குறுங்கதை -78 இந்தியா எனும் கனவு.

1487ல் எஸ்மரால்டா கப்பல் லிஸ்பனிலிருந்து புறப்பட்டது. ஆனால் ஒன்றரை வருஷங்களாகியும் அவர்களால் இந்தியாவிற்குச் செல்லும் வழியைக் கண்டறிய முடியவில்லை. கடலில் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்கள். அக்கப்பலில் இருந்தவர்களுக்கு இந்தியா என்பது ஒரு சொல்லில்லை. கனவு. அக் கப்பலின் கேப்டன் ஒரு கிளி வளர்ந்து வந்தான். அது நாள் முழுவதும் இந்தியா இந்தியா என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. இந்தியா என்பது வீதியெல்லாம் பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கும் தேசம் எனக் கடலோடிகள் நம்பினார்கள். எவர் முதலில் சென்று சேருகிறார்களோ அவர்களுக்கே பொக்கிஷங்கள் …

குறுங்கதை -78 இந்தியா எனும் கனவு. Read More »

குறுங்கதை 77 மறதியின் காப்பகம்

அந்த ஷாப்பிங் மாலில் பார்வையாளர்கள் மறந்து விட்டுப் போன பொருட்களைப் பாதுகாத்து ஒப்படைப்பதற்கெனத் தனி அறையொன்று இருந்தது. அதன் நிர்வாகியாக இருந்தான் சிவானந்தம். வீட்டுச்சாவிகள். பைக், கார்சாவிகள். ஹேண்ட்பேக்குகள், கர்சீப், மணிபர்ஸ், குடை, சிறுவர்களின் காலணிகள், செல்போன்கள், வங்கி அட்டைகள், விளையாட்டுப் பொம்மைகள். குடிநீர் பாட்டில்கள். மூக்குக் கண்ணாடி, சில்லறைக் காசுகள். மாத்திரைகள், விக்ஸ் டப்பா, கால்கொலுசுகள் சிகரெட் லைட்டர்கள் போன்றவற்றைத் தான் மறந்து போன பொருட்களாக இருக்கும். சுத்தம் செய்யும் பணியாளர்கள் அவற்றை எடுத்து வந்து …

குறுங்கதை 77 மறதியின் காப்பகம் Read More »

குறுங்கதை 76 தந்தையும் மகளும்.

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவின் சிறிய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது கைசூர். அதன் மன்னராக இருந்த முக்திபோத் தன்னுடைய ஒரே மகள் கௌரியை ராம்கரில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த இரண்டு ஊர்களுக்கும் நடுவே ஒரு ஆறு ஓடியது. ஆற்றின் ஒரு கரையில் கைசூர் இருந்தது. மறுகரையில் ராம்கர். அன்றாடம் முக்திபோத் விடிகாலை  எழுந்தவுடன் தன் கையாலே மகளுக்கு விருப்பமான சிவப்பு ரோஜாவைப் பறித்து ஒரு தங்கப்பெட்டியில் வைத்து அனுப்பி வைப்பார். அதை அரண்மனையிலிருந்து  ஒரு வீரன் எடுத்துக் …

குறுங்கதை 76 தந்தையும் மகளும். Read More »

அ.முத்துலிங்கம் நேர்காணல்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நேர்காணல் யாவரும்.காமில் வெளியாகியுள்ளது. அகரமுதல்வன் நேர்காணல் செய்திருக்கிறார். சமீபத்தில் படித்த மிகச்சிறந்த நேர்காணலிது. முத்துலிங்கத்தின் பதில்கள் வியக்கவைக்கின்றன. அ.முத்துலிங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இருக்கைக்காகச் செய்து வரும் முன்னெடுப்புகள்  மகத்தானவை. இயல் விருதுகள் வழங்குவதிலும், தமிழ் படைப்பாளிகளைக் கொண்டாடுவதிலும் அவர் காட்டும் அக்கறையும் நேசமும் நிகரற்றது. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில வீரர்கள் தனக்குப் பந்து வரும்வரை காத்திருக்க மாட்டார்கள். ஒரு அடி முன்னால் போய்ப் பந்து வரும்போதே எதிர்கொண்டு ஓங்கி அடித்துவிடுவார்கள். …

அ.முத்துலிங்கம் நேர்காணல் Read More »

குறுங்கதை 75 ஒரு வழக்கு

1949ல் முர்ஷிதாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் துவங்கிய போது எழுத்தாளர் ஏவம் சக்கரவர்த்திக்கு வயது 41. நவபிரஜா பதிப்பகம் தனது நாவலைத் திருடி சுனில் பிரசாத் என்ற எழுத்தாளரின் புதிய நாவலாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இது ஒரு மோசடி. சுனில் பிரசாத்தின் நாவலைத் தடைசெய்வதோடு, இதை வெளியிட முன்வந்த நவபிரஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார் ஏவம் சக்கரவர்த்தி மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதால் அவரது வழக்கு குறித்த செய்தி தினசரிகளில் …

குறுங்கதை 75 ஒரு வழக்கு Read More »

மோ-யானின் பசி.

2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மோ-யானின் நேர்காணல் ஒன்றை வாசித்தேன். மோ-யான் சாண்டோங்கில் ஒரு கிராமத்தில் பிறந்தார், அவரது தந்தை தனியார் கிராம பள்ளியில் படித்தவர், அறிவுஜீவி. ஆகவே பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். மோயானின் சகோதரர் ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். மோ-யான் பல்கலைகழத்தில் படித்த நாட்களில் தான் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டார் பெரும்பான்மை எழுத்தாளர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதவே ஆசைப்படுகிறார்கள். குறிப்பாகக் குழந்தைப் …

மோ-யானின் பசி. Read More »

குறுங்கதை 74 கோவில் யானை.

யானை கொட்டடிக்குள் சிறுவர்களை அனுமதிக்கமாட்டார்கள். தகரக்கூரை வேய்ந்த பழைய கொட்டடியது. சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான யானை அங்கேயிருந்தது. ஒரு ஊரில் ஒரேயொரு யானை மட்டும் தனியே வாழ்வது விசித்திரமானது. அதற்குத் துணையே கிடையாதா என்று சிறுவர்கள் பேசிக் கொள்வார்கள். அந்த யானையை வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் கோவிலுக்கு அழைத்து வருவார்கள். மற்ற நாட்களில் அது கொட்டடியிலே தானிருக்கும். யானைப்பாகன் அழுக்கான வேஷ்டி கட்டியிருப்பான். சதா யானையின் அருகில் உட்கார்ந்து பீடி பிடித்துக் கொண்டிருப்பான். யானையின் கண்கள் …

குறுங்கதை 74 கோவில் யானை. Read More »

ஜமீலா

நேற்றிரவு சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Chinghiz Aitmatov) எழுதிய ஜமீலா நாவலை மையமாகக் கொண்ட ஜமீலா(Dzhamiliya) திரைப்படத்தைப் பார்த்தேன். 1968ல் வெளியான இப்படத்தை இரினா போப்லாவ்ஸ்கயா மற்றும் செர்ஜி யூட்கேவிச் இயக்கியிருக்கிறார்கள். சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ”முதல் ஆசிரியர்” மகத்தான படைப்பு. அது போலவே அவரது சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, மற்றும் குல்சாரி நாவலும் சிறப்பான படைப்புகள். ஜமீலா நாவலை வாசிக்கையில் ஜமீலாவின் தோற்றம் நம் மனதில் தனித்துவமிக்கதாக எழும். அதற்கு நிகரான ஒரு பெண்ணை ஜமீலாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். …

ஜமீலா Read More »

புதிய உரைகள்

தேசாந்திரி youtube சேனலில் வெளியாகியுள்ள புதிய உரைகள் TOTTO-CHAN ஜன்னலில் ஒரு சிறுமி – அறிமுகம் https://youtu.be/aY89jPESR_Q ஈசாப் ஒரு அறிமுகம் https://youtu.be/c5SByiZF4Ao

குறுங்கதை 73 முயல் பொம்மை

விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த அவனுக்கு மாதத்தில் இருபது நாள் வெளியூர் செல்ல வேண்டியதாகியிருந்தது. ஆரம்பத்தில் புதுப்புது தங்கும் விடுதியினைத் தேடிப் போய்த் தங்குவான். ஆனால் நான்கு ஆண்டுகள் அனுபவத்தின் முடிவில் எந்த ஊரில் எந்த லாட்ஜ் சிறந்தது. என்ன உணவகத்தில் சாப்பிடலாம் என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். பெரும்பாலும் அவனது வேலை காலை பத்து மணிக்குத் துவங்கி மதியம் இரண்டு மணியோடு முடிந்துவிடும். மாலை ஆறுமணிக்குப் பிறகே அடுத்த ஊருக்குக் கிளம்புவான். மதியம் சாப்பிட்டு விட்டு …

குறுங்கதை 73 முயல் பொம்மை Read More »