குறுங்கதை 118 கல்லின் குழந்தைகள்
ஒரு பாறாங்கல் தன்னை விட்டுப் பிரிந்து போன தனது குழந்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது. கல்லின் குழந்தைகளுக்கு என்ன அடையாளம் எனக்கேட்டது ஒரு புறா. “என்னைப் போலதானிருக்கும். ஆனால் எங்கேயிருக்கிறார்கள் எனத் தெரியாது. மண்ணில் புதையுண்டு போயிருக்கலாம். கட்டிடம் கட்டும் பணியினுள் கலந்துவிட்டிருக்கலாம். அல்லது எவரோ கோபத்தில் அதை வீசி எறிந்து ஆயுதமாக்கியிருக்கலாம்“ என்றது பாறாங்கல் “அப்படியானால் உன் பிள்ளைகளைக் கண்டுபிடிப்பது கடினம்“ என்றது புறா. பாறாங்கல் தன் பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்தது. கண்ணில்பட்ட கற்கள் …