ஆற்றூர் ரவி வர்மா

கேரள சாகித்ய அகாதமி  மறைந்த கவிஞர் ஆற்றூர் ரவி வர்மா குறித்த நினைவுமலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவரைப் பற்றிய எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. ஆற்றூர் ரவி வர்மாவை நான் பலமுறை சந்தித்துப் பழகியிருக்கிறேன். திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கும்  சென்றிருக்கிறேன் எனது கட்டுரையை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலக்காடு தினேஷ் ••

குறுங்கதை 28 மொசார்ட்டின் வயலின்

பனிப்பிரதேசமொன்றில் அந்த மேபிள் மரம் ஒற்றையாக நின்று கொண்டிருந்தது. “எனக்கென யாருமில்லை. நான் யாருக்கும் பிரயோசனமாகவும் இல்லை. வாழ்வதே வீண்“ என்று அந்த மரம் சொல்லிக் கொண்டிருந்தது காற்று அம் மரத்தைக் கடக்கும்போது சொன்னது “அப்படி நினைக்காதே. உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது“ இரவில் வான் நிறைந்த நட்சத்திரங்களைக் காணும் போது மேபிள் மரம் சொன்னது. “இத்தனை அழகை நான் கண்ட போதும் அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.“ அப்போதும் காற்றுச் சொன்னது. “அப்படி நினைக்காதே. உன் வாழ்க்கைக்கு …

குறுங்கதை 28 மொசார்ட்டின் வயலின் Read More »

புத்தரின் கண்கள்

ஹங்கேரியின் புகழ்பெற்ற எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்.( László Krasznahorkai.) இவரது நாவல்களை ஒப்பற்ற திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பெலா டார் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் எழுதிய Seiobo There Below நாவல் 2015ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த கலைஞர்களின் கலைத்திறன் பற்றியது இந்நாவல். பல்வேறு துண்டுகளால் ஒன்றிணைந்த வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இந்நாவலில் ஜப்பானிலுள்ள புத்த கோவில் ஒன்றில் பழங்காலப் புத்தரின் சிலையை எப்படி மறுசீரமைப்பு செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பகுதி …

புத்தரின் கண்கள் Read More »

குறுங்கதை – 27 காதலுற்ற சிற்பங்கள்

ஒன்றையொன்று காதலித்துக் கொள்ளும் இரண்டு சிற்பங்கள் அந்தக் கோவிலிலிருந்தன. ஒரே பிரகாரத்திலிருந்த அந்தச் சிற்பங்கள் கண்மூடாமல் ஒன்றையொன்று பார்த்தபடியே இருந்தன. ரகசியமாகப் பேசிக் கொண்டன வட்டமுகமும், பருத்த உதடுகளும், மாதுளை போன்ற மார்பகங்களும், வெண்கலப் பானையின் கழுத்து போல வளைந்த இடையும், பெரிய தொடைகளும், சிறிய பாதங்களும் கொண்டிருந்த அந்தப் பெண் சிற்பம் கையில் ஏந்திய ஆடியில் முகம் காணுவதை போல நின்றிருந்தது. ஆண் சிற்பமோ கால் உயர்த்தி நின்ற புரவியில், கையில் குத்தீட்டி ஏந்தியபடி வேட்டைக்குச் …

குறுங்கதை – 27 காதலுற்ற சிற்பங்கள் Read More »

குறுங்கதை 26 அன்பின் வெளிச்சம்

கப்பல் முதலாளியைத் தற்செயலாக அவன் பாலக்காடு ரயில் நிலையத்தில் சந்தித்தான். தட்டில் இட்லி பொட்டலம் வைத்து விற்றுக் கொண்டு வந்தார். அவரை இப்படிக் காணுவது அதிர்ச்சியாக இருந்தது. ஆள் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சாந்தமான முகம். பரிசுத்தமான கண்கள். கொக்கின் வெண்மையிலிருந்த தலைமயிர், அடர்ந்த தாடி. ரப்பர் செருப்பு. ஒரு காலத்தில் கப்பல் முதலாளி வருகிறார் என்றால் அவர் போட்டிருக்கும் வாசனைத்திரவியத்தின் மணத்திலே தெரிந்துவிடும். ஆள் நல்ல அழகன். பர்மா சில்க் தான் எப்போதும் அணிவார். கையில் …

குறுங்கதை 26 அன்பின் வெளிச்சம் Read More »

நீரின் நிழல்

சினிமா என்பது முழுமையாகக் காட்சிமொழியின் ஊடகம். நாவலைப் போல அதற்கு நிறையக் கதை தேவையில்லை. கதையின் ஒற்றைப்புள்ளியிலிருந்து அது ஆழத்தை நோக்கியதாக நகர்வு கொண்டுவிடும். மிகச்சிறந்த கலைப்படங்களில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையும் உணர்வுகளும் குறைவான காட்சிகளின் வழியே பார்வையாளனுக்கு முற்றிலும் கடத்தப்பட்டுவிடும். அந்த மாயம் தான் சினிமாவின் தனித்துவம். அப்படி ஒரு படமாகத் தான் சனல்குமார் சசிதரனின் Chola என்ற மலையாளப் படத்தைக் கருதுகிறேன். Chola கேரள அரசின் நான்கு முக்கியத் திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும் இத் …

நீரின் நிழல் Read More »

குறுங்கதை 25 பாவம் மனிதன்.

மலைகள் ஒன்றையொன்று “சகோதரா“ என அழைத்துக் கொண்டன. நீர்வீழ்ச்சி பாறைகளைப் பார்த்து “என் அன்பே“ எனச் செல்லமாகக் கூப்பிட்டது. மரங்களோ சீறிப்பாய்ந்தோடும் ஆற்றினை “நண்பனே“ என்று அழைத்தன. ஆறு தன்னில் நீந்திவிளையாடும் மீன்களை “என் செல்வங்களே“ என்றது. மீன்களோ ஆமைகளைப் பார்த்து “அண்ணா“ என்று அழைத்தன. ஆமைகள் பாதிக் கண்களைத் திறந்தபடியே முதலையைப் “பெரியப்பா சுகம் தானா“ என்று கேட்டன. முதலை கசிந்த கண்களுடன் ஆற்றின் கரையிலிருந்த யானையைப் பார்த்து “சௌக்கியமா மாமா“ என்றது. யானையோ வானில் …

குறுங்கதை 25 பாவம் மனிதன். Read More »

பின்னோக்கிப் பறக்கும் பறவை

ரஷ்யத் திரைப்பட இயக்குநரும் ஆர்மீனிய வம்சாவளியைச் சேர்ந்த கலைஞருமான செர்ஜி பராஜனோவ் (Sergei Parajanov) வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்த்தேன். Parajanov படத்தை இயக்கியிருப்பவர் செர்ஜ் அவெடிக்கியன் மற்றும் ஓலெனா ஃபெடிசோவா. Shadows of Forgotten Ancestors, Ashik Kerib,The Color of Pomegranates போன்ற திரைப்படங்களை உருவாக்கியதன் மூலம் பராஜனோவ் உலகச் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநராகக் கொண்டாடப்படுகிறார். பராஜனோவ்வின் வாழ்க்கை மற்றும் அவரது தோற்றம் எப்போது இருவரை நினைவு படுத்தக்கூடியது. ஒன்று இயக்குனர் ஃபெடரிகோ ஃபெலினி. …

பின்னோக்கிப் பறக்கும் பறவை Read More »

குறுங்கதை 24 தபால்காரன்.

தனக்குத் தானே தபால் எழுதிக் கொள்ளும் ஒருவர் இருந்தார். எழுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தனியே வசித்தார். அவரது இருபதிமூன்றாவது வயதில் மனைவி இறந்து போனார். அதன்பிறகு அவர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவு என்று அவரைத் தேடி வர எவருமில்லை. அவருக்குச் சொந்தமாக மலைச்சரிவில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் ஒரு பகுதியில் வீடு அமைத்துக் கொண்டு வீட்டின் பின்னால் காய்கறிகள் விளைவித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் இரண்டு பிளம்ஸ் மரங்கள் …

குறுங்கதை 24 தபால்காரன். Read More »