நெடுந்தனிமை
புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது என்பார்கள். இந்த இரண்டு மரங்களின் புகைப்படங்களும் எனக்கு உலகின் தொன்மையை, தனிமையை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.இரண்டும் சாதாரணமான மரங்கள் அல்ல. தன்னளவில் மிகத் தனிமையான மரங்கள். இதைப்போல இன்னொரு மரம் உலகில் இல்லை என்பதே இதன் சிறப்பு. அப்படி என்ன இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள். ஒன்று ஜெனரல் ஷெர்மான் எனப்படும் உலகிலே மிக வயதான மரம். இதன் வயது 2200 வருசங்களுக்கும் மேல் என்று சொல்கிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா …