நாவலின் ஒவியம்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை நாவலில் வரும் சுப்புவை படம் வரைந்திருக்கிறார் கோபாலகிருஷ்ணா. ஒரு நாவல் எப்படி எல்லாம் கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு மூன்று இயக்குநர்கள் வேறுவேறு தருணங்களில் தொடர்பு கொண்டார்கள். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. அதற்கான சரியான தருணம் விரைவில் வரக்கூடும் என நம்புகிறேன்

உயிருள்ள பொம்மைகள்

மண் பொம்மை காளிந்தீசரண் பாணிக்ராஹியின் நாவல். ஒரிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவலை ரா. வீழிநாதன் தமிழாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை மூன்றோ நான்கோ ஒரிய நாவல்கள் தான் இதுவரை தமிழில் வந்துள்ளன. ஒரியச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் வெளியாகியுள்ளது. சமகால ஒரிய இலக்கியப் படைப்புகள் அதிகம் தமிழில் வெளியாகவில்லை. ஆங்கிலத்தில் சில வாசிக்கக் கிடைக்கின்றன. ஒரியக் கவிதைகள் பெற்ற கவனத்தை ஒரிய கதைகள் பெறவில்லை என்றே தோன்றுகிறது. காளிந்தி சரண் பாணிகிராஹி …

உயிருள்ள பொம்மைகள் Read More »

தன்னை மறந்தவள்

எமி பிரஸ்டன் நடுத்தர வயது பெண். அவளது கணவர் ஜிம் ஒரு டிம்பர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமணமாகி இருபது ஆண்டுகள் சந்தோஷமான வாழ்க்கையைத் தொடர்கிறாள். பதின்வயதிலுள்ள மகன் பிரைன் பேச்சுப் போட்டியில் ஆர்வம் கொண்டவன். அவர்கள் லண்டனின் சிறிய குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள். ஐம்பதுகளில் கதை நடக்கிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் படம் துவங்குகிறது. எமி பிரஸ்டனுக்கு வானொலியில் இசை கேட்பது பிடித்தமானது. சமையலறையில் உணவு தயாரித்தபடியே சங்கீதம் கேட்கிறாள். வேறு பக்கம் கவனம் திரும்பவே …

தன்னை மறந்தவள் Read More »

தெலுங்கில்

எனது சிற்றிதழ் சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் ஜி. பாலாஜி. நன்றி vaartha.com ஜி. பாலாஜி

இடக்கைக்குள் நீதி

கோபாலகிருஷ்ணன் நீதி என்பது எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக் கட்டியை போல மனிதர்களைக் கொண்டு செல்கிறது. உணவுக்காகவும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மனிதன் அலைவதை போலவே நீதிக்காகவும் மனிதன் காத்திருக்கிறான், போராடுகிறான். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “இடக்கை ” புத்தகம் வாசித்து முடித்ததும் இந்திய வரலாற்றின் மீது படிந்த கறையைத் தொட்டு பார்த்ததைப் போல உணர முடிந்தது. பின்னர்தான் புரிந்தது அது கறையல்ல தழும்புகள் மறைந்து போகாத நினைவுகள். உடலில் காயம் ஏற்பட்டு ஆறிய பின்னர்க் …

இடக்கைக்குள் நீதி Read More »

நினைவில் பறக்கும் காட்டுவாத்துகள்

ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டரின் கவிதை ஒன்றின் வழியே தான் சீனக்கவிஞர் லி சிங்-சாவ் (Li Ch’ing-chao )பற்றி அறிந்து கொண்டேன். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெண்கவியை நினைவு கூர்ந்து மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். காட்டுவாத்துகளுடன் லிசிங் சாவ் பனிக்காலத்தை எதிர் கொண்டதை பற்றிப் பேசும் இந்தக் கவிதையின் வழியே பனிமூட்டத்திற்குள் ஒளிரும் நட்சத்திரம் போல லிசிங் சாவ் அறிமுகமானார். கடந்த சில நாட்களாக லி சிங் சாவோவின் உலகிற்குள் புகை போலச் …

நினைவில் பறக்கும் காட்டுவாத்துகள் Read More »

காந்தியின் நிழலில் – அறிமுகக் கூட்டம்

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டம் சார்பில் எனது காந்தியின் நிழலில் நூல் குறித்து அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முனைவர் ம. பிரேமா அண்ணாமலை உரையாற்றுகிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவினுள் நிகழ்ச்சி நடைபெறுகிறது Google Meet வழியே நேரலையிலும் பங்குபெறலாம். இணைப்பு தொடர்பு எண்கள் 97907408869952952686 நாள்: 09.03.2022 நேரம்: மாலை .6 45

நன்றியுடன்

நேற்றுடன் புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்றது. கடந்த மூன்று நாட்களாகப் பெருந்திரளாகக் கூட்டம். நிறைய இளைஞர்கள். பெண்கள். அவர்கள் பைநிறைய புத்தகங்களுடன் வலம் வருவதைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த ஊரடங்கு வாழ்க்கை அனைவரின் கவனத்தையும் புத்தகங்களின் மீது திருப்பியிருப்பதன் விளைவாகவே இதனைக் கருதுகிறேன். இப்படி ஒரு அறிவுத் திருவிழாவிற்கு அனுமதி தந்து, புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடக்க முதற்காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி புத்தகக் …

நன்றியுடன் Read More »

சாண்டில்யனின் மறுபக்கம்

சாண்டில்யன் தனது சுயசரிதையைச் சிறிய நூலாக எழுதியிருக்கிறார். போராட்டங்கள் என்ற இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் சாண்டில்யன் எழுத்தாளரான விதம் மற்றும் அவரது கல்லூரி நாட்கள். பத்திரிக்கை துறையில் வேலை செய்த அனுபவங்கள். தமிழ், தெலுங்கு படங்களுக்குத் திரைக்கதை எழுதும் போது கிடைத்த அனுபவம். சந்தித்த மனிதர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆங்கிலப்படங்கள் மீது சாண்டில்யனுக்கு இருந்த தீராத ஆசை வியப்பூட்டுகிறது. அந்தக் கால ஆங்கிலப்படங்களைத் தேடித்தேடி …

சாண்டில்யனின் மறுபக்கம் Read More »

சௌமியின் கசப்பு

ஓவியர் கே.விக்னேஷ்வரன். எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உடலின் அலைகள் என்னும் சிறுகதையை வாசித்தேன். மிகவும் அருமை. இக்கதையின் கரு சிறியதுதான், ஆனால் அவர் இந்தக் கதையைக் கையாண்ட விதம் மிகவும் லாபகமானது. இக்கதையில் ஒரு மனிதன் தொழிற்சாலையில் பணி புரிகிறான். திருமணமாகாதவன். மதுரையைச் சார்ந்தவன் பணி நிமித்தம் காரணமாக வெளிமாநிலத்தில் பணிபுரிகிறான். எப்போது தனது சொந்த ஊருக்குப் பணியிடைமாற்றம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சமயத்தில் ரயில் பயணம் செய்யும்போது தனக்கு எதிரே உள்ள …

சௌமியின் கசப்பு Read More »