ஆளுமை

சமணச் சிற்பங்கள்

இரா.பானுகுமார், சென்னை இரா. பானுகுமார், சமணச் சிற்பங்கள் குறித்து அருமையான விளக்க கட்டுரையை எழுதியிருக்கிறார்,அவரது வலைத்தளத்தில் சமணம் குறித்து விரிவான கட்டுரைகள் உள்ளன, கட்டுரையின் முக்கியத்துவம் கருதி அதை மீள்பிரசுரம் செய்கிறேன். ••• பல சொற்கள் உணர்த்தாததை ஒரு படம் உணர்த்தும் என்பார்கள். சிற்பங்களும் அவ்வாறே. சமயச் சிற்பங்களும், சித்திரங்களும் அந்தந்த சமயங்களின் பிரதிபலிப்பு என்றால் அதுமிகையாகாது. இந்திய சமய வரலாறும் உணர்த்துவதும் அதுவேயாம். இந்திய வரலாற்றை ஆராயும்போது உருவ வழிபாடு என்பது சிரமண மதங்களிலிருந்தே தொடங்குகிறது. …

சமணச் சிற்பங்கள் Read More »

தியான நடனம்

ருஷ்ய மெய்ஞானியான  குர்ஜீப்பின்(Gurdjieff) இளமைக்காலம் குறித்த Meetings with Remarkable Men படத்தை மூன்று நாட்களுக்கு முன்பாகப் பார்த்தேன், 1979ம் ஆண்டு வெளியான இப்படத்தை பீட்டர்புரூக் இயக்கியிருக்கிறார், இவர் மகாபாரதத்தை நாடகமாகவும் திரைப்படமாகவும் இயக்கியவர், நவீன நாடக உலகில் தனிப்பெரும் ஆளுமை,  குர்ஜீப்பின் தத்துவச் செறிவான நினைவலைகளை பீட்டர்புரூக் ஆழ்ந்து புரிந்து கொண்டு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். குர்ஜீப்பை எனது கல்லூரி நாட்களிலே படித்திருக்கிறேன், கவிஞர் தேவதச்சன் அறிமுகம் செய்து வைத்து Meetings with Remarkable Men நூலை …

தியான நடனம் Read More »

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும்

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரம் திருவண்ணாமலை என்று எப்போதுமே சொல்வேன், அப்படித் திருவண்ணாமலையை ஒரு இலக்கிய சங்கமமாக மாற்றியமைத்தவர் எனதருமை நண்பர் பவா செல்லத்துரை. அவர் மீடியா வாய்ஸ் இதழில் எங்களது நட்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், வாசிக்கையில் மனம் நெகிழ்ந்து போனேன்.  அரஸ் வரைந்துள்ள எனது ஒவியம் மிக துல்லியமாக, சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. எத்தனையோ இரவுகளில் பவா வீட்டுக்கதவை தட்டி அவரது அம்மா சமைத்து தரும் உணவைச் சாப்பிட்டு விடிய விடிய இலக்கியம் பேசியிருக்கிறேன், எனக்கும் …

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும் Read More »

சாரல் விருது

2012ம் ஆண்டுக்கான சாரல் விருது எழுத்தாளர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி தனது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் வழங்குகிறார்கள், விருது வழங்கும் நிகழ்வு ஜனவரியில் சென்னையில் நடைபெற உள்ளது வண்ணதாசன், வண்ணநிலவன் இருவரும் ஒருங்கே விருதுபெறுவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது, இருவருமே என் விருப்பதிற்குரிய எழுத்து ஆளுமைகள் தமிழ் இலக்கியத்தின் மகத்தான இரண்டு கலைஞர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ••

பால் எர்தோ

If there is a God, he’s a great mathematician.  ~Paul Dirac சில விஞ்ஞானப் புத்தகங்கள் மகத்தான நாவல்களை விட ஆழமாக வாழ்வின் தரிசனங்களை நமக்கு நுட்பமாக அறிமுகப்படுத்தி விடுகின்றன,  குறிப்பாக நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் பெயின்மெனைப் பற்றி அப்படியான வியப்பு எப்போதுமே எனக்குண்டு, அவரது உரைகள் தத்துவச் செறிவானவை. பெயின்மேனைப் போலவே அலாதியான மனப்போக்கு கொண்ட  கணித மேதையான பால் எர்தோவின் (Paul Erdos ) வாழ்க்கை வரலாற்றை …

பால் எர்தோ Read More »

நல்லார் ஒருவர்.

அரசுப்பள்ளிகளைப் பற்றி எப்போதுமே நமக்கு இளக்காரமான மனநிலையே இருந்து வருகிறது, ஆனால் நான் அரசுப்பள்ளியில் பயின்றவன் என்ற முறையில் அதன் தரம் மற்றும் குறைபாடுகளை நன்றாக அறிவேன், பெரும்பான்மை தனியார்பள்ளிகள் கல்வியை முழுமையானதொரு வணிகமாக மாற்றியுள்ள சூழலில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியமான ஒன்று. பெரும்பான்மையான எனது பயணங்களில் அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்று அதன் தற்போதைய நிலையைக் கண்டறிந்து வருகிறேன், கற்றுத்தரும் முறை மிகவும் பலவீனமாக உள்ளது என்பதே நான் …

நல்லார் ஒருவர். Read More »

கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது

நேற்று பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனைச் சந்திப்பதற்காக சென்றிருந்தேன், என்னோடு வில்லியனூர் பழநி என்ற நண்பரும் வந்திருந்தார்,  பழநி உற்சாகமான வாசகர், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் வாழ்க்கையைப் பற்றி கவிதை வடிவில் ஒரு நூலை எழுதியிருக்கிறார், கி.ராஜநாராயணன் வீடு விமானநிலையம் செல்லும் சாலையில் உள்ள லாஸ்பேட் ஏரியாவின் அரசுக் குடியிருப்பில் உள்ளது, பைக்கில் அவரது வீட்டை தேடிச் சென்று கொண்டிருந்தோம், மழைக்குப் பிந்திய சாலைகளில்  ஆங்காங்கே நீர்தேங்கியதால் வாகனநெருக்கடி அதிகமாக இருந்தது. முந்திய இரவு நல்ல மழை பெய்திருந்தது, …

கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது Read More »

மகத்தான சந்திப்பு

  ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன், அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன், வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு …

மகத்தான சந்திப்பு Read More »

தலாய் லாமாவின் உரை

எனக்குப் பிடித்தமான தலாய் லாமாவின் உரை, இதைச் சில வருசங்களின் முன்பாக ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார், இன்று வரை அது என் கணிணி முகப்பில் இருந்து கொண்டேயிருக்கிறது •• THE PARADOX OF OUR TIMES-  Dalai Lama we have taller buildings, but shorter tempers Wider freeways, but narrower viewpoints We spend more, but we have less We have bigger houses, but smaller families …

தலாய் லாமாவின் உரை Read More »

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம் இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன் •• …

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம் Read More »