இலக்கியம்

காந்தியின் நினைவில்.

            தமிழகத்தின் பல இடங்களில் காந்தி வந்த இடம், காந்தி பேசிய மைதானம் என்று  உள்ளன. சில ரயில் நிலையங்களில்அப்படிபெயர்பலகைகளைக் கண்டிருக் கிறேன். விருதுநகர் ரயில் நிலையத்தின் வெளியே காந்தி விருதுநகருக்கு வந்த நாளின் நினைவாக ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. காந்தியை பார்த்தவர்கள், காந்திக்காக தன் அணிந்திருந்த நகைகளை கழட்டி தந்தவர்கள் என்று பலரது நினைவுகளை என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். காந்தியின் கையைத் தொட்டவர்கள் கடவுளின் கையைத் தொட்டது போன்ற …

காந்தியின் நினைவில். Read More »

சோம்பல் நாயகன்

ருஷ்ய இலக்கியத்தின் பிரதான படைப்பாளி களாக அறியப்பட்ட செகாவ் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி,  கார்க்கி போன்றவர்களின் படைப்புகள் அறிமுகமான அளவு அதே காலகட்டத்தை சேர்ந்த பல முக்கிய படைப்புகள்  உலக இலக்கிய பரப்பிற்குள் அறிமுகமாகவில்லை. அவை பல ஆண்டு காலமாக முறையான ஆங்கில மொழி பெயர்ப்பின்றி  முடங்கி கிடந்துள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் வியந்து போற்றி தங்களது எழுத்துலக போட்டியாளர் என்று வர்ணித்த இவான் கோன்சரோவின் (Ivan Goncharov) படைப்புகள் ஆங்கிலத்தில் நூறு வருடத்திற்கு பிறகு தற்போது தான் நல்ல மொழிபெயர்ப்பில் …

சோம்பல் நாயகன் Read More »

கீயிங்கே வனத் திருடன்

              செல்மா லாகெர்லெவின் தேவமலர் ஒரு குறுநாவல். அதை எனது பதினெட்டாவது வயதில் முதன்முறையாக வாசித்தேன். பின்மதிய நேரமது. வாசிக்கத் துவங்கும் போது வெளியில் இருந்த வேம்பின் காற்று வீசிக் கொண்டிருப்பதை லேசாக உணரமுடிந்தது. நான்கு பக்கங்களை கடந்து போவதற்குள் கதை ஒரு சுழலைப் போல என்னைத் தனக்குள் இழுத்துக் கொண்டு போகத் துவங்கியது. நாவலில் வரும் சம்பவங்களின் பின்னால் ஒரு நிழலைப் போல மெளனமாக சென்று கொண்டிருந்தேன். …

கீயிங்கே வனத் திருடன் Read More »

கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை.

                                               ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவு தமிழில் மற்ற நாடுகளின் இலக்கியங்கள் அறிமுகமாகவில்லை. பிரெஞ்சு இலக்கியத்தின் மாபசானும் விக்டர் க்யூகோவும் எமிலிஜோலாவும் தமிழுக்கு 1950களில் அறிமுகமானார்கள். அந்த நாட்களில் ஜெர்மனிய இலக்கியத்தைப் பொறுத்தவரை அறிமுகமாகியிருந்த ஒரே பெயர் கதே. அதுவும் அவரது பாஸ்டஸ் நாடகம் மட்டுமே.நவீன ஜெர்மானிய இலக்கியம் பற்றிய அறிமுகம் மிகக் குறைவாகவே உள்ளது . நவீன தமிழ் இலக்கியத்தின் ஊடாக அறிமுகமான முக்கிய ஜெர்மானிய எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா …

கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை. Read More »

எழுத்தின் அடையாளம்.

            கோவில்பட்டியிலிருந்து ஏழுகிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இடைசெவல் கிராமம். கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சிறிய கிராமம். கரிசல் பூமி. இந்தச் சிற்றூரில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, இசைக்கற்று, தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு எழுத்தாளர்களாகி, இருவருமே சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும்.இப்படி ஒரே கிராமத்தைச் சேர்ந்த, ஒன்றாக வளர்ந்த இரண்டு நண்பர்கள் வேறு எந்த மொழியிலும் சாகித்ய அகாதமி …

எழுத்தின் அடையாளம். Read More »

தேவதச்சனின் கவியுலகம்

கவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, சாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறதுகவிஞன் கவிதையின் வழியாக உலகை ஒன்றிணைக்கவும் சிதறடிக்கவே ஒரே நேரத்தில் விரும்புகிறான். காட்சிகளையும் சப்தத்தையும் படிமங்களையும் கொண்டு உலகின் மீதான தனது வேட்டையை நிகழ்த்துகிறான். கதையாசிரியனைப் போல அவன் சம்பவங்களின் மீதும், சம்பவங்களை …

தேவதச்சனின் கவியுலகம் Read More »

ஷேக்ஸ்பியரின் நிழலில்

All men who repeat one line of Shakespeare are William Shakespeare. – Borges ஒரு எளிய வாசகன் ஷேக்ஸ்பியரை அணுகும்போது அவன் முன்பாக எண்ணிக்கையற்ற கேள்விகள் தோன்றுகின்றன. ஷேக்ஸ்பியர் என்பவர் யார்? அவரது முக்கிய நாடகங்கள் எவை? அந்த நாடகங்களை எப்படி நிகழ்த்தினார்கள்? அவரது வாழ்வுக்குறிப்புகள் நிஜமானவையா? ஷேக்ஸ்பியர் நாடகங்களின் பின்புலம் என்ன? அவரது சமகால அரசியல் கலாச்சார சூழல்கள் எப்படியிருந்தது? ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எப்படி எதிர் கொள்ளபட்டன? எதற்காக நாம் ஷேக்ஸ்பியரை …

ஷேக்ஸ்பியரின் நிழலில் Read More »

நெடுந்தனிமை

புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது என்பார்கள். இந்த இரண்டு மரங்களின் புகைப்படங்களும் எனக்கு உலகின் தொன்மையை, தனிமையை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.இரண்டும் சாதாரணமான மரங்கள் அல்ல. தன்னளவில் மிகத் தனிமையான மரங்கள். இதைப்போல இன்னொரு மரம் உலகில் இல்லை என்பதே இதன் சிறப்பு. அப்படி என்ன இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள். ஒன்று ஜெனரல் ஷெர்மான் எனப்படும் உலகிலே மிக வயதான மரம். இதன் வயது 2200 வருசங்களுக்கும் மேல் என்று சொல்கிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா …

நெடுந்தனிமை Read More »

இரண்டு குறுங்கதைகள்

மஞ்சள் கொக்கு பல மாதங்களாக வேலையற்றுப்போனதால் சகாதேவன் மிகுந்த மனச்சோர்வு கொண்டிருந்தான். நண்பர்களும் உறவும் கசந்து போயிருந்தார்கள். வெளிஉலகின் இரைச்சலும் பரபரப்பும் அவனைத்; தொந்தரவு செய்தது. சாப்பிடுவதற்கு கூட அவன் தயக்கம் கொள்ளத்; துவங்கினான். உலகின் மீது தீராத வன்மமும் ஆத்திரமும் மட்டுமே அவனுக்குள் இருந்தது. யாரையும் பார்க்கப் பிடிக்காமல் அறைக்கதவை சாத்திக் கொண்டு செய்வதறியாமல் தன்னிடமிருந்த தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து விளையாட்டாக உரசி உரசி போட்டபடியே இருந்தான். அது ஒன்று தான் அவனது ஒரே பொழுது …

இரண்டு குறுங்கதைகள் Read More »

இலக்கிய வேதாளம்

எழுதத் துவங்கிய நாள் முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நானே நிறையக் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன். வெற்றிகரமாக ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்த முடிந்த ஒருவரால் வாழ்வில் எதையும் சாதித்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அந்த அளவு இலக்கியக் கூட்டம் நடத்துவது சள்ளையான பிரச்சனைகளும் மனவெறுமையும் ஏற்படுத்திவிடக்கூடியது. சில வருடங்களின் முன்பாக திண்டுக்கல்லில் உள்ள தன்னார்வ அமைப்பு லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து பேசுவதற்காக ஒரு முறை என்னை அழைத்திருந்தார்கள்.ஒரு வார …

இலக்கிய வேதாளம் Read More »