ஆளுமை

காந்தியும் சாப்ளினும்

வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது, இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க …

காந்தியும் சாப்ளினும் Read More »

பவா கதை சொல்கிறார்

பவா செல்லத்துரை என்றொரு கதைசொல்லி ஆவணப்படத்தைப் பார்த்தேன் ,பவாவோடு இருபது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் படம் பார்க்கும் போது, அவர் கூடவே இருந்து கதை கேட்பது போல இயல்பாக, நேர்த்தியாக, உணர்ச்சிபூர்வமாக இப்படம் உருவாக்கபட்டுள்ளது, சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர், கதை சொல்லி, இலக்கிய இரவுகளை உருவாக்கியவர், முற்றம், டயலாக் போன்ற இலக்கிய அமைப்புகளை உருவாக்கி நடத்திவருபவர், பதிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் பவா செல்லத்துரை இந்த ஆவணப்படம் பவாவின் கதை …

பவா கதை சொல்கிறார் Read More »

தாயின் குரல்

காமராஜர் முதல்வராக இருந்த சமயம் அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார். (2.7.1961) இணையத்தில் மறுபிரசுரம் கண்ட அந்த இணைப்பை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார், அதன் மீள்பதிவு இது ••• விருதுநகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது. அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் …

தாயின் குரல் Read More »

பாராட்டிற்குரியவர்கள்

கடந்த ஒரு வாரத்தின் முன்பாக மதுரையில் நடைபெற்ற விருட்சத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது குறித்து நண்பர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தார்கள், நானும் அதில் கலந்து கொள்ள விரும்பியிருந்தேன், ஆனால் வேறு ஒரு முக்கியப்பணியின் காரணமாக சேலம் சென்ற காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்த விருட்சத்திருவிழா  களமாக அமைந்திருந்தது என்று பல பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், இதனை சாத்தியமாக்கிய நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கும் அவரது குழுவிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்த இந்த …

பாராட்டிற்குரியவர்கள் Read More »

பேட்ரிக் ரோசாரியோ

ரஷ்ய எழுத்தாளர் கொரலங்கோ கண்தெரியாத இசைஞன் என்றொரு குறுநாவலை எழுதியிருக்கிறார், அதில் பார்வையற்ற ஒரு இசைக்கலைஞனின் உலகம் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியான ஒரு அரிய இசைக்கலைஞர் சென்னையிலே வசிக்கிறார், அவரது இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள், மறக்கவே முடியாது என்று இசை ரசிகரான எனது நண்பர் கார்த்திக் ஒரு முறை தெரிவித்தார், பேட்ரிக் அலெக்சாண்டர் ரோசாரியோ. ஒரு அகார்டியன் இசைக்கலைஞர், இவரது இசை நிகழ்ச்சியினை எழுத்தாளர் ஷாஜியின் புத்தக வெளியீட்டு விழாவின் போது ஒரு முறைக் கேட்டேன், …

பேட்ரிக் ரோசாரியோ Read More »

பாரதி எனும் விசித்திரன்

மகாகவி பாரதியாருடன் நேரடியாகப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற 92வயது முதியவரை நேரில் சந்தித்து உரையாடும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, இவர் அம்ஷன் குமார் இயக்கிய சுப்ரமணிய பாரதி ஆவணப்படத்தில் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்போது கல்யாண சுந்தரம் உயிருடன் இல்லை, ஆனால் அவருடன் பேசிய நினைவுகள் அப்படியே பசுமையாக எனக்குள் இருக்கின்றன,  அவரைச் சந்தித்துப் பேசியதை ஆறாம்திணை என்ற இணையதளத்திற்கு ஒரு நேர்காணலாக எழுதித் தந்திருந்தேன், ஹரி கிருஷ்ணா என்ற பெயரில் வெளியாகி …

பாரதி எனும் விசித்திரன் Read More »

ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல்

கணிதம் மற்றும் அறிவியல் ஆளுமைகள் பற்றி நண்பர் பாஸ்கர் லட்சுமண் சிறப்பான கட்டுரைகளை  எழுதிவருகிறார்,  அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதிய இக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று ••• ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் – புள்ளியியல் பகுப்பாய்வின் முன்னோடி பாஸ்கர் லட்சுமண் ஃப்ளோரென்ஸ்  நைட்டிங்கேல் என்றவுடன் பொதுவாக எல்லோர் நினைவில் வருவது “விளக்குடன் ஒரு மங்கை” மற்றும் செவிலியாக அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு. அனேகமாக நாம் அறியாத அவருடைய இந்த புள்ளியில் துறைத் திறமை மீது சிறிது …

ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் Read More »

காந்தியைப் பின்தொடர்வது

இந்த ஆண்டு மகாத்மா காந்தி குறித்து நான்கு விரிவான உரைகளை நிகழ்த்தியிருக்கிறேன்,  மதுரை, திருச்சி, கடலூர், சென்னை ஆகிய நான்கு இடங்களிலும் நான்கு வேறு விதமான தலைப்புகள், அதில் மூன்று கூட்டங்கள் மாணவர்கள் மத்தியில், ஒன்று எனது புத்தக வெளியீட்டுவிழாவில். ஒவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் காந்தியின் குரலை இரண்டு நிமிஷம் ஒலிக்கவிடுவேன், காந்தியை ஒரு புகைப்படமாக, சிலையாக, பிம்பமாகத் தான் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம், அவரது குரலை இந்த தலைமுறையினர் கேட்கவேயில்லை, அதற்காக இரண்டு நிமிஷங்கள் காந்தியின் …

காந்தியைப் பின்தொடர்வது Read More »

சுசீலா ராமன்

சுசீலா ராமன்  எனக்கு விருப்பமான பாடகி, அவரது கிறக்கமூட்டும் குரலுக்கு நிகரேயில்லை,  சுசீலாவின் சால்ட் ரெய்ன் இசைத்தொகுப்பு  அற்புதமானது,  தஞ்சாவூரைப் பூர்வீகமாக கொண்ட சுசீலா பிரிட்டனில் பிறந்தவர், அவரது நான்கு வயதில் பெற்றோர் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள், அங்கு மேற்கத்திய இசையும் கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்டவர் சுசீலா ராமன்,  கல்லூரி நாட்களிலே தனக்காக ஒரு இசைக்குழுவை உருவாக்கி கொண்டு கர்நாடக சஙகீதத்தை ஜாஸ் இசையோடு இணைந்து புதியதொரு இசை எழுச்சியை உருவாக்கினார், இன்று உலகப்புகழ்பெற்ற பாடகியாக சுசீலாராமன் …

சுசீலா ராமன் Read More »

ஜேகே

நேற்று ஜெயகாந்தனின் 78வது பிறந்த நாள், காலையில் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன், வாசகர்கள், நண்பர்கள், இடதுசாரித்தோழர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பலரும் வந்து கொண்டேயிருந்தார்கள். எப்போதுமே ஜெயகாந்தனோடு பேசிக் கொண்டிருப்பது மிகுந்த உத்வேகம் தரக்கூடியது, நேற்றும் அப்படியே இருந்தது, முதுமையின் தளர்ச்சியிருந்த போதும் அவரது தீர்க்கமான பதில்களும், கேலியும் அனைவரையும் உற்சாகமூட்டியது, ஜேகேயின் வீட்டில் அவரது இளையமகள் தீபாவைச் சந்தித்து பேசியது சந்தோஷம் தருவதாக இருந்தது, அவர் வலைப்பதிவுகளில் …

ஜேகே Read More »