கன்னடத்தில்

THUSHARA  கன்னட மாத இதழில் எனது சிறுகதை காந்தியைச் சுமப்பவர்கள் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் கே நல்லதம்பி. ••• மார்ச்2 2020

குறுங்கதை 23 வீடென்பது

சந்தையில் திரியும் மனிதர்களைப் போலப் புதிய வீடுகள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கின்றன. புதிய வீடுகளுக்குத் தனது பெருமைகளை எவ்வளவு சொல்லியும் நிறைவு வருவதேயில்லை. ஒரு புது வீடு சொன்னது “வீடென்பது ஒரு மலர். அதன் வாசனை வசிப்பவர்களின் இயல்பாலே வெளிப்படுகிறது.“ கொஞ்சம் பழசாக ஆரம்பித்தவுடன் அவை தன்னைப் பிறர் கவனிப்பதில்லை என்று மெலிதாகப் புகார் சொல்ல ஆரம்பிக்கின்றன. இப்போதும் தான் அழகு தான் என்று சுயசமாதானம் செய்து கொள்கின்றன. நடுத்தர வயதுப் பெண் தனது திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பதைப் போல ஆதங்கத்துடன், வெட்கத்துடன் நினைவில் ஆழ்ந்து …

குறுங்கதை 23 வீடென்பது Read More »

லண்டனில் காந்தி.

காந்தியின் சுயசரிதையில் உள்ள ஒரு சிறு குறிப்பை வைத்துக் கொண்டு இந்த நாவலை கீத் ஹெல்லர் எழுதியிருக்கிறார். மார்த்தாவும் அவரது கணவர் சாமுவேலும் பிரிட்டனின் ஹெட்ஜ் எண்ட் கிராமப்புறத்தில் தங்கள் முதுமையைக் கழிக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு, காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், மார்த்தாவிற்கு மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஹரிலாலிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் காந்தியோடு மார்த்தாவிற்கு இருந்த நீண்ட காலக் கடிதத் தொடர்பு குறித்துத் தான் அறிவேன் என்றும் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …

லண்டனில் காந்தி. Read More »

குறுங்கதை-22 இனிப்புப் பொட்டலம்

ஒரு பொட்டலம் பூந்தி இவ்வளவு வெறுப்பை உருவாக்கிவிடும் என ஒரு போதும் நினைத்ததில்லை. ஆனால் அப்படித்தான் நடந்தது. இன்றைக்கும் எனக்குப் பூந்தி பிடிக்காது. அதற்குக் காரணம் எனது மூத்த அண்ணன் பாபு. நிலத்தரகராக வேலை செய்த என் அப்பா எப்போதும் இரவு பத்து மணிக்கு தான் வீடு திரும்புவார். அவர் வரும் போது தள்ளுவண்டிக்கடையில் ஒரு பொட்டலம் பூந்தி,கொஞ்சம் காரசேவு அல்லது பக்கோடா வாங்கிக் கொண்டு வருவார். நாங்கள் ஐந்து பிள்ளைகள் இருந்த போதும் அப்பா உறங்கிக் …

குறுங்கதை-22 இனிப்புப் பொட்டலம் Read More »

குறுங்கதை-21 வண்ணங்களின் தாய்.

ஓவியர் வின்சென்ட் வான்கோ வீடு திரும்பும் போது இரவாகியிருந்தது. இன்றும் அவரால் நினைத்தபடியே ஓவியம் தீட்டமுடியவில்லை. கோதுமை வயலினைக் கடந்து செல்லும் காற்றை வரைய அவர் போராடிக் கொண்டிருந்தார். நினைத்தபடி படம் வரவில்லை. ஆகவே சோர்ந்து போய் வீடு திரும்பியிருந்தார். வீட்டின் கணப்பு அடுப்பிற்கு விறகுகள் இல்லை. சமைத்து உண்பதற்கு உருளைக்கிழங்குகள் கிடையாது. பசி . தாங்க முடியாத பசி அவரை வாட்டியது. பனிக்காலத்தின் இரவுகள் தனிமையை அதிகம் உணர்த்தக்கூடியவை. குளிர் உடலை விடவும் மனதை அதிகம் …

குறுங்கதை-21 வண்ணங்களின் தாய். Read More »

குறுங்கதை 20 புத்தரைச் சந்தித்த கழுகு

ராஜகிருகத்தை நோக்கி புத்தர் நடந்து கொண்டிருந்த நாளில் ஒரு கழுகு அவரைச் சந்திப்பதற்காகத் தரையிறங்கியது.  கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான நகங்களும், அகண்ட இறக்கைகளும் கொண்ட அக்கழுகு கேட்டது “கோதமரே நீங்கள் ஏன் பறப்பதில்லை.“ புத்தர் சொன்னார் “நானும் பறக்கவே செய்கிறேன். ஆனால் வானத்தில் அல்ல“ கழுகு மறுபடியும் கேட்டது “வானில் பறக்கையில் பெரியதாக உள்ள உலகம் தரையிறங்கும் போது சிறியதாகிவிடுகிறது.. அது ஏன்“ கோதமர் சொன்னார் “பறத்தலின் போது நீ உடலை வெல்கிறாய். பூமியில் …

குறுங்கதை 20 புத்தரைச் சந்தித்த கழுகு Read More »

குறுங்கதை -19 பிரார்த்திக்கும் ரோபோ.

அந்த இளைஞன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியிருந்தான். அது ஒரு வகை ரோபோ. வேலை வேலை என்று பரபரப்பாக ஒடிக் கொண்டேயிருந்த காரணத்தால் அவனுக்குப் பிரார்த்தனை செய்ய நேரமில்லை. ஆகவே அவன் பொருட்டான பிரார்த்தனைகளைச் செய்யப் புதிய ரோபோவை உருவாக்கியிருந்தான். சின்ன வயதில் கடவுள் தன் வீட்டுப் பூஜையறையில் வசிப்பதாகவே நம்பிக் கொண்டிருந்தான். வயது வளர வளர அவன் கடவுளிடமிருந்து விலகிப் போனான்.. கல்லூரி வயதில் பிரார்த்தனை என்பது இயலாமைகளின் பட்டியல் என்று தோன்றியது. …

குறுங்கதை -19 பிரார்த்திக்கும் ரோபோ. Read More »

பிளாபர்ட்டின் குறிப்புகள்.

“Art is nothing but this strange translation of thought by form.” – Gustave Flaubert பிரெஞ்சு எழுத்தாளர் குஸ்தாவ் பிளாபர்ட் (Gustave Flaubert)  எழுதிய Intimate Notebook என்ற குறிப்பேட்டினை வாசித்தேன். அவரது மருமகள் கரோலின் மூலம் இந்தக் குறிப்பேடு கண்டறியப்பட்டு வெளியாகியுள்ளது. 1856 ஆம் ஆண்டு பிளாபர்ட் எழுதிய மேடம் பவாரி நாவல்  உலகப்புகழ்பெற்றது. இந்த நாவலின் பாதிப்பிலிருந்தே டால்ஸ்டாய் தனது அன்னாகரீனினா நாவலை எழுதினார். மேடம் பவாரி ஐந்து முறை படமாக்கப்பட்டிருக்கிறது. பிளாபர்ட் உடலின்பத்தைக் …

பிளாபர்ட்டின் குறிப்புகள். Read More »

குறுங்கதை -18 சிறைச்சாலை மலர்கள்

அவனைத் திருடன் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவனது தோற்றம் சாதுவைப் போலிருந்தது. மெலிந்த உருவம் கொண்டிருந்தான். யானையின் கண்களைப் போன்ற கூர்மையான பார்வை. சுவருடன் ரகசியம் பேசுகிறவன் போல சிறைச்சாலையின் சுவரைப் பார்த்து பகலெல்லாம் அமர்ந்திருந்தான். காவலாளிகள் சில நேரம் அவனிடம் கேள்வி கேட்கும் போது கூட விரல்களால் காற்றில் எழுதியே பதில் தருவான். அந்தச் சிறைச்சாலை ஒரு தீவிலிருந்தது. சவப்பெட்டியைப் போலச் சிறியதாக இருந்த அவனது சிறையில் எலி செத்துக்கிடப்பது போல ஒரு …

குறுங்கதை -18 சிறைச்சாலை மலர்கள் Read More »