ரஷ்யக் குறிப்புகள்.

1830 ஆம் ஆண்டில் காலரா பரவிய காரணத்தால் புஷ்கின் சில மாதங்கள் அவரது குடும்ப எஸ்டேட் போல்டினோவிற்கு இடம்பெயர்ந்தார். தனிமையிலிருந்த அந்த நாட்களைப் புஷ்கின் மிகப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார். அந்த நாட்களை ‘போல்டினோ இலையுதிர் காலம்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அங்கிருந்த போது தான் யூஜின் ஒன்ஜினின் இறுதி அத்தியாயத்தைப் புஷ்கின் எழுதினார். இலையுதிர்காலத்தின் அழகினை ரசித்தபடியே அவர் எழுதுவதும் வாசிப்பதும் நடனமாடுவதுமாக நாட்களைக் கழித்தார். யூஜின் ஒன்ஜின் எழுதுவதற்கு எட்டு ஆண்டுகளைச் செலவிட்டார் புஷ்கின் (1799-1837) …

ரஷ்யக் குறிப்புகள். Read More »

தீவில் ஒரு குடும்பம்.

சுவிஸ் ஃபேமிலி ராபின்சன் நாவலை எனது பள்ளி வயதில் வாசித்திருக்கிறேன். 1813ல் வெளியானது. புயலில் சிக்கிய கப்பல் ஒன்றிலிருந்து ஒரு குடும்பம் தீவில் அடைக்கலமாகிறது. அங்கே எப்படி அவர்கள் வசித்தார்கள். எவ்வாறு தீவிலிருநது தப்பினார்கள் என்பதைச் சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் ஜொஹான் டேவிட் வைஸ். இந்த நாவல் 1960ல் திரைப்படமாக்கப்பட்டது. வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்த பிரம்மாண்டமான படமிது. தொலைக்காட்சியில் ஒருமுறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். தற்போது மீண்டும் பார்க்கலாம் எனத் தேடிப் பார்த்தேன். ஒரு சுவிஸ் குடும்பம் யுத்த …

தீவில் ஒரு குடும்பம். Read More »

குறுங்கதை 37 பிரியாத் துணை

பாபுராஜ் என்ற அந்தக் கிழவருக்கு வயது எண்பத்திரெண்டாகிறது. அவரது மனைவி சாந்தினிக்கு அவரை விடவும் நான்கு வயது குறைவு. அவர்கள் இருவரும் நகரை விட்டு விலகிய புறநகர்ப் பகுதியில் வசித்தார்கள். அவர்கள் வீடு கட்டத்துவங்கும் போது அந்தப் பகுதியில் நான்கே வீடுகள் இருந்தன. இப்போது ஐநூறுக்கும் மேலாக வீடுகள் வந்துவிட்டன. கிழவர் தன் மனைவியின் மீது தீராத அன்பு கொண்டிருந்தார். கிழவியும் அப்படியே. அவர்கள் இருவரும் விளையாட்டுச் சிறுவர்கள் போலவே நடந்து கொள்வார்கள்.. இருவரும் ஒன்றாக நடைப்பயிற்சிக்குப் …

குறுங்கதை 37 பிரியாத் துணை Read More »

தந்தையும் தாயும்.

புகழ்பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான வேத் மேத்தா எழுதிய Mamaji, Daddyji என்ற இரண்டு புத்தகங்களை வாசித்தேன். இது அவரது சுயசரிதை. சாந்தி மேத்தா மற்றும் அமோலக் ராம் மேத்தா என்ற அவரது தாய் தந்தை இருவரைப் பற்றிய வாழ்க்கை சரித்திரமாக எழுதப்பட்டிருக்கிறது. வேத் மேத்தா 1934 லாகூரில் பிறந்தவர். பஞ்சாபி. மூன்று வயதில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் காரணமாகக் கண் பார்வையை இழந்தவர். ஆனாலும் மனம் தளராமல் பம்பாயில் உள்ள பார்வையற்றோருக்கான தாதர் பள்ளியில் சேர்ந்து படித்தார். …

தந்தையும் தாயும். Read More »

நம்பிக்கையோடு இருங்கள்

கரோனா தாக்குதல் காரணமாக நாடு மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி. இது போலவே ஊடகத்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வோடு செய்திகளை வழங்குகிறார்கள். அவர்களுக்கும் நன்றி. கொரானோ தொற்றுநோய் குறித்த பயம் நம் அனைவரின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக வயதானவர்கள். ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த மனஅழுத்தம் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் அவர்களின் நோய் கூறை அதிகமாக்கிவிடுகிறது. …

நம்பிக்கையோடு இருங்கள் Read More »

துறவியோடு நடப்பது.

வியட்நாமைச் சேர்ந்த பௌத்த துறவி திக் நியட் ஹான் (Thich Nhat Hanh) ஒரு ஜென் மாஸ்டர். வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட அவர் தெற்கு பிரான்சின் போர்டியாக்ஸுக்கு அருகில் Plum Village என்ற மடாலயம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மனசாந்தி வேண்டும் எவரும் அங்கே வந்து தங்கலாம். தியானம் பயிலலாம். பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கான பயிற்சிக்கூடமாகவும் இது செயல்படுகிறது. திக் நியட் ஹானின் வழிகாட்டுதலைப் பற்றிய ஆவணப்படமே Walk with Me. இப்படம் பிளம் கிராமத்திற்கு வரும் பயணிகளைப் …

துறவியோடு நடப்பது. Read More »

குறுங்கதை 36 கூந்தலில் வழியும் அருவி.

மலையுச்சியிலிருந்து பூமியை நோக்கி அருவி கொட்டுவதைப் போலத் தனது கூந்தலிலிருந்து பாதம் நோக்கி நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் ஒரு பெண் இருந்தாள். ஆம். கூந்தலில் அருவியைச் சூடியவள் என அழைக்கப்பட்ட அப்பெண்ணின் தலையிருந்து அருவி போலத் தண்ணீர் பகலிரவாக வழிந்தோடிக் கொண்டேயிருந்தது. அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட அந்தப் பெண்ணிற்கு முப்பது வயதிருக்கக் கூடும். வெண்கலச்சிலை போன்ற உடலமைப்பு. விளக்கின் சுடர் போன்ற கண்கள். திருமணம் செய்து கொண்ட மூன்று வாரத்தில் அவள் கணவன் கடலோடியாகப் போய்விட்டான். பதிமூன்று …

குறுங்கதை 36 கூந்தலில் வழியும் அருவி. Read More »

மண் விழித்துக்கொள்கிறது

The Biggest Little Farm என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். கிளாசிக் நாவல்களை வாசிக்கையில் ஏற்படும் மன எழுச்சிக்கு நிகரான உணர்வினை அடைந்தேன். ஒரு டாகுமெண்டரி திரைப்படம் என்பதைத் தாண்டி இயற்கையோடு இணைந்து வாழுவதற்கான ஆதார பாடம் என்றே இதனைக் கூற வேண்டும். கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் வசித்து வந்த ஜான் மற்றும் மோலி செஸ்டர் நகரவாழ்க்கையிலிருந்து விலகி புதிய  பாதையில் பயணிக்க முயன்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் வளர்ப்பு நாய் டோட். ஜான் ஒரு ஒளிப்பதிவாளர். …

மண் விழித்துக்கொள்கிறது Read More »

குறுங்கதை 35 பெருக்கல் குறி

பிரான்ஸ் காஃப்கா சிறுவனாக இருந்த போது ஒரு நாள் போலீஸ்காரன் ஒரு திருடனைக் கைது செய்து அழைத்துக் கொண்டுபோவதைக் கண்டார். அவர் வயதை ஒத்த சிறுவர்கள் திருடனைத் துரத்தியபடியே பின்னால் ஓடினார்கள். காஃப்கா ஒரு திருடனை அன்று தான் முதன்முறையாக நேரில் பார்க்கிறார். ஆகவே அருகில் போய்ப் பார்க்க முனைந்தார். அந்தத் திருடனுக்கு முப்பது வயதிருக்கும்.ஆறடிக்கும் அதிகமான உயரம். மீசையில்லாத முகம். வெளிறிப் போன குளிராடை அணிந்திருந்தான். அவனது தோற்றம் ஏதோ அலுவலகக் குமாஸ்தா போலவேயிருந்தது. போலீஸ்காரன் …

குறுங்கதை 35 பெருக்கல் குறி Read More »