குறுங்கதை 42 கடைசிப் பரிட்சை
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அவனுக்கு ஒரு கடிதம் வரும். அந்தக் கடிதத்தில் அவன் எழுத வேண்டிய பரிட்சை பற்றியும் அதற்கான நாள் மற்றும் இடம் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாளில் அந்த இடத்திற்குத் தேடிப் போய்ப் பார்த்தால் அப்படியொரு பரிட்சை மையமேயிருக்காது. அவனைப் போல வேறு யாராவது பரிட்சை எழுத தேடி வந்திருப்பார்களா எனத்தேடிப் பார்ப்பான். ஆனால் வேறு எவருக்கும் அப்படி ஒரு கடிதம் வந்திருக்காது. கல்லூரி நாட்களில் அவன் M.A பிலாசபி படித்தான். அதில் ஒரு …