காந்தியின் நினைவில்.
தமிழகத்தின் பல இடங்களில் காந்தி வந்த இடம், காந்தி பேசிய மைதானம் என்று உள்ளன. சில ரயில் நிலையங்களில்அப்படிபெயர்பலகைகளைக் கண்டிருக் கிறேன். விருதுநகர் ரயில் நிலையத்தின் வெளியே காந்தி விருதுநகருக்கு வந்த நாளின் நினைவாக ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. காந்தியை பார்த்தவர்கள், காந்திக்காக தன் அணிந்திருந்த நகைகளை கழட்டி தந்தவர்கள் என்று பலரது நினைவுகளை என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். காந்தியின் கையைத் தொட்டவர்கள் கடவுளின் கையைத் தொட்டது போன்ற …