சிறப்பு சலுகை
தேசாந்திரி பதிப்பகம் புத்தாண்டு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது
முப்பது ஆண்டுகளுக்கு முன்புகவிஞர் ஆனந்த், கவிஞர் தேவதச்சன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து காலம் பற்றிய ஆய்வு ஒன்றில் ஈடுபட்டார்கள். 1992ல் ஆனந்த் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது காலம் குறித்த வியப்பான விஷயங்களை, தகவல்களை, கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அந்த ஆய்விற்காகப் பலரையும் நேர்காணல் செய்தார்கள். ஆனால் அது இன்றும் வெளியிடப்படவில்லை. இன்று Einstein’s Dreams என்ற நாவலை வாசிக்கும் போது அந்த நினைவுகள் வந்து போயின ஆலன் லைட்மென் எழுதிய இந்த நாவல் ஐன்ஸ்டீனின் …
புகைப்படக்கலைஞர் ஜான்ஐசக் நேர்காணல் ஒன்றில் அவர் யுனெஸ்கோவிற்காகப் பிரபல நடிகை ஆட்ரி ஹெபர்னுடன் செய்த பயண அனுபவங்களைப் பகிர்ந்திருப்பார். அதில் புகழ் வெளிச்சத்தைத் தன் மீது படிய விடாமல் ஹெபர்ன் எளிமையாக எல்லோருடன் பழகினார்.ஆதரவற்ற குழந்தைகளைத் தேடிச் சென்று உதவிகள் செய்தார். நோயுற்ற குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தார். கைவிடப்பட்ட சிறார்களுடன் கைகோர்த்து நடந்தார். குழந்தைகளுடன் இருக்கும் போது மிகச் சந்தோஷமாக உணர்வதாக ஹெபர்ன் சொன்னார். அந்த மகிழ்ச்சி அவரது கண்களில் பிரதிபலித்தது என்று …
நேற்று எனது புத்தக வெளியீடு நேரலையின் வழியே சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் எனது விருப்பத்திற்குரிய வாசகர்களும் நண்பர்களும் புத்தகத்தின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர் பிரபாகரன். எழுத்தாளர் அகர முதல்வன். நண்பர் சண்முகம், இயக்குநர் மோகன். இணை இயக்குநர் மந்திரமூர்த்தி, மதுரை அழகர், ஆகிய அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஸ்ருதி டிவி கபிலன். சுரேஷ் இருவருக்கும் அன்பும் நன்றிகளும் புத்தகங்களை அழகாக அச்சிட்டு உதவிய …
தமிழ் பண்பாட்டின் வேர்களை நமக்கு அடையாளம் காட்டிய பெருந்தகைதமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளங்கவிஞரான வே.நி.சூர்யா மிகச் சிறப்பான கவிதைகளை எழுதி வருகிறார். கரப்பானியம் என்ற அவரது கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இதனைத் சால்ட் பதிப்பகம் வெளியீட்டுள்ளது அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகும் கவிதைகளும் அற்புதமாக உள்ளன. இணையம் மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வரும் அவரது கவிதைகள் தனித்துவமான குரலில் ஒலிக்கின்றன. தன்னைச் சிதறடிக்கும் கவிதைகள் என்று இவற்றை கூறலாம். தானற்று போவதையும் தான் எதில், எவ்வாறு சிதறி வெளிப்படுகிறோம் அல்லது விலக்கப்படுகிறோம் என்பதையே சூர்யாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவரது …
சஞ்சாரம் நாவலை வாசித்த கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் நாதஸ்வரக் கலைஞர் பற்றிய ஒவியம் ஒன்றை வரைந்து அனுப்பியிருக்கிறார். நாவல் குறித்த அவரது பாராட்டிற்கும் அழகான ஒவியத்திற்கும் நன்றி
டிசம்பர் 25 வெளியிடப்படும் எனது ஆறு நூல்களின் மொத்தவிலை ரூ 1330. இந்த நூல்கள் சிறப்பு சலுகையாக ரூ1000 விலைக்கு அளிக்கபடுகிறது . இந்த சலுகை டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை அறிவிக்கபட்டுள்ளது தபால் அல்லது கூரியல் அனுப்பும் செலவு தனியாக செலுத்தப்பட வேண்டும். கர்னலின் நாற்காலி கெட்டிப்பதிப்பு டிசம்பர் 30 முதல் விற்பனைக்கு கிடைக்கும். அதைப் பெற விரும்புகிறவர்கள் சலுகை விலையான ஆயிரத்துடன் ரூபாய் 120 சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும் கர்னலின் …
தேசாந்திரி பதிப்பகம் வழங்கும்எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை 4 மணி (நேரலையில்)
டிசம்பர் 25 மாலை 4 மணிக்கு நேரலை மூலம் வெளியிடப்படவுள்ள எனது சிறார் நாவல் நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து இந்த நூலை ஹரி பிரசாத் வடிவமைப்பு செய்துள்ளார். அட்டை வடிவமைப்பு :மணிகண்டன். சிறப்பு வடிவமைப்பு :குரு. பிழைத்திருத்தம் :சாம் ஜெபசிங். உறுதுணை : அன்புகரன் விலை ரூ 70 ஆன்லைன் ஷாப்பிங் https://www.desanthiri.com/shop/ தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093CALL …