இலக்கியம்

டோனி மாரிசன்

நியூயார்க்கர் இதழ் சென்ற ஆண்டு அமெரிக்காவில்கடந்தஇருபத்தைந்து வருடங்களில் வெளியான சிறந்த நாவல் எது என்று  ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான டோனி மாரிசனின்  Beloved நாவலைத் தேர்வு செய்தது. அப்போது இதை மறுபடியும் படிக்க வேண்டும்என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக அதைத் திரும்ப வாசிக்க நேர்ந்தது. 1987ல் வெளியான இந்த நாவலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். அப்போது எனக்கு நாவலின் மையமாகப் பட்டது முக்கியப் பெண்கதாபாத்திரம் மற்றும் …

டோனி மாரிசன் Read More »

ஏழு கவிதைகள்

 கடந்த சில நாட்களில் நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்தமான கவிதைகள்.    This is a Photograph of Me –   Margaret Atwood   It was taken some time ago. At first it seems to be a smeared print: blurred lines and grey flecks blended with the paper;   then, as you scan it, you see in the left-hand corner a …

ஏழு கவிதைகள் Read More »

கரைக்க முடியாத நிழல்

பஷீர் பற்றிய ஆவணப்படம் வைக்கம் முகமது பஷீரின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அவரைப்பற்றிய ஆவணப்படம் Basheer – The Man சென்னையில் திரையிடப்பட்டது. ஆனால் அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனது நண்பர்களில் ஒருவர் தனது சேமிப்பில் இருந்த பஷீரைப்பற்றிய ஆவணப்படத்தின் பிரதியொன்றை எனக்காகத் தந்து அனுப்பினார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எடுக்கபட்ட ஆவணப்படம் என்ற போதும் இன்றும் அதன் அழகுணர்வும் தேர்ந்த உருவாக்கமும் அதை ஒரு முன்மாதிரி படமாகவே வைத்திருக்கிறது. பஷீர் கதைகளை தமிழில் வாசிப்பதற்கும் மலையாளத்தில் …

கரைக்க முடியாத நிழல் Read More »

காமத்துக்கு ஆயிரம் உடைகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி – ஜெயமோகன் மரணம் அதுவரை வாழ்க்கைக்கு இல்லாதிருந்த ஓர் அர்த்தத்தை அளிக்கிறது என்று அல்பேர் காம்யூவின் புகழ்பெற்ற வரி ஒன்று உண்டு. பல நாவல்கள் இவ்வரியின் நீட்சியாக நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. குறிப்பிடத்தக்கவை இரண்டு. டாக்டர் சிவராம காரந்தின் அழிந்த பிறகு என்ற கன்னட நாவல் அதில் ஒன்று.[தமிழில் சித்தலிங்கையா. தேசிய புத்தக நிறுவனம் வெளியீடு] சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் இன்னொன்று. இரண்டுமே இறந்துபோன ஒருவரை நினைவுகள் மற்றும் தடையங்கள் மூலம் தேடிப்போய் …

காமத்துக்கு ஆயிரம் உடைகள் Read More »

காந்தியின் நினைவில்.

            தமிழகத்தின் பல இடங்களில் காந்தி வந்த இடம், காந்தி பேசிய மைதானம் என்று  உள்ளன. சில ரயில் நிலையங்களில்அப்படிபெயர்பலகைகளைக் கண்டிருக் கிறேன். விருதுநகர் ரயில் நிலையத்தின் வெளியே காந்தி விருதுநகருக்கு வந்த நாளின் நினைவாக ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. காந்தியை பார்த்தவர்கள், காந்திக்காக தன் அணிந்திருந்த நகைகளை கழட்டி தந்தவர்கள் என்று பலரது நினைவுகளை என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். காந்தியின் கையைத் தொட்டவர்கள் கடவுளின் கையைத் தொட்டது போன்ற …

காந்தியின் நினைவில். Read More »

சோம்பல் நாயகன்

ருஷ்ய இலக்கியத்தின் பிரதான படைப்பாளி களாக அறியப்பட்ட செகாவ் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி,  கார்க்கி போன்றவர்களின் படைப்புகள் அறிமுகமான அளவு அதே காலகட்டத்தை சேர்ந்த பல முக்கிய படைப்புகள்  உலக இலக்கிய பரப்பிற்குள் அறிமுகமாகவில்லை. அவை பல ஆண்டு காலமாக முறையான ஆங்கில மொழி பெயர்ப்பின்றி  முடங்கி கிடந்துள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் வியந்து போற்றி தங்களது எழுத்துலக போட்டியாளர் என்று வர்ணித்த இவான் கோன்சரோவின் (Ivan Goncharov) படைப்புகள் ஆங்கிலத்தில் நூறு வருடத்திற்கு பிறகு தற்போது தான் நல்ல மொழிபெயர்ப்பில் …

சோம்பல் நாயகன் Read More »

கீயிங்கே வனத் திருடன்

              செல்மா லாகெர்லெவின் தேவமலர் ஒரு குறுநாவல். அதை எனது பதினெட்டாவது வயதில் முதன்முறையாக வாசித்தேன். பின்மதிய நேரமது. வாசிக்கத் துவங்கும் போது வெளியில் இருந்த வேம்பின் காற்று வீசிக் கொண்டிருப்பதை லேசாக உணரமுடிந்தது. நான்கு பக்கங்களை கடந்து போவதற்குள் கதை ஒரு சுழலைப் போல என்னைத் தனக்குள் இழுத்துக் கொண்டு போகத் துவங்கியது. நாவலில் வரும் சம்பவங்களின் பின்னால் ஒரு நிழலைப் போல மெளனமாக சென்று கொண்டிருந்தேன். …

கீயிங்கே வனத் திருடன் Read More »

கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை.

                                               ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவு தமிழில் மற்ற நாடுகளின் இலக்கியங்கள் அறிமுகமாகவில்லை. பிரெஞ்சு இலக்கியத்தின் மாபசானும் விக்டர் க்யூகோவும் எமிலிஜோலாவும் தமிழுக்கு 1950களில் அறிமுகமானார்கள். அந்த நாட்களில் ஜெர்மனிய இலக்கியத்தைப் பொறுத்தவரை அறிமுகமாகியிருந்த ஒரே பெயர் கதே. அதுவும் அவரது பாஸ்டஸ் நாடகம் மட்டுமே.நவீன ஜெர்மானிய இலக்கியம் பற்றிய அறிமுகம் மிகக் குறைவாகவே உள்ளது . நவீன தமிழ் இலக்கியத்தின் ஊடாக அறிமுகமான முக்கிய ஜெர்மானிய எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா …

கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை. Read More »

எழுத்தின் அடையாளம்.

            கோவில்பட்டியிலிருந்து ஏழுகிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இடைசெவல் கிராமம். கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சிறிய கிராமம். கரிசல் பூமி. இந்தச் சிற்றூரில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, இசைக்கற்று, தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு எழுத்தாளர்களாகி, இருவருமே சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும்.இப்படி ஒரே கிராமத்தைச் சேர்ந்த, ஒன்றாக வளர்ந்த இரண்டு நண்பர்கள் வேறு எந்த மொழியிலும் சாகித்ய அகாதமி …

எழுத்தின் அடையாளம். Read More »

தேவதச்சனின் கவியுலகம்

கவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, சாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறதுகவிஞன் கவிதையின் வழியாக உலகை ஒன்றிணைக்கவும் சிதறடிக்கவே ஒரே நேரத்தில் விரும்புகிறான். காட்சிகளையும் சப்தத்தையும் படிமங்களையும் கொண்டு உலகின் மீதான தனது வேட்டையை நிகழ்த்துகிறான். கதையாசிரியனைப் போல அவன் சம்பவங்களின் மீதும், சம்பவங்களை …

தேவதச்சனின் கவியுலகம் Read More »