நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி.
லா.ச.ராவின் அபிதா இருக்கிறதா என்று அவர் நூலகரிடம் கேட்டபோது நான் திரும்பிப் பார்த்தேன். பொதுவாக நூலகரிடம் லா.ச.ராவின் புத்தகங்களைக் கேட்பவர்கள் அரிது. பெரும்பாலும் பொன்னியின் செல்வன். சிவகாமியின் சபதம் கடற்புறாவைத் தேடுபவர்கள் தான் அதிகம். ஆனால் அந்த மனிதர் லா.ச.ராமாமிருதம் எழுதிய அபிதா புத்தகத்தைக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நான் தான் அந்தப் புத்தகத்தை இரவல் எடுத்துப் போயிருந்தேன். ஆகவே நூலகர் என்னைச் சுட்டிக்காட்டி அவர் இன்னமும் திருப்பித் தரலை என்று சொன்னார். உடனே அந்த மனிதர் …