காதில்லாத அரசன்
புதிய குறுங்கதை. கடலும் மலையும் சூழ்ந்த ஒரு நாட்டை காதில்லாத அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவனது மூதாதையர்கள் காலத்திலிருந்தே அரசவம்சத்தில் பிறக்கும் எவருக்கும் காதிருப்பதில்லை. அது அவர்களுக்கு பெரிய குறையாகவும் இல்லை. அரசனுடைய காதுகளை உண்மையான செய்திகள் எந்த காலத்திலும் எட்டியதேயில்லை என்பதால் காதை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்து காதற்று போய்விட்டதாக ஒரு நம்பிக்கையிருந்தது. அதை மெய்பிப்பது போலவே அரசவம்சத்தில் பிறக்கும் குழந்தைகளும் காதில்லாமலே பிறந்தன. காதில்லாத அரசன் அரண்மனையை விட்டு வெளியே வருவதுமில்லை . யாரையும் …