இலக்கியம்

அவள் பிரிவு

வெ சாமிநாத சர்மா தனது மனைவியின் மரணம் ஏற்படுத்திய இழப்பில் இருந்து மீள்வதற்காக அவரைப்பற்றிய தனது நினைவுகளை உணர்ச்சிபூர்வமான கடிதங்களாக எழுதியிருக்கிறார், சர்மாஜி, தனது நண்பர்  அரு சொக்கலிங்கத்திற்கு  எழுதிய இந்தக் கடிதங்களை தொகுத்துத் தனி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்,  அவள் பிரிவு என்ற இந்நூலை பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சர்மாவின் மனைவி மங்களம் அம்மையார் குறித்து உணர்ச்சிபூர்வமான சித்திரம் ஒன்றினை அவள் பிரிவு உருவாக்குகிறது, புத்தகத்தை படித்து முடிக்கையில் மனது கனத்துப் போய்விடுகிறது, புகழ்பெற்ற எழுத்தாளர் C. …

அவள் பிரிவு Read More »

வாழ்க்கையின் வேஷம்

மலையாளத்தில் வெளியாகி மிகுந்த கவனம் பெற்ற கல்பற்றா நாராயணனின் நாவல், தமிழில் ஷைலஜா மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக வெளிவர உள்ளது, சுமித்ரா என்ற அந்த நாவலுக்கு  நான் எழுதிய அறிமுக உரை ••• வாழ்க்கையின் வேஷம்      –  எஸ் ராமகிருஷ்ணன் மனிதர்களின் வாழ்க்கை மரணத்துடன் முடிந்து விடுவதில்லை போலும், மரணம் உடலின் இருப்பைத் தான் முடித்துவைக்கிறது, சாவிற்கு அப்புறம் மனிதர்கள் நினைவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எந்த நினைவுகளை விலக்கியும், வெறுத்தும் ஒதுக்கி வைத்தார்களோ அந்த நினைவுகளில் ஒன்றாக …

வாழ்க்கையின் வேஷம் Read More »

மண்ணில் விழும் தானியம்

Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit- bible என்ற பைபிள் வாசகத்தை டால்ஸ்டாய் தனது டயரியில் அடிக்கோடிட்டு குறித்திருக்கிறார், அவருக்கு மிகவும் விருப்பமான வாசகமிது, அதை வாசித்த நிமிஷத்தில் இருந்து அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். மரணத்திற்குப் பிறகு தன்னை கல்லறையில் புதைக்க கூடாது, கல்லறைவாசகம் …

மண்ணில் விழும் தானியம் Read More »

உறுபசி – தீராத மோகம்

 அமெரிக்காவில் வாழும் கணிதவியல் அறிஞர் பாஸ்கர் லட்சுமண் உறுபசி நாவல் குறித்து எழுதியுள்ள விமர்சனம்,  பாஸ்கர், தேர்ந்த இலக்கிய வாசகர், சொல்வனம் இணைய இதழில் கணித ஆளுமைகள் பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளை எழுதிவருகிறார், ***  எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம் -பாஸ்கர் லட்சுமண் ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து …

உறுபசி – தீராத மோகம் Read More »

கவிதை கேட்ட நரி

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் மிக முக்கியமானவர் மட்சுவோ பாஷோ, அவரைப்பற்றிய Basho And The Fox என்ற புத்தகத்தைப் படித்தேன், டிம்.ஜே,மேயர்ஸ் குழந்தைகளுக்காக எழுதிய சித்திரங்களுடன் உள்ள புத்தகமது பாஷோ டோக்கியோ நகரின் புறவெளியில் இயற்கையோடு இணைந்தபடி சிறிய குடிலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர், பாஷோ என்பதற்கு வாழைமரம் என்று தான் பொருள், அவரது வீட்டின் அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு செர்ரி மரமிருந்தது, இந்த மரத்தடியில் அமர்ந்தபடியே அதன் பூக்களை ரசிப்பது பாஷோவிற்கு பிடித்தமான …

கவிதை கேட்ட நரி Read More »

ஒவியன் வாங்ஃபோ

மார்கெரித் யூர்ஸ்னார் (Marguerite Yourcenar) நவீன பிரெஞ்ச் இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். இவரது சிறுகதைகளின் தொகுப்பு கீழை நாட்டுக்கதைகள் என்ற பெயரில் க்ரியா வெளியீடாக தமிழில் வெளியாகி உள்ளது. யூர்ஸ்னார் பிரெஞ்ச் கலை இலக்கிய அகாதமியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் எழுத்தாளர். முக்கிய நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், இவரது எழுத்துகள் குறித்து இன்றளவும் தொடர்ந்து சர்சைகள் இருந்து வருகின்றன தொன்மங்களையும் பழங்கதைகளையும் கொண்டு உருவாக்கபடும் இவரது நவீன சிறுகதைகள் கதை சொல்லும் …

ஒவியன் வாங்ஃபோ Read More »

போர்ஹேயின் வகுப்பறை

அமெரிக்கப் பயணத்தை திட்டமிடும் போதே மிஷிகன் மாநிலத்தில் உள்ள கிழக்கு லான்சிங் பல்கலைகழகத்தை ஒரு முறைப் பார்வையிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன், அங்கே தான் எனது விருப்பத்திற்குரிய எழுத்து ஆளுமை ஜோர்ஜ் லூயி போர்ஹே (Jorge Luis Borges ) 1975ல் கௌரவ டாக்டர் பெற்றார், கவிதை குறித்து அப்பல்கலைகழகத்தில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார், லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் கவிஞர், புனைகதையாசிரியர் என்று கொண்டாடப்படும் ஜோர்ஜ் லூயி போர்ஹே பார்வையற்றவர், ஆனால் அதை ஒரு தடையாகக் …

போர்ஹேயின் வகுப்பறை Read More »

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை

‘வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் சமீபத்தில் வெளியான புத்தகங்களில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது, சீனாவின் மரபு இலக்கியக் கவிதைகள் நேரடியாக சீன மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை, ஐரோப்பிய இலக்கியங்கள், ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்கு தமிழில் சீன இலக்கியங்கள் அறிமுகமானதில்லை, லூசுன் சிறுகதைகள், லாவோட்சூவின் தாவோ மொழியாக்கம், கன்ப்யூசியஸின் தத்துவங்கள், இளைஞன் ஏர்கையின் திருமணம். பெருஞ்சுவருக்குப் பின்னே. மிதந்திடும் …

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை Read More »

புத்தனின் சித்திரக்கதை

ஜப்பானில் மட்டும் ஏன் காமிக்ஸ் அதிகம் படிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஜப்பானியர்கள் சொல்லும் பதில், ஜப்பானில் மட்டும் தான் ஒசாமு டெசூகா (Osamu Tezuka)  இருக்கிறார், இவரது சித்திரக்கதைகளை ஒரு முறை வாசித்தால் போதும் பிறகு வாழ்க்கை முழுதுவம் நீங்கள் மாங்கா வாசிப்பவராகி விடுவீர்கள் என்கிறார்கள், அது உண்மை தான் ஒசாமு டெசூகாவை மாங்காவின் கடவுள் என்று சொல்கிறார்கள். மாங்கா என்பது ஜப்பானிய காமிக்ஸ், ஐந்து முதல் ஐம்பது வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவகையில் காமிக்ஸ் புத்தகங்கள் …

புத்தனின் சித்திரக்கதை Read More »

பியர் பூர்தியு

பியர் பூர்தியு (Pierre Bourdieu) பிரெஞ்சின் முக்கியமான சமூகவியல் சிந்தனையாளர்,  தொலைக்காட்சியின் செயல்பாட்டின் பின்னுள்ள அரசியலை, பார்வையாளனின் உளவியலை, பொறுப்புணர்வைக் குறித்து எழுதியுள்ள  தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் என்ற புத்தகம் மிக முக்கியமான ஒன்று, இந்திய மொழிகளில் தமிழில் மட்டும் தான் இந்த நூல் வெளியாகி உள்ளது, பிரெஞ்சில் இருந்து நேரடியாக இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம் 2004ல் வெளியிட்டுள்ளது, சராசரியாக ஒரு பார்வையாளன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து மணி நேரங்களாவது தொலைக்காட்சி …

பியர் பூர்தியு Read More »