இலக்கியம்

அறியப்படாத தீவின் கதை

ஜோஸே ஸரமாகோ, (José Saramago) நோபல்பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளர், இவரது அறியப்படாத தீவின் கதை மிகச்சிறிய நாவல், 55 பக்கங்களே உள்ளது, கவிஞர் ஆனந்த் மொழியாக்கத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது ஸரமாகோவின் எழுத்துலகம் தனித்துவமானது, முற்றுப்புள்ளியில்லாத நீண்டவாக்கியங்கள், உரையாடல்களில் யார் யாரோடு பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியாத ஊடுபாவும் முறை, வியப்பூட்டும் சம்பவங்கள், மாய நிகழ்வுகள், கவித்துவமான விவரணைகள் என்று வாசகனை எழுத்தாளனுக்கு நிகராக வேலை செய்ய வைப்பவர் ஸரமாகோ, …

அறியப்படாத தீவின் கதை Read More »

என்றுமிருக்கும் சலேரி

மிலாஸ் போர்மனின் அமேடியஸ் திரைப்படம் எனக்கு மிகவும் விருப்பமானது, 1984ல் வெளியான இப்படத்தை இருபத்தைந்து தடவைக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன், உலக சினிமாவில் இது ஒரு இசைக்காவியம்,  எட்டு ஆஸ்கார் விருதுகள் உள்ளிட்ட நாற்பது விருதுகளைப் பெற்ற படமிது, இசைமேதை மொசார்ட்டின் வாழ்வினை விவரிக்கும் இப்படம், திரைக்கதை எழுத விரும்புகின்றவர்களுக்கு ஒரு ஆதாரப்பாடம் என்றே சொல்வேன், ஒரு இசை ஆளுமையைப் பற்றிய படத்தை பீட்டர் ஷெபர்ஸ் இது போன்ற திரைக்கதை வடிவத்தில் எழுதியிருப்பது அவரது தனித்திறனையே காட்டுகிறது,  மொசார்ட்டின் …

என்றுமிருக்கும் சலேரி Read More »

இரவிற்கு எல்லாம் தெரியும்

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படையால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள், புனைகதைகள், நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆனி பிராங்கின் நாட்குறிப்புகள், (The Diary of Anne Frank) பதிமூன்று வயதான யூதச்சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டயரியை எழுதியிருக்கிறாள் ஜுன் 14 1942ல் டயரி துவங்குகிறது, முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை …

இரவிற்கு எல்லாம் தெரியும் Read More »

அருவிகளின் லீலை

நடந்தாய் வாழி காவேரி என்று தி.ஜானகிராமன் காவேரி ஆற்றின் பாதையெங்கும் நதியின் புகழ்பாடியபடியே பயணித்த அனுபவ நூல் ஒன்றை வாசித்திருக்கிறேன் அது  தந்த உத்வேகத்தில் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் வழியெங்கும் பயணம் செய்து பார்த்திருக்கிறேன்.  ஏரி, குளம், கண்மாய், அணைகள் என்று தமிழக நீர்நிலைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக நான்கு ஆண்டுகள் அலைந்து திரிந்திருக்கிறேன், இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு வறுமையானது என்ற எண்ணம் அடியோடு …

அருவிகளின் லீலை Read More »

முல்லைபுரத்து மனிதர்கள்

White Man Falling என்ற நாவலை வாசித்தேன். Mike Stock என்ற பிரிட்டீஷ் இளம் எழுத்தாளர் எழுதிய இந்த நாவல் தமிழ் குடும்பத்தின் கதையை விவரிக்கிறது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ்வாழ்க்கையைப்  பற்றிய நாவல் என்பதால் படு சுவாரஸ்யமாக இருக்கிறது, 2006ல் வெளியான இந்நாவலுக்கு சிறந்த முதல்நாவலுக்கான Goss Award  பெற்றிருக்கிறார் மைக் ஸ்டாக்ஸ் இந்திய ஆங்கில நாவல்களின் கதை சொல்லும் முறையை ஒத்த கதைசொல்லலே மைக் ஸ்டாகிஸிடம் உள்ளது, ஆனால் இந்திய ஆங்கில எழுத்தாளர் பலரிடமும் காணமுடியாத …

முல்லைபுரத்து மனிதர்கள் Read More »

புத்தகங்களின் ஊடே

உலகப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லி சென்று இப்போது தான் திரும்பினேன், 1500க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள்,  நாள் ஒன்றுக்கு ஐந்து மணி நேரம் புத்தகங்களுக்கு ஊடாக சுற்றியலைந்தேன்,  பிரகதி மைதானில் 14 வளாகங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது, உலக மொழிகளில் பெரும்பான்மையினர் இங்கே தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள், குழந்தைகளுக்குத் தனிப்பிரிவு அமைக்கபட்டிருந்தது. இந்திய சினிமா குறித்த கருத்தரங்கம், மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கம், பிறமொழி படைப்புகளுக்கான உரிமை பெறுவது என்று தினம் ஒரு நிகழ்வு …

புத்தகங்களின் ஊடே Read More »

Stories, my passion

The Economic Times நாளிதழின் நேற்றைய இணைப்பில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது, அதன் இணைப்பு ** Stories, my passion  – sudhir.sreenivasan Thanks to his sheer, almost childlike love for stories, acclaimed Tamil novelist S Ramakrishnan has, for several decades now, enjoyed success in the many  mediums of storytelling, and has now been awarded with a Lifetime Achievement award ** …

Stories, my passion Read More »

பரோட்டா மகாத்மியம்

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் என்ற ஷாநவாஸின் புத்தகத்தை வாசித்தேன், முன்னதாக இவரது கட்டுரைகளில் சிலவற்றை உயிரோசையில் வாசித்திருக்கிறேன், பரோட்டா குறித்து மிகச்சுவையாக எழுதப்பட்ட  முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ள சிறந்த புத்தகமிது, உணவுக்கலாச்சாரம் பற்றி தமிழில் அதிக புத்தகங்கள் வருவது கிடையாது, சமையல்குறிப்புகளை புத்தகங்களாக எழுதும் பலருக்கும் உணவின் வரலாறு தெரியாது, அது ஏற்படுத்திய கலாச்சார மாற்றங்கள் மற்றும் புதிய ருசியின் தனித்துவங்கள் பற்றித் தெரியாது, ஆனால் ஷாநவாஸ் பரோட்டாவின் சகலபரிமாணங்களையும் படிப்பவர் …

பரோட்டா மகாத்மியம் Read More »

காட்டப்படும் மறு கன்னம்

எனது சிறுகதை ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளேயின் நாடகநிகழ்வு பற்றி டாக்டர் ராமானுஜம் ஒரு நல்ல பதிவை எழுதியிருக்கிறார், அறிவியல் குறித்த விவாதங்களை உருவாக்கும் இந்த நாடகநிகழ்வு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது •• காட்டப்படும் மறு கன்னம் – டாக்டர். ராமானுஜம் கிறிஸ்துமஸுக்கு முந்தினம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரது எழுத்தில் வெளிவந்த சிறுகதையான ‘ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே!” என்ற சிறுகதையை ஜெயராவ் குழுவினர் அருமையான நாடக வடிவமாக்கி இருந்தனர். மனிதன் தோன்றிய …

காட்டப்படும் மறு கன்னம் Read More »

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும்

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரம் திருவண்ணாமலை என்று எப்போதுமே சொல்வேன், அப்படித் திருவண்ணாமலையை ஒரு இலக்கிய சங்கமமாக மாற்றியமைத்தவர் எனதருமை நண்பர் பவா செல்லத்துரை. அவர் மீடியா வாய்ஸ் இதழில் எங்களது நட்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், வாசிக்கையில் மனம் நெகிழ்ந்து போனேன்.  அரஸ் வரைந்துள்ள எனது ஒவியம் மிக துல்லியமாக, சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. எத்தனையோ இரவுகளில் பவா வீட்டுக்கதவை தட்டி அவரது அம்மா சமைத்து தரும் உணவைச் சாப்பிட்டு விடிய விடிய இலக்கியம் பேசியிருக்கிறேன், எனக்கும் …

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும் Read More »