பொங்கல் புத்தகத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள டிரேட் சென்டர் எதிரில் PMAC EXPO HALLல் ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 5 தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இந்தக் கண்காட்சி செயல்படும் வழக்கமாக நடைபெறும் நந்தனம் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு தாமதமாகிற காரணத்தால் சிறிய புத்தகக் கண்காட்சியினை சென்னை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் ஐம்பது …

பொங்கல் புத்தகத் திருவிழா Read More »

துணையெழுத்து சிறப்பு பதிப்பு

ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ள துணையெழுத்து ,சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியிடப்பட்டிருக்கிறது இதன் விலை ரூ 475 தேசாந்திரி பதிப்பகம் D1, Gangai apartments, 110,Sathya garden, Saligramam,Chennai – 600 093CALL US(044) 236 44947(+91) 9600034659desanthiripathippagam@gmail.com ஆன்லைனில் வாங்க : https://www.desanthiri.com/

கர்னலின் நாற்காலி சிறப்பு பதிப்பு

கர்னலின் நாற்காலி -குறுங்கதைகளின் தொகுப்பு சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியாகியுள்ளது இதன் விலை ரூ 470. தேசாந்திரி பதிப்பகம் D1, Gangai apartments, 110,Sathya garden, Saligramam,Chennai – 600 093CALL US(044) 236 44947(+91) 9600034659desanthiripathippagam@gmail.com ஆன்லைனில் வாங்க : https://www.desanthiri.com/

ஏழாம் நாள் பேருரை- இதாலோ கால்வினோ

உலக இலக்கியம் குறித்த பேருரைகளின் ஏழாம் நாளில் இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் குறித்து உரை நிகழ்த்தினேன் ஏழு நாட்களும் இந்த உரைகளைத் தொடர்ந்து கேட்டு வந்த வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி இந்தப் பேருரைகளைப் பாராட்டி நிறைய மின்னஞ்சல்கள். தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் புத்தாண்டில் இப்படி ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்திய ஸ்ருதி டிவிக்கு எனது அன்பும் நன்றியும் இந்தப் பேருரைகள் ஸ்ருதிவிடி யூடியூப் …

ஏழாம் நாள் பேருரை- இதாலோ கால்வினோ Read More »

திரைக்கூட்டணி

புக்கர் பரிசு மற்றும் ஆஸ்கார் விருது இரண்டையும் வென்ற ஒரே எழுத்தாளர் ரூத் ப்ராவர் ஜாப்வாலா. மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் வெளியான படங்களுக்கு இவரே திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். இவர்கள் கூட்டணி கடைசிவரை நீடித்தது. ஹாலிவுட் சினிமாவில் பெண் திரைக்கதை ஆசிரியர்கள் குறைவு. அதிலும் இப்படி நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கூட்டணியாகத் திரைப்படத்தில் பணியாற்றுவது அபூர்வமானது. ஜாப்வாலா பன்னிரண்டு நாவல்களையும் எட்டு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 23 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். இதில் இரண்டு முறை சிறந்த …

திரைக்கூட்டணி Read More »

ஏழாம் நாள் உரை -இதாலோ கால்வினோ

உலக இலக்கியச் சொற்பொழிவின் ஏழாம் நாள் உரை இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் பற்றியது. இன்று மாலை ஆறுமுப்பது மணிக்கு ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகும்

வெயிலில் அமர்தல்

புதிய சிறுகதை நியூசிலாந்திலிருந்து கிளம்பும் போது வர்ஷினிக்கு அப்படி ஒரு யோசனை இருக்கவேயில்லை. அவள் பெங்களூரில் உள்ள தனது அபார்ட்மெண்டிற்குத் தான் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். விமான டிக்கெட் கூடப் பெங்களூருக்கே போட்டிருந்தாள். ஆனால் பயணம் கிளம்பும் முதல் நாள் டிக்கெட்டை சென்னைக்கு மாற்றினாள். அப்பா அம்மாவோடு சில நாட்கள் இருக்கலாம் என நினைத்து சென்னைக்குப் பயணம் செய்தாள். ஆனால் சென்னைக்கு வந்த இரண்டாம் நாள் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அப்பாவிடம் பெங்களூர் போவதாகச் …

வெயிலில் அமர்தல் Read More »

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியான ஆ.மாதவன் காலமானார். அவரது மறைவிற்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி . திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த ஆ. மாதவன் அவர்களை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிகப் பண்பான மனிதர். அவரது சிறுகதைகள் தனித்துவமானவை. அவரைப் பற்றி கதாவிலாசத்தில் நான் எழுதிய கட்டுரையை வாசித்து விட்டு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். நன்றி தெரிவித்தார். நகுலனைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவரையும் காண்பது வழக்கம்.. வாசகர் வட்டம் வெளியிட்ட அவரது புனலும் மணலும் முக்கியமான நாவல். …

அஞ்சலி Read More »

ஆறாம் நாள் உரை – ஜாக் லண்டன்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் பேருரைகளின் ஆறாம் நாளில் ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல் (The Call of the Wild) குறித்து உரையாற்றுகிறேன்.