நெடுங்குருதி: காலத்தின் குரல்
– கேசவமணி நாகு என்ற ஒன்பது வயதுச் சிறுவனை மையப்படுத்தி அவனது தலைமுறை கதையைச் சொல்வதன் மூலம் வேம்பலை என்ற கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது நெடுங்குருதி. நாவல் கோடைக் காலம், காற்றடிக் காலம், மழைக் காலம், பனிக் காலம் என்று நான்கு பகுதிகளாக பகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கால மாற்றமும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுவதன் மூலம் காலத்தையும் நாவலில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நாவலை வாசிக்கும் கணம் தோறும் …