ரஷ்யக் குறிப்புகள்.
1830 ஆம் ஆண்டில் காலரா பரவிய காரணத்தால் புஷ்கின் சில மாதங்கள் அவரது குடும்ப எஸ்டேட் போல்டினோவிற்கு இடம்பெயர்ந்தார். தனிமையிலிருந்த அந்த நாட்களைப் புஷ்கின் மிகப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார். அந்த நாட்களை ‘போல்டினோ இலையுதிர் காலம்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அங்கிருந்த போது தான் யூஜின் ஒன்ஜினின் இறுதி அத்தியாயத்தைப் புஷ்கின் எழுதினார். இலையுதிர்காலத்தின் அழகினை ரசித்தபடியே அவர் எழுதுவதும் வாசிப்பதும் நடனமாடுவதுமாக நாட்களைக் கழித்தார். யூஜின் ஒன்ஜின் எழுதுவதற்கு எட்டு ஆண்டுகளைச் செலவிட்டார் புஷ்கின் (1799-1837) …