படிப்பதற்காகவே வாழ்பவர்
ஒருவன் தனது வாழ்நாளிற்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை என்கிறது சீனப்பழமொழி, இதை உண்மையாக்குவது போல படிப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் 87 வயதான எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், அவரது முழுப்பெயர் சேதுராமலிங்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் இந்த அயராத படிப்பாளியைக் காண்பதற்காக சென்றிருந்தேன், எனது முதல்நாவல் உப பாண்டவத்தை வெளியிடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் நானே அதன் முதற்பதிப்பை வெளியிட்டேன், விருதுநகரில் இருந்த எனது முகவரிக்கு மணிஆர்டர் அனுப்பி புத்தகத்தைப் …