வங்கச் சிறப்பிதழ்

சொல்வனம் தன் 12 ஆண்டுக் காலச் செயல்பாட்டில் பல்வேறு சிறப்பான மொழியாக்கங்களைத் தந்திருக்கிறது. முக்கியப் படைப்பாளிகளுக்குச் சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளது. தற்போது வங்காள இலக்கியத்திற்குச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது வங்க இலக்கியத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. நீலகண்ட பறவையைத் தேடியும். பொம்மலாட்டமும், பதேர்பாஞ்சாலியும், காட்டின் உரிமையும், ஆரோக்கிய நிகேதனமும், கறையானும் மறக்கமுடியாத படைப்புகள். வங்க இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்த திரு.சு.கிருஷ்ணமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர். இந்திய இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய வங்க இலக்கியத்தையும், அதன் முக்கியப் படைப்பாளிகளையும் …

வங்கச் சிறப்பிதழ் Read More »

ஐந்தாம் நாள் உரை – ஸ்டெபான் ஸ்வேக்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகளின் ஐந்தாம் நாள் உரை ஸ்டெபான் ஸ்வேக் பற்றியது ஸ்ருதி டிவியில் இந்த நிகழ்வு நேற்று மாலை ஒளிபரப்பானது

ஓவியங்களை எரித்தவர்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜி ராணுவம் திட்டமிட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் கலைப்பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது. குறிப்பாகப் பாரீஸ் ம்யூசியங்களிலிருந்த அரிய ஓவியங்களைத் கொள்ளையடித்தார்கள். இக் கொள்ளைக்குப் பயந்து கலைப்பொருள் சேகரிப்பவர்கள் வங்கியின் பாதுகாப்பு அறையில் தங்கள் அரிய கலைப்பொருட்களை ஒளித்து வைத்தார்கள். அப்படியும் அவர்களால் ஓவியங்களைக் காப்பாற்ற முடியவில்லை. வங்கியின் பாதுகாப்பு அறைகளை உடைத்து ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஐம்பதாயிரத்திற்கும் மேலான அரிய ஓவியங்கள் சிற்பங்கள். கொள்ளை போயின. இதில் மீட்கப்பட்டது வெறும் அறுபது சதவீதம் மட்டுமே என்கிறார்கள். …

ஓவியங்களை எரித்தவர்கள். Read More »

நான்காம் நாள் பேருரை

ஏழு உலக இலக்கியப் பேருரைகளில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஐசக் பாஷவிஸ் சிங்கர் எழுதிய – “கிம்பல் மற்றும் கதைகள்” குறித்த உரை இன்று மாலை 6 30 மணிக்கு ஒளிபரப்பாகும்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021

அரூ இணையதளம் அறிவித்துள்ள அறிவியல் சிறுகதைப் போட்டி. கடந்த இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 அறிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். போட்டியின் விதிமுறைகள்அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்.வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பது அவசியம்.போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் …

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 Read More »