஜப்பானியப் பெண் கவிஞரின் பெயரை ஒரு அரிசிக்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்விபட்டேன், தானியம் ஒன்றுக்குக் கவிஞரின் பெயரை வைத்திருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன், ஒரு கவிஞனுக்குக் கிடைக்கும் பொருத்தமான கௌரவம் அதுவெனத் தோன்றியது கோமாச்சி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞர்,  பேரழகி, இன்றும் ஜப்பானில் ஒப்பற்ற அழகு கொண்ட பெண்ணைக் கோமாச்சியாக இருக்கிறாள் என்றே குறிப்பிடுகிறார்கள், ஒனா நோ கோமாச்சி பற்றிய சுயவிபரக்குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை, ஆனால் …

புல்லினைக் கடக்கும் காற்று Read More »

கண்மூடிப் பறத்தல்

இயக்குனர் பெர்க்மென் தனது முதிய வயதில் அளித்த ஒரு நேர்காணலில் தான் கண்களை மூடிக் கொண்டால் தலைக்குள் கூட்டம் கூட்டமாக வெண்ணிறமான பறவைகள் பறப்பதாகவும், அவற்றை மனதிற்குள்ளாக எண்ணிக் கொணடிருப்பதே தனது வேலை எனவும், ஒருவேளை பறவைகள் தனது கண்ணில் இருந்து மறைந்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார், இதை வாசிக்கையில் எனக்கு ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் பறவைகள் கதை நினைவிற்கு வந்து போனது, இது முதுமையின் பிரச்சனை மட்டுமில்லை, ஆழமான ஒரு ஆன்மீக அனுபவம், …

கண்மூடிப் பறத்தல் Read More »

தேநீர்கலை

ஒககூரா எழுதிய ஜப்பானிய நூலான The Book of tea யை வாசித்துக் கொண்டிருந்தேன், தேநீரைப்பற்றி எவ்வளவு நுட்பமாக, கவித்துவமாக, அற்புதமாக எழுதியிருக்கிறார் என்ற வியப்பு அடங்கவேயில்லை, கவிதை நூல்களை வாசிப்பதைப் போல சொல் சொல்லாக ருசித்து வாசிக்க வேண்டிய புத்தகமிது புத்தகத்தை வாசிக்க வாசிக்க உடனே டீக்குடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது, ஜப்பானியர்கள் டீக்குடிப்பதை மகத்தான தியானம் என்கிறார்கள், டீ தயாரிப்பதும், பரிமாறப்படுவதும் கலைவெளிப்பாடாகும், எனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜப்பானிய தேநீர்கடைகளில் தேநீர் குடித்திருக்கிறேன், உண்மையில் …

தேநீர்கலை Read More »

நாடக கம்பெனிகள்

சினிமாவின் வருகை மரபான தமிழ்நாடக கம்பெனிகளை எப்படி எல்லாம் பாதிப்படைய செய்தது என்பதைப் பற்றி எழுதுவதற்காக நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன், பம்மல் சம்பந்த முதலியாரின் வாழ்க்கை வரலாறு, பேசும்பட அநுபவங்கள், மற்றும் அவ்வை தி.க.சண்முகம் எழுதிய நாடக வாழ்க்கை அனுபவங்கள், நாடகக்கலை நூல், மற்றும பழைய நாடக கம்பெனியின் சிறுவெளியீடுகள், என வாசிக்க வாசிக்க  வியப்பான தகவல்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன பம்மல் சம்பந்த முதலியாரின் என் சுயசரிதை நூறு வருஷங்களுக்கு முந்திய சென்னை வாழ்க்கையை …

நாடக கம்பெனிகள் Read More »