குறுங்கதை 111 ஒற்றைக்கை
முதற்பொய் சொன்ன போது பரமுவின் வயது ஆறு. அப்பா அவனைக் கடைக்குப் போய் தீப்பெட்டி ஒன்று வாங்கி வரச் சொல்லியிருந்தார். ஆனால் அவன் கடைக்குப் போகவில்லை. மாறாக அந்த நாலணாவை கொடுத்துப் பால் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டு விட்டான். வீட்டிற்கு வெறும் கையோடு வந்த போது அப்பா கோவித்துக் கொண்டார். ஒற்றைக்கையுள்ள பிச்சைக்காரன் ஒருவன் தன்னிடமிருந்த காசை பறித்துக் கொண்டான் என்று முதற்பொய்யைச் சொன்னான் பரமு. அப்பா அதை நம்பிவிட்டார். வேறு எதையும் கேட்கவில்லை. இவ்வளவு எளிதானதா …