ஆங்கிலத் தொகுப்பில்

Aleph Book Company தமிழின் முப்பது சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து THE GREATEST TAMIL STORIES EVER TOLD என ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் சுஜாதா விஜயராகவன் மற்றும் மினி கிருஷ்ணன் இந்தத் தொகுப்பினைத் தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பில் எனது சிறுகதை புறாப்பித்து இடம்பெற்றுள்ளது.

பனியில் மறையாத காலடிகள்.

ஜான் ஃபோர்டின் புகழ்பெற்ற திரைப்படமான தி சர்ச்சர்ஸ் பாதிப்பில் அதே கதையினைத் துருவப்பகுதியில் நடப்பதாகப் புதிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். Maliglutit (searchers) எனும் இப்படத்தை இயக்கியவர் சகரியாஸ் குனுக். 2016ல் வெளியாகியிருக்கிறது. உலகின் முதற்குடிமக்கள் என்று அழைக்கப்படும் இனூட் பூர்வகுடிகள் துருவப்பகுதியில் வாழுகிறார்கள். உறைபனிப் பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள். உறைபனியில் பயணம் செய்வதற்கு நாய்களால் இழுக்கப்படும் வண்டியைப் பயன்படுத்துகிறார்கள். இப்படம் இனூட் குழுக்களுக்குள் உள்ள சண்டை, மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவு …

பனியில் மறையாத காலடிகள். Read More »

தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு

 ( ‘உப பாண்டவம்’ நாவலை முன்வைத்து) முனைவர் ப. சரவணன்       எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நாவல்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமான நாவல் ‘உப பாண்டவம்’. அதன் கதைக்களம் மகாபாரதம். இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகாபாரதம் பற்றிய அடிப்படைப் புரிதல் இருக்கும். காரணம், மகாபாரதம் இந்தியத் தொல் மரபில் நீக்கமுடியாத ஓர் அடுக்கு அடித்தளம். ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களையும் நரம்பில் கோத்த மணிகளாக மாற்றி, மணிமாலையாக உருவாக்கி, ஒளிரச் செய்வது  மகாபாரதம் அன்றி வேறேது? அத்தகைய இந்தியக் …

தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு Read More »

மூன்றாம் உலகிலிருந்து வருகிறவன்

நாகிப் மாஃபௌஸ் (நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி) தமிழில் சா.தேவதாஸ். என் பெயர் இப்பரிசிற்காக அறிவிக்கப்பட்டவுடன், அந்த இடம் சட்டென்று நிசப்தமானதாகவும், பலரும் நான் யார் என்பது அறியாமல் வியந்ததாகவும் ஓர் அயல் நாட்டு நிருபர், கெய்ரோவில் என்னிடம் கூறினார். எனவே இயன்றவரையில் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன். சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் இருவேறு நாகரிகங்களுக்கிடையே நிகழ்ந்த ஒரு சந்தோஷமான திருமணத்தின் மூலம் பிறந்தவன் நான். இவற்றில் முதல் நாகரிகத்திற்கு ஏழாயிரம் வயதாகிறது. அது …

மூன்றாம் உலகிலிருந்து வருகிறவன் Read More »

கருத்தரங்கில்

நேற்று நடைபெற்ற எனது படைப்புகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். காலை பத்து மணிக்குத் துவங்கிய நிகழ்வு நிறைவுபெற இரவு எட்டுமணியாகிவிட்டது. எனது படைப்புகள் குறித்துப் பேசியவர்கள் ஆழ்ந்து படித்துச் சிறப்பாக உரையாற்றினார்கள். படைப்பின் நுண்மைகளை அவர்கள் எடுத்துக்காட்டிய விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. காலை அமர்வில் பேசிய நீதி நாயகம் சந்துரு அவர்கள் இடக்கை நாவல் பற்றிச் சிறப்பாகப் பேசினார். எனது ஆசான் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எனது படைப்புகள் மற்றும் …

கருத்தரங்கில் Read More »

ஒரு நாள் கருத்தரங்கம்

நாளை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து நற்றுணை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கல்விப்புலங்களில் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்குகள் நிறையவே நடந்துள்ளன. எனது படைப்புகளை ஆராய்ந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆறு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பொதுத்தளத்திலும் நிறைய விமர்சனக் …

ஒரு நாள் கருத்தரங்கம் Read More »

கலைஞர் பொற்கிழி விருது

நாளை (13/11/2021) மாலை பபாசி வழங்கும் கலைஞர் பொற்கிழி விருது விழா நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு விருதுவிழா நடைபெறாத காரணத்தால் 2020 மற்றும் 2021ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு இணைந்து நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 2021ம் ஆண்டிற்கான உரைநடை பிரிவில் விருது பெறுகிறேன் நாள் 13.11.2021நிகழ்வு நடைபெறும் இடம் வாணி மஹால்103 ஜி.என். செட்டி சாலை தி.நகர். சென்னை 17நேரம் மாலை 6 மணி இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

அர்த்தமற்ற விசாரணை

உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் வாழ்க்கையினையும் அவரது புகழ்பெற்ற லிஹாஃப் சிறுகதையினையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது லிஹாஃப் திரைப்படம். இதை இயக்கியவர் ரஹத் ஹஸ்மி. சர்ச்சைக்குரிய இந்தக் கதையை ஆபாசம் எனக் கருதி இஸ்மத் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. இதற்காக அவர் லாஹுர் நீதிமன்றத்திற்குச் சென்று வந்தார். சதத் ஹசன் மண்டோ மீதும் இது போன்ற ஆபாச வழக்குத் தொடரப்பட்ட காரணத்தால் அவர்கள் இணைந்து லாஹுர் சென்று வந்தார்கள். இந்தப் படம் இஸ்மத் வீட்டிற்குப் போலீஸ் வருவதில் …

அர்த்தமற்ற விசாரணை Read More »

கிழவனும் இளைஞனும்

பழமையான சீனக்கதை ஒன்றை வாசித்தேன் மழைக்காலம் ஒன்றில் குடையோடு ஒரு இளைஞன் ஆற்றுப்பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அந்தப் பாலத்திலிருந்த ஒரு பிச்சைக்காரக் கிழவன் அவனைக் கண்டதும் தனது இடதுகாலில் அணிந்திருந்த செருப்பை ஆற்றில் தூக்கிவீசிவிட்டு அதை எடுத்துத் தரும்படி கேட்கிறான் .இளைஞனும் கிழவன் மீது பரிதாபம் கொண்டு ஆற்றில் குதித்துச் செருப்பை மீட்டுக் கொண்டுவந்து கொடுக்கிறான். இப்போது பிச்சைக்காரன் புன்சிரிப்புடன் தனது வலதுகால் செருப்பை ஆற்றில் வீசி எறிந்து அதை எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறான். …

கிழவனும் இளைஞனும் Read More »

மார்க்வெஸின் கடைசி நாட்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைவிற்குப் பிறகு அவரது கடைசி நாட்களைப் பற்றியும், குடும்பத்தினர் அதை எதிர்கொண்டவிதம் பற்றியும் நினைவு கூர்ந்து அவரது மகன் ரோட்ரிகோ கார்சியா A FAREWELL TO GABO AND MERCEDES என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ரோட்ரிகோ கார்சியா ஹாலிவுட்டில் திரைப்பட இயக்குநராக உள்ளார் இந்நூல் மார்க்வெஸ் மற்றும் அவரது மனைவியின் மறைவைப் பற்றிய மகனின் துயர நினைவுகளைப் பேசுகிறது முதுமையில் மார்க்வெஸ் மெல்லத் தனது நினைவாற்றலை …

மார்க்வெஸின் கடைசி நாட்கள். Read More »