கதைப்பயணி 10
கதைப்பயணி தொடரின் பத்தாவது பகுதி வெளியாகியுள்ளது
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தினுள் அமைந்துள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இந்த நூலகத்தை மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது அன்னையின் நினைவாக உருவாக்கியுள்ளார். ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில் நிகழ்வு நடைபெறுகிறது மாணவர்கள் மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறவுள்ளது அனைவரும் கலந்து கொள்ளலாம்.
அமெரிக்க எழுத்தாளரான சிந்தியா ஓசிக்கின் “பொறாமை; அல்லது, அமெரிக்காவில் யித்திஷ்” என்ற குறுநாவல் இரண்டு எழுத்தாளர்களுக்கிடையேயான பொறாமையைப் பேசுகிறது. யித்திஷ் மொழி எழுத்தாளரான ஆஸ்ட்ரோவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் புகழ்பெற்றுவிடுகிறார். அதே மொழியில் எழுதும் கவிஞர் எடெல்ஸ்டீனை யாரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அத்தோடு யித்திஷ் மொழியில் கவிதை படிப்பவர்களும் வெகுவாகக் குறைந்து வருகிறார்கள். ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் உலகின் கவனத்தைப் பெற வேண்டுமா. அல்லது சொந்த மொழியில் எழுதி அந்த வட்டத்திற்குள் மட்டும் புகழ் அடைந்தால் …
புதிய சிறுகதை. ஆகஸ்ட் 18. 2026 அந்த மனிதன் வருத்தமான முகத்துடன் சாலையோரம் கிடந்த கல்லில் அமர்ந்திருந்தான். ஐம்பது வயதிருக்கும். சீரற்ற தாடி. வருத்தம் படிந்த கண்கள். தலைமுடியை சீவியிருக்கவில்லை. அழுக்கடைந்து போன பேண்ட். பொத்தான்கள் சரியாகப் போடப்படாத கோடு போட்ட சட்டை. கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருப்பதைப் பார்த்தால் மீளமுடியாத கவலை கொண்டவனைப் போலிருந்தது. அந்த மனிதன் அமர்ந்திருந்த சாலை வழியாகவே குமரேசன் தினமும் ஆபீஸ் போக வேண்டும். ஆகவே ஒரு வாரமாக அந்த ஆளைப் …
புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் தமிழன் விருது எனக்கு வழங்கப்பட்டது. இலக்கியப் பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்காக என்னைத் தேர்வு செய்திருந்தார்கள். நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. எனது ஆசான் எஸ்.ஏ. பெருமாள் மற்றும் புதிய தலைமுறை சேர்மன் சத்யநாராயணா இருவரும் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கினார்கள். நிகழ்வில் கலந்து கொள்ள உறுதுணை செய்த கார்மல், பரிசல் கிருஷ்ணா, நந்தினி உள்ளிட்ட அனைவருக்கும் மனம் …
ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்கும் தாமஸ் மானிற்கும் இடையில் எழுதப்பட்ட கடிதங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். ஹெஸ்ஸே ஒரு ஓவியர் என்பதால் அவரது கடிதங்களின் ஒரங்களிலும் தலைப்பிலும் தான் விரும்பியதை வரைந்து அனுப்பியிருக்கிறார். அழகான நீர்வண்ண ஓவியங்களுடன் எழுதப்பட்ட கடிதங்களை மான் வியந்து பாராட்டுகிறார். அவர்களுக்குள் இருந்த நட்புறவும் பரஸ்பர மரியாதையும் ஒருவருக்கொருவர் உதவிய விதமும் கடிதங்களில் வெளிப்படுகிறது. ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்குப் பல்வேறு விதங்களில் தாமஸ் மான் உதவி செய்திருக்கிறார். அது போலவே மானின் கட்டுரைகளை ஹெஸ்ஸேயும் அவரது மனைவியும் சேர்ந்து …
ராஜஸ்தானின் சித்தோர்கரை பூர்வீகமாகக் கொண்ட காடியா லோஹர் சமூகத்தினர் நாடோடிகளாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆயுதங்கள் செய்வதில் திறமை பெற்ற கொல்லர்களான இவர்கள் மாட்டுவண்டிகளில் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் பயணித்தபடி இருக்கிறார்கள். இரும்பு மற்றும் பித்தளையில் கலைப்பொருட்கள் மற்றும் கருவிகள் செய்வது இவர்களின் வேலையாகும். நிரந்தர வசிப்பிடமில்லாத இவர்கள் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். அடையாள அட்டைகளோ, எவ்விதமான அரசு உதவிகளோ கிடைக்காத இவர்களின் வாழ்க்கையை India’s Forgotten People …
சாஷா வாட்டர்ஸ் இயக்கிய Mary Oliver: Saved by the Beauty of the World ஆவணப்படம் கவிஞரின் வாழ்க்கை மற்றும் இலக்கியச் செயல்பாடுகளை விவரிக்கிறது. மேரி ஆலிவரை நினைவுபடுத்துவது இயற்கையின் மீதான அவரது ஈடுபாடு மற்றும் புரிதல். இந்த ஆவணப்படம் அதனைச் சரியாகப் பதிவு செய்துள்ளது. மேரி 1935-ல் பிறந்து, ஓஹியோவில் உள்ள ஒரு சிறிய ஊரில் வளர்ந்தவர். தினமும் எழுதுவதை ஒரு சடங்காகக் கொண்டிருந்தவர். நகர வாழ்வின் பரபரப்பை விட்டு ஒதுங்கிய அவரது வீடு …