இலக்கியம்

துக்கலின் கதைகள்

பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல், (Kartar Singh Duggal ) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இவர், இந்தியப்பிரிவினை குறித்து முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்,  சிறந்த நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் பாலுறவையும் விலக்கிவைக்கபட்ட இச்சைகளையும் பற்றிப் பகிரங்கமாக எழுதினார் என்று துக்கலின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கபட்டன, பத்திற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ள இவர் சிறந்த விமர்சகரும் கூட, துக்கல் அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர், பத்மபூஷண் உள்ளிட்ட பல …

துக்கலின் கதைகள் Read More »

கோடையில் ஒரு மழை

ச.ஆறுமுகம் மலைகள் இணைய இதழிலும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறார், ஒய்வு பெற்ற வட்டாட்சியரான ஆறுமுகம் வேலூரில் வசிக்கிறார், உலக இலக்கியத்தின் சமகாலப் படைப்புகளைத் தேடித்தேடி மொழியாக்கம் செய்துவருகிறார், சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவரது மொழியாக்கத்தில் வெளியான ஹரூகி முரகாமியின் யானை காணாமல் போகிறது சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது, சமீபத்தில் வெளியான கோடையில் ஒரு மழை மொழியாக்க சிறுகதைகளின் தொகுப்பில் நோபல் பரிசு பெற்ற மோ யான், ஆலின் மன்றோ சிறுகதைகளுடன் ஜேடீ ஸ்மித், மார்க்வெஸ், …

கோடையில் ஒரு மழை Read More »

டெலிபோன் புத்தகம்

Bashō’s Phonebook  என்ற சித்திரக்கவிதை தொகுப்பு ஒன்று மெயிலில் வந்திருந்தது,  அதை உருவாக்கியவர் Travis Macdonald பாஷோவின் ஜப்பானியக் கவிதைகளை எடுத்துக் கொண்டு டெலிபோன் பேடில் எந்த எழுத்திற்கு எந்த எண் கொடுக்கபட்டுள்ளதோ அதைப் போல கவிதையை டெலிபோன் மொழிக்கு உருமாற்றம் செய்திருக்கிறார் 666:555:3: 7:666:66:3 [—] 333:777:666:4:7777: 5:88:6:7:33:3: 444:66 [—] 7777:666:88:66:3: 666:333: 9:2:8:33:777[.] இது ஒரு பாஷோவின் ஜென் கவிதை, எழுத்து வடிவில் உள்ள கவிதையை எண் வடிவில் மாற்றி தருவது ஒரு …

டெலிபோன் புத்தகம் Read More »

கார்வரின் கதையுலகம்

சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான மொழிபெயர்ப்புப் புத்தகம் ரேமண்ட் கார்வரின் வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு. கார்வரின் முக்கியமான 12 சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், இந்தக் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார் செங்கதிர். இவரோடு எம். கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயராகவன் ஆகியோரும் கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார்கள், இதனைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது கார்வரை அறிமுகப்படுத்திச் செங்கதிர் நேர்த்தியான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார்,  அதில் இன்றைய சூழலில் யதார்த்தவாத எழுத்து ஏன் தேவை என்பதைப் பற்றி விரிவாக …

கார்வரின் கதையுலகம் Read More »

கோகோலின் பெயரால்

கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள் இரண்டு வங்கச் சிறுகதைகளைச் சமீபமாகப் படித்தேன், ஒன்று Samaresh Basu எழுதியது, மற்றொன்று Sirshendu Mukhopadhyay சிறுகதை, இரண்டிலும் அதன் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயர் கோகோல் இது போலவே ஜும்பா லஹரியின் The Namesake நாவலின் கதாநாயகன் பெயரும் கோகோல், நாவலில் கோகோல் ரஷ்யாவின் அடையாயச்சின்னம் போலவே சித்தரிக்கபடுகிறார். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், கார்க்கி போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் கவனிக்கபட்ட அளவிற்குத் தமிழ் சூழலில் …

கோகோலின் பெயரால் Read More »

மறக்கமுடியாத தருணங்கள்

2005-ம் ஆண்டில் குற்றாலத்தில் நான் நடத்திய இலக்கிய முகாமின் புகைப்படங்களை நண்பர் முரளிமனோகர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்செயலாக அதன் இணைப்பை நேற்று ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். புகைப்படங்களைக் காணும் போது பரவசமாக இருந்தது. குற்றாலச்சாரலில் நனைந்தபடியே இரண்டு நாட்களும் பகலிரவாகத் தொடர்ந்த உரையாடல்கள், வேடிக்கை கதைகள், தீவிர இலக்கிய விவாதங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன, அரிய தருணங்களைப் புகைப்படமாகச் சேகரித்து வைத்துள்ளதற்கு நன்றி முரளி. அந்த முகாமில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன், பூமணி, சோ,தர்மர், …

மறக்கமுடியாத தருணங்கள் Read More »

நிலவும் நாணயங்களும்

நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞனுக்குக் காலடியில் கிடக்கும் நாணயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள் உலகெங்கும் கலைஞர்கள் தனது கற்பனையுலகோடு, தனது படைப்பாற்றலின் முழுவீச்சோடு இயங்கவே ஆசைப்பட்டிருக்கிறார்கள் தன் விருப்பபடி வாழ்வதற்கு உலகம் அனுமதிக்காது என்பதை உணர்ந்து கொண்டு, அதை மீறிச் செயல்பட்டிருக்கிறார்கள்,  பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரது வாழ்வும் நாடோடிகளின் வாழ்க்கைமுறையைக் கொண்டதே வாழ்க்கையை அதன் தீவிரத்தோடு எதிர்கொண்டு தன்னைப் பலிக் கொடுத்த ஒவியர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள் என நிறையப் பேர் என் நினைவில் வந்து …

நிலவும் நாணயங்களும் Read More »

அனுபவச்சுவடுகள்

டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன் ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குனர், ஜெயகாந்தனின் நெருக்கமான தோழர், நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர், உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர், அவரது அனுபவச்சுவடுகள் என்ற நூலை சமீபமாக வாசித்தேன், கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கேஎஸ்ஸின் பள்ளி வாழ்க்கை துவங்கி பிலிப்பைன்ஸில் அவர் பணியாற்றிய காலம், அவரது நண்பர்கள், சந்திப்புகள், நினைவில் நிற்கும் ஆளுமைகள் எனப் பல்வேறு நிகழ்வுகளின் நினைவுத்தொகுப்பே இந்த நூல், இதன் தனிச்சிறப்பு தனது நினைவுகளை மட்டும் …

அனுபவச்சுவடுகள் Read More »

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

மாலனின் சிறுகதைத் தொகுப்பை மறுபடி படித்துக் கொண்டிருந்தேன், நுட்பமாகவும், தனித்துவமிக்கதாகவும் உள்ள இவரது சிறுகதைகள் மறுவாசிப்பில் மிகவும் நெருக்கமாக இருந்தன, மாலனின் கதைகளில் வரும் மனிதர்கள் பெரும்பகுதி நடுத்தர வர்க்கம்,  அவர்களின் அக,புற பிரச்சனைகளும் அது உருவாகி வெளிப்படும் விதமும் விசித்திரமாக இருக்கின்றன, அசோகமித்ரன் காட்டிய மத்தியதர உலகம் ஒரு பக்கம், ஆதவன் காட்டிய உலகம் இன்னொரு பக்கம் என்றால் இரண்டின் சாயலுமின்றி நடுத்தர வர்க்க உலகின் திண்டாட்டங்களை, சின்னஞசிறு சந்தோஷங்களை. வெளிப்படுத்த முடியாத துக்கங்களை தனது …

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே Read More »

WILL SPEAK WITH GANDHI

எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதை தனிவெளியீடாக ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் காந்தியவாதிகளால் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது, அந்த முயற்சியை மேற்கொண்ட நண்பர் மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த நன்றி. காந்தியோடு பேசுவேன் சிறுகதையை நண்பர் கமல் ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ••• WILL SPEAK WITH GANDHI I had alighted at Wardha only on that morning. This is the first time I am visiting the Gandhi …

WILL SPEAK WITH GANDHI Read More »