குறுங்கதை 34 சூட்கேஸ்

வெளியூர் செல்லும் நேரங்களில் அவன் தன் மனைவியை ஒரு சூட்கேஸ் போல உருமாற்றி எடுத்துச் சென்றுவிடுவான். சூட்கேஸ் ஒருபோதும் பயண நெருக்கடி பற்றியோ, புதிய இடம் பற்றியோ முணுமுணுப்பதில்லை. அதற்குச் சிறிய மூலை போதும். அவனுக்குத் தேவையான உடைகள். பற்பசை, சேவிங்கிரீம், ரப்பர் செருப்பு வரை எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டது சூட்கேஸ். விடுதிகளின் வரவேற்பறையில் அவன் சூட்கேஸ் உடன் நிற்பது தான் பெருமையாகக் கருதப்பட்டது. வெறும் கையோடு வருபவனைப் பயணியாக யாரும் மதிப்பதில்லை. அவன் வெளியே …

குறுங்கதை 34 சூட்கேஸ் Read More »

குறுங்கதை-33 மொழி அதிகாரம்

அமேசான் காடுகளில் வாழும் முண்டிரு என்ற பழங்குடியினர் பேசும் மொழியில் காலத்தைக் குறிக்கும் சொற்கள் கிடையாது. பன்மை சொற்கள் கிடையாது. அப் பழங்குடியின் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஜோன்ஸ் வாழ்நாளின் பெரும்பகுதியை அமேசானில் கழித்தார். முதுமையில் நாடு திரும்பி வந்த போது அவரைச் சந்தித்த நண்பர் கேட்டார் “அமெரிக்காவிலிருந்து அங்குப் போய்ச்சேர எவ்வளவு நாட்களானது“ ஜோன்ஸ் சொன்னார் “இங்கிருந்து சான்டரெம் வரை ஒன்பது மணி நேர விமான பயணம். பின்பு அங்கேயிருந்து படகில் ஆறு மணி …

குறுங்கதை-33 மொழி அதிகாரம் Read More »

நிழலின் நடனம்

அகிரா குரசேவாவின் Kagemusha திரைப்படம் மன்னரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட திருடன் ஒருவனைப் பிடித்து மன்னருக்குப் பதிலாக எப்படி நடிக்க வைக்கிறார்கள் என்பதை அழகாகப் பதிவு செய்திருந்தது. இதே கதையின் மற்றொரு வடிவம் போன்ற திரைப்படமே Zhang Yimou இயக்கத்தில் வெளியாகியுள்ள Shadow. House of Flying Daggers, Hero போன்ற தற்காப்புக்கலை சார்ந்த வரலாற்றுப் படங்களை இயக்கிய ஜாங் யிமோ இப்படத்தில் Martial arts திரைப்படங்களின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். சீன ஒவியங்களிலிருந்த பூக்களையும் நிலக்காட்சி …

நிழலின் நடனம் Read More »

குறுங்கதை 32 நிர்கதி

அவர் சிறுவயதிலிருந்தே புகழ்பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை கொண்டிருந்தார். இதற்காகவே இசை கற்றுக்கொண்டார். நடனம் பயின்றார். நாடகங்களில் நடிக்கவும் செய்தார். அவரது பெயரையும் புகைப்படத்தையும் சுவரொட்டியில் பார்க்கும் போது மேகக்கூட்டத்தில் மிதப்பது போலச் சந்தோஷம் கொண்டார். சினிமாவில் கதாநாயகனாக நடித்துப் பணமும் மரியாதையும் வசதிகளும் அடைந்த போது புகழ் அவரது வளர்ப்பு நாய் போலக் கூடவே சென்றது. அந்த மகிழ்ச்சியில் தனது வீட்டின் எதிரில் தன்னுடைய உருவச்சிலை ஒன்றை நிறுவச் செய்திருந்தார். ஒவ்வொரு நாளும் அந்தச் …

குறுங்கதை 32 நிர்கதி Read More »

ஸ்ருதி டிவி

தமிழ் இலக்கியத்தை ஆவணப்படுத்தும் அரிய முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஸ்ருதி டிவி தற்போது இலக்கியத்திற்கென்றே தனியாக Shruti TV Literature  சேனலை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் புத்தக வெளியீடுகள். இலக்கிய உரைகள், புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகள், கல்விப்புலம் சார்ந்த இலக்கிய நிகழ்வுகள், இலக்கிய முகாம்கள் பற்றிய காணொளிகள் முதன்மையாக இடம் பெறும். புதிய முயற்சியை மேற்கொள்ளும் கபிலன், சுரேஷ் உள்ளிட்ட ஸ்ருதி டிவி குழுவினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். Shruti TV Literature சேனலில் சிற்பி வித்யாசங்கர் …

ஸ்ருதி டிவி Read More »

குறுங்கதை 31 கூட்டலை மறந்த மனிதர்

அந்த மனிதருக்குக் கூட்டல் கணக்கு சுத்தமாக மறந்து போயிருந்தது. இரண்டும் இரண்டும் நான்கு என்றோ, ஐம்பது ரூபாயும் ஐம்பது ரூபாயும் சேர்ந்தால் நூறு ரூபாய் என்றோ அவரால் கணக்கிட முடியவில்லை. அவரிடமிருந்தது கழித்தல் கணக்கு மட்டுமே. கூட்டலை மறந்துவிட்டால் உலகம் மிகச்சிறியதாகிவிடும். அனுபவங்களும் சுருங்கிவிடும். பொருள்தேடுதல் முக்கியமற்றுப் போய்விடும். புத்தகங்களோ, இசையோ, பயணமோ எதுவும் தேவைப்படாமல் போய்விடும். கூட்டலை மறந்தவன் உதிர்ந்த சிறகைப் போன்றவன் எனப் பலரும் அவரைக் குற்றம் சாட்டினார்கள். வயது ஏற ஏற சந்தோஷங்கள் …

குறுங்கதை 31 கூட்டலை மறந்த மனிதர் Read More »

குறுங்கதை 30 குற்றத்தின் மலர்

போலீஸ் ஸ்டேஷனுள் ஒரு மஞ்சள் ரோஜாச் செடியை யார் நட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தச் செடியில் நிறைய மஞ்சள் ரோஜாக்கள் பூத்திருந்தன. லாக்கப்பில் எவனோ ஒரு குற்றவாளி அடிவாங்கும் போது ஒரு ரோஜாப்பூ “கொடூரம் “என்றபடியே தலைகவிழ்ந்து கொண்டது. மகளைக் காணாமல் தேடும் தந்தை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்று கண்ணீர் விட்டபோது ரோஜாச் செடி சொன்னது “கண்ணீர் குருதியை விடக் கனமானது.“ சந்தேகத்தின் பேரில் அடித்து இழுத்துவரப்பட்ட இளைஞனின் தாயும் சகோதரிகளும் ஸ்டேஷன் …

குறுங்கதை 30 குற்றத்தின் மலர் Read More »

குறுங்கதை 29 சிரிக்கும் நட்சத்திரம்

பதினாறாம் நூற்றாண்டில் பெர்சியாவில் ஒரு ஞானியிருந்தார். அவன் தன்னைச் சிரிக்கும் நட்சத்திரம் என்று அழைத்துக் கொண்டார். அந்த ஞானி திருமணமானவர். குழந்தைகள் இல்லை. வாசனைத் திரவியம் தயாரிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவரது மனைவிக்கு அவர் ஞானி என்பதிலோ, அவரைத் தேடி பலரும் வந்து அறிவுரை கேட்பதிலோ துளியும் மரியாதை கிடையாது. இருவரும் அடிக்கடி சண்டையிடுவார்கள். அவள் பலத்த கூச்சல் போடுவாள். சண்டையின் உச்சத்தில் ஞானி தன் வீட்டிலிருந்த பானை, சட்டி, கரண்டி, தட்டு, ஸ்பூன், டம்ளர், படுக்கை, …

குறுங்கதை 29 சிரிக்கும் நட்சத்திரம் Read More »

அசோகன் செருவில் நூலில்

மலையாள எழுத்தாளர் அசோகன் செருவிலின் புளிநெல்லி ஸ்டேஷன் நூலில் அவரைப் பற்றிய எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் ஷாஜி.