உலகம் அறியாத காதல்.

ரோம் நகரிலுள்ள பழைய குடியிருப்பு ஒன்றில் மேல் மாடியில் வசிக்கிறாள் அன்டோனியெட்டா. அவள் ஆறு பிள்ளைகளின் தாய். அவளது கணவன் இமானுவேல் முசோலினியின் தீவிர விசுவாசி. கட்சி உறுப்பினர். 1930 களில் ரோமில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் அவர்கள் வாழுகிறார்கள். ஒரு நாள் காலை அவள் படுக்கையிலிருந்து எழுந்து தனக்கான காபியைத் தயாரித்து அருந்திக் கொண்டு பிள்ளைகள் ஒவ்வொருவராக எழுப்பிவிடுகிறாள். படுக்கையிலிருந்த கணவனை எழுப்பி நேரமாகிவிட்டது என்று துரத்துகிறாள். அவளது காபியின் …

உலகம் அறியாத காதல். Read More »

விட்டல்ராவின் கலைப் பார்வைகள்

கலை இலக்கியச் சங்கதிகள் என்ற விட்டல்ராவ் எழுதிய புத்தகத்தை வாசித்தேன். விட்டல் ராவ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், ஓவியர். கலைவிமர்சகர். பெங்களூரில் வசிக்கும் விட்டல்ராவ் சென்னை ஒவியக்கல்லூரியில் பயின்றவர். உலகச் சினிமா குறித்து ஆழ்ந்து அறிந்தவர். தேர்ந்த இசை ரசிகர். வரலாற்றின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட இவர் தமிழகத்தின் கோட்டைகள் குறித்துச் சிறந்த நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். இவரது போக்கிடம், நதிமூலம் காலவெளி வண்ண முகங்கள் போன்ற நாவல்கள் தனித்துவமிக்கவை. . மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைத் …

விட்டல்ராவின் கலைப் பார்வைகள் Read More »

கன்னடக் கதைகள்

எதிர் வெளியீடு கொண்டு வந்துள்ள வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை என்ற சமகாலக் கன்னடச்சிறுகதைகளின் தொகுப்பை வாசித்தேன். கே. நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். மலையாளச் சிறுகதைகள் அளவிற்குக் கன்னடச்சிறுகதைகள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கிலத்தின் வழியே தேடி வாசிக்க ஒன்றிரண்டு புத்தகங்கள் கிடைக்கின்றன. இந்தச் சூழலில் சமகாலக் கன்னடக்கதைகள் எப்படியிருக்கின்றன என்று அறிந்து கொள்வதற்கு இது சிறந்த அறிமுகத் தொகுப்பு. தமிழ் கதைகளோடு ஒப்பிடும் போது இந்தக் கதைகளின் களன்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகின்றன. பெரும்பாலும் யதார்த்த …

கன்னடக் கதைகள் Read More »

கணேஷ் பாபு

சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு தீவிர இலக்கிய வாசகர். சமகால இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். எனது படைப்புகளை தொடர்ந்து படித்து விமர்சனம் எழுதி வருபவர். 2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் இவர் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். சிங்கப்பூரில் நடைபெற்ற சிறுகதை பயிலரங்கில் சிறந்த கதையாக இவரது கதை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது சமீபத்தில் அரூ இணைய இதழுக்காகக் கணேஷ் பாபு என்னை நேர்காணல் செய்தார். மிக விரிவான நேர்காணலிது. கேள்விகளை அனுப்பி வைக்கும்படி …

கணேஷ் பாபு Read More »

சிறப்பு சலுகை

ஊரடங்கு காரணமாக ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த தேசாந்திரி பதிப்பகம் நேற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது. ஆன் லைன் விற்பனையும் உண்டு. இந்த மாதம் முழுவதும் சிறப்பு சலுகையாக இருபது சதவீதத் தள்ளுபடியில் அனைத்து நூல்களையும் பெற்றுக் கொள்ளலாம்

கதையாடல்

புகழ்பெற்ற எழுத்தாளர்கள். அறிஞர்கள். திரைக்கலைஞர்களின் சிறந்த நேர்காணல்களைக் கொண்ட யூடியூப் சேனல் Web of Stories. இதில் இரண்டு நிமிஷங்கள் முதல் ஐந்து நிமிஷங்கள் வரை சிறுசிறு பகுதியாக நேர்காணலை எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் சேனலில் பிரான்சின் முக்கிய எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமானJean-Claude Carrière நேர்காணல் உள்ளது. அவசியம் காண வேண்டிய நேர்காணலிது. Jean-Claude Carrière – A house with a history

ஓநாயின் பயணம்

மாங்கா எனப்படும் ஜப்பானிய கிராபிக் நாவல்களை விரும்பி வாசிப்பேன். அதன் சித்திரங்களும் கதை சொல்லும் முறையும் வியப்பூட்டக்கூடியவை. இன்றைய ஹாலிவுட் சினிமாவில் இதன் தாக்கம் அதிகமிருக்கிறது. குறிப்பாக வித்தியாசமான கேமிரா கோணங்களை இந்த வகை மாங்காவிலிருந்தே உருவாக்குகிறார்கள். படக்கதை என்ற சம்பிரதாயமான வடிவத்தின் பெரிய பாய்ச்சலாகவே இது போன்ற சித்திரக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. Lone Wolf and Cub இந்த வரிசையில் மிக முக்கியமானது. இதன் 28 தொகுதிகளையும் வைத்திருக்கிறேன். இந்தத் தொகுதியிலிருந்து ஆறு திரைப்படங்கள் மற்றும் ஒரு …

ஓநாயின் பயணம் Read More »

துணையெழுத்து – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை புனைவுக்கும் உண்மைக்குமான ‘இடைவெளி’, ‘தொலைவு’, ‘நெருக்கம்’ என்பன, நமக்கும் வாழ்வுக்குமான தொலைவினை ஒத்தவைதான். ‘நமக்கும் வாழ்வுக்குமான இடைவெளி’ என்பது, மிகவும் நெருங்கியிருக்கும் வெகுதொலைவுதானே! புனைவும் உண்மையும் ஒன்றையொன்று தழுவும்போதும் நாமும் வாழ்வும் ஒன்றாகிப் போகிறோம். நாமே பெரும்புனைவுதான்!. வாழ்வே பேருண்மைதான்!. ‘நமக்கும் வாழ்க்கைக்குமான உறவு’ என்பது, புனைவும் உண்மையும் கலந்த கட்டுரைக்கு நிகராது. தான்  பெற்ற ஆகச்சிறந்த அனுபவங்களையும் பிறரின் வாழ்க்கையின் வழியாகத் தான் கண்டுணர்ந்த ‘வாழ்வியல் சிடுக்கு’களையும் இணைத்துத் தனக்கேயுரிய …

துணையெழுத்து – வாசிப்பனுபவம் Read More »

கடற்கரைக் காற்று

மலையாள எழுத்தாளர் சி.வி. பாலகிருஷ்ணன் தனக்குப் பிடித்தமான சிறந்த திரைப்படங்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அது சினிமாவின் இடங்கள் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இதனைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் ஸ்ரீபதிபத்மநாபா. சுவாரஸ்யமான புத்தகம். அதில் வரும் ஒரு கட்டுரையின் சிறுபகுதியை மீள்பிரசுரம் செய்கிறேன் •• கடற்கரைக் காற்று சி.வி. பாலகிருஷ்ணன் தமிழில்:  ஸ்ரீபதிபத்மநாபா •• ஒரு பத்திரிகையாளர் நடிகை ஷீலாவிடம் செம்மீன் படத்தின் கருத்தம்மா கதாபாத்திரத்தைக் குறித்துக் கேட்டார். ஷீலா இவ்வாறு பதில் சொன்னார்: ”அது …

கடற்கரைக் காற்று Read More »

இரண்டு ஜப்பானியர்கள்

புதிய சிறுகதை அந்த இரண்டு ஜப்பானியர்களும் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்திருந்தார்கள். கியாத்தோவிலிருந்து இந்தியாவின் தென்கோடியிலிருந்த கொடைக்கானல் மலைக்கு வந்து சேர்ந்த தூரமது. உடல்வாகை வைத்து ஜப்பானியர்களின் வயதைக் கண்டறிய முடியாது. முகத்திலும் பெரிய மாற்றமிருக்காது. முழுவதுமாகத் தலைநரைத்த ஜப்பானியர் ஒருவரைக் கூட நந்தகுமார் கண்டதில்லை. கொடைக்கானலுக்கு வரும் வெள்ளைக்காரர்களில் ஒரு சிலரே வசதியானவர்கள். மற்றவர்கள் அந்த நாடுகளில் நடுத்தர வருமானமுள்ள தொழிலாளர்களாகவோ, அலுவலகப் பணியாளர்களாகவே இருப்பவர்கள். அபூர்வமாக ஒன்றிரண்டு இசைக்கலைஞர்கள், புகைப்படக்கலைஞர்கள் வருவதுண்டு. இதுவரை …

இரண்டு ஜப்பானியர்கள் Read More »