குறுங்கதை

குறுங்கதை 111 ஒற்றைக்கை

முதற்பொய் சொன்ன போது பரமுவின் வயது ஆறு. அப்பா அவனைக் கடைக்குப் போய் தீப்பெட்டி ஒன்று வாங்கி வரச் சொல்லியிருந்தார். ஆனால் அவன் கடைக்குப் போகவில்லை. மாறாக அந்த நாலணாவை கொடுத்துப் பால் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டு விட்டான். வீட்டிற்கு வெறும் கையோடு வந்த போது அப்பா கோவித்துக் கொண்டார். ஒற்றைக்கையுள்ள பிச்சைக்காரன் ஒருவன் தன்னிடமிருந்த காசை பறித்துக் கொண்டான் என்று முதற்பொய்யைச் சொன்னான் பரமு. அப்பா அதை நம்பிவிட்டார். வேறு எதையும் கேட்கவில்லை. இவ்வளவு எளிதானதா …

குறுங்கதை 111 ஒற்றைக்கை Read More »

குறுங்கதை 110 நின்றபடி உறங்குபவர்

தங்கதுரைக்கு அப்படி ஒரு பழக்கம் எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் அவர் வீட்டில் நின்றபடியே உறங்கும் பழக்கம் கொண்டிருந்தார். ஒரு மனிதரால் எப்படி நின்றபடி உறங்க முடியும் என வியப்பாக இருக்கும். ஆனால் தங்கதுரை நின்றபடியே தான் உறங்கினார். ஆழ்ந்த தூக்கத்தில் கிழே விழுந்துவிடுவார் என்று தங்கதுரையின் மனைவி பயந்திருக்கிறாள். ஆனால் ஒரு நாள் கூட உறக்கத்தில் தடுமாறி விழவில்லை. தங்கதுரை ஏன் நின்றபடி உறங்குகிறார் என அவரிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் சொன்னதில்லை. …

குறுங்கதை 110 நின்றபடி உறங்குபவர் Read More »

குறுங்கதை 109 பொம்மைக் கல்யாணம்

மொட்டை மாடியில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து பொம்மைக் கல்யாணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையாக இருந்த பொம்மையை ஒரு சிறுவன் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தான். அது ஒரு சூப்பர்மேன் பொம்மை. மணமகளாக மரப்பாச்சியைக் கொண்டு வந்தவள் வேறு ஒரு சிறுமி. மணமகளை அலங்கரிக்கிறோம் என இரண்டு சிறுமிகள் பிளாஸ்டிக் பூக்களை அதன் தலையில் சொருகினார்கள். மணமகனுக்குக் குதிரை வேண்டும் என ஒரு சிறுவன் தேடி அலைந்து தெருமுனையிலிருந்த ஒரு சிறுவன் வைத்திருந்த பிளாஸ்டிக் குதிரை ஒன்றை …

குறுங்கதை 109 பொம்மைக் கல்யாணம் Read More »

குறுங்கதை 108 பாடும் சுவர்கள்

சாமர்கண்டிற்குப் போகும் வழியில் இருந்த  மலையில் பாதி கட்டிமுடிக்கபடாத சுற்றுசுவர் ஒன்றிருந்தது. சீனப்பெருஞ்சுவர் போல கட்ட வேண்டும் என ஆசைப்பட்ட மன்னர் பணி துவங்கிய சில வாரங்களிலே இறந்துவிட்டதால் அந்தச் சுவர்கள் முடிக்கபடவில்லை என்றார்கள். பதினாறு அடி உயரத்தில் பத்தடி அகலத்தில் அமைக்கபட்டிருந்த அந்த சுவர் மலைப்பாம்பு ஒன்று படுத்துக்கிடப்பது போலிருந்தது. அந்தச் சுவருக்கு ஒரு விசித்திரமிருந்தது. அது சிறுவர்களைக் கண்டால் பாடத்துவங்கியது. பாடும் சுவரைக் காணுவதற்காக யாத்ரீகர்கள் வருகை அதிகமிருந்தது. பெரும்பான்மைப் பயணிகள் தங்களுடன் குழந்தைகளை …

குறுங்கதை 108 பாடும் சுவர்கள் Read More »

குறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி

டோக்கியோ செல்லும் விமானத்தில் ராகேஷின் அடுத்த இருக்கையில் அந்த அழகி அமர்ந்திருந்தாள். பச்சை நிறமான கூந்தல். இயற்கையான கூந்தல் அப்படியிருக்காது தானே. அவள் ஏதோ செயற்கை வண்ணம் பூசியிருந்தாள். விலை உயர்ந்த கூலிங்கிளாஸ் அணிந்திருந்தாள். மெலிதான உதட்டுச்சாயம். கூடைப்பெண் வீராங்கனை போன்ற உடலமைப்பு. உயரம். கறுப்பு நிற உடை அணிந்திருந்தாள். கைவிரலில் பாம்பு மோதிரம் அணிந்திருந்தது விசித்திரமாக இருந்தது. அவள் பூசியிருந்த பெர்ப்யூம் விமானம் முழுவதையும் வாசனை கொள்ளச் செய்வது போலிருந்தது. அவளுடன் என்ன பேசுவது எனத் …

குறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி Read More »

குறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்

நூறு வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறிய ஊராகயிருந்தது. காரில் வந்து இறங்கிய அவர்களைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் வேடிக்கை பார்த்தார்கள். அதில் ஒரு சிறுவனை அழைத்து கந்தசாமி வேணாங்குளம் எங்கேயிருக்கிறது எனக்கேட்டார். அந்த சிறுவன் பரிகாரமா எனக் கேலியான குரலில் கேட்டபடியே தெற்கே கையை காட்டினான். காரிலிருந்து கந்தசாமியின் மனைவியும் அவரது ஒரே மகளும் பரிகாரம் செய்யச் சொல்லி அழைத்து வந்த ஜோசியரும் இறங்கினார்கள்.  ஜோசியர் அவிழ்ந்த வேஷ்டியை இறுக்கிக் கட்டியபடியே சொன்னார். ரொம்ப பவர்புல்லா …

குறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள் Read More »

குறுங்கதை 105 அரைநாள் மனுஷி

தாமோதரன் இரும்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அன்றாடம் இரவு வீட்டின் கதவைப்பூட்டுவதும் காலையில் கதவைத் திறந்துவிடுவதும் அவரது வேலை. வேறு யாரும் கதவைப்பூட்டவோ திறக்கவோ செய்யக்கூடாது. எத்தனை மணி ஆனாலும் அவர் தான் வீட்டுக்கதவைப் பூட்டுவார். அது போலவே காலையில் அவர் எழுந்து கொள்ளும் வரை அவரது மனைவியோ பிள்ளைகளோ கதவைத் திறந்து வெளியே போக முடியாது.  நாலு மணிக்கு கண்விழித்தாலும் அமுதா அவர் எழுந்து கதவைத் திறக்கும் போது தான் வாசற்தெளிக்கப் போவாள். …

குறுங்கதை 105 அரைநாள் மனுஷி Read More »

குறுங்கதை 104 சதி

தன்னைக் கொல்ல தனது பிள்ளைகளே சதி செய்கிறார்கள் என்பதை டெல்லி சுல்தான் அறிந்திருந்தார். ஆகவே பிள்ளைகள் எவரும் தன்னை நேரில் சந்திக்க வருவதைத் தடுத்து நிறுத்தியிருந்தார். அரண்மனையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள். விஸ்வாசமான பாதுகாவலர்கள் மட்டுமே உடனிருந்தார்கள். தனது மனைவியர் மீதும் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆகவே அவர்களைக் கோடைகால அரண்மனைக்கு அனுப்பி வைத்துவிட்டார். உணவில் விஷம் கலந்துவிடக்கூடுமோ எனப்பயந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். மூன்று மருத்துவர்கள் அவரது உடல்நிலையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை …

குறுங்கதை 104 சதி Read More »

குறுங்கதை 103 ஒரேயொரு கவிதை

கேதரின் எழுதிய முதற்கவிதை அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணையாழி இதழில் வெளியாகியிருந்தது. அவளது அப்பா தான் கவிதையைத் தபாலில் கணையாழிக்கு அனுப்பி வைத்தவர். அது கூட அவளுக்குத் தெரியாது. ஒரு நாள் தபாலில் கணையாழி இதழ் வீட்டிற்கு வந்த போது அப்பா அதைப் பிரித்து பார்த்து கேதரின் கவிதை வந்துள்ள சந்தோஷம் மிகுதியால் அவள் படிக்கும் பள்ளிக்கே சென்றார். அப்பா ஏன் திடீரென பள்ளிக்கு வந்திருக்கிறார் எனப்புரியாமல் கேதரின் அவரைத் தேடி ஆபீஸ் ரூமிற்குப் போனபோது அப்பா ஒரு சாக்லெட்டை அவளிடம்  கொடுத்து உன் கவிதை கணையாழியிலே வந்துருக்கு என்றார். அவளால் நம்பமுடியவில்லை. நான் அனுப்பவேயில்லைப்பா என்றாள். நான் தான்மா அனுப்பி வைச்சேன் எனச் சிரித்தார். அவளை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் …

குறுங்கதை 103 ஒரேயொரு கவிதை Read More »

குறுங்கதை 102 கவிதையின் வரவேற்பரை

கவிதையின் வரவேற்பரை‌ மிகவும் சிறியது. அதில் எப்போதும் சிலர் காத்துக் கொண்டிருந்தார்கள். எதற்காக. யாரைக் காண எனத் தெரியவில்லை.‌ஆனால் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஒருவன் சொன்னான் கவிதையில் தோன்றும் சூரியனும் நிலவும் மறைவதேயில்லை. அதைக் காணவே காத்திருக்கிறேன். மற்றவன் சொன்னான் கவிதையினுள் பால்யத்தின் வெண் கடல் இருக்கிறது அதை தேடி போகவே வந்திருக்கிறேன். அடுத்தவன் சொன்னான் கவிதையின் வழியே ரகசிய உலகிற்கு போகமுடியும் என்கிறார்களே அதற்கு தான் காத்திருக்கிறேன். நான்காம் ஆள் சொன்னான் கவிதையினுள் பெண் பறக்கும் உடல் …

குறுங்கதை 102 கவிதையின் வரவேற்பரை Read More »