மோலியரின் நாயகன்.

பிரெஞ்சு சினிமாவில் சின்னஞ்சிறிய கதையை வைத்துக் கொண்டு எத்தனை அழகான படத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நேற்றிரவு CYCLING WITH MOLIÈRE என்ற பிரெஞ்சுப் படத்தைப் பார்த்தேன். பிலிப் லு குவே இயக்கியது.  இரண்டு நடிகர்கள் ஒன்றுகூடி மோலியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றுக்காக ஒத்திகை பார்ப்பது தான் கதை. இதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான படத்தைத் தந்திருக்கிறார்கள் கார்த்தியே, பிரான்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நடிகன். அவனது Dr. Morange தொலைக்காட்சித் தொடருக்கு பெரும் வரவேற்பு. போகுமிடமெல்லாம் ரசிகர்கள் அவனைச் சூழ்ந்து …

மோலியரின் நாயகன். Read More »

குறுங்கதை 17 அந்தச் சிறுவன்

சக்கரவர்த்தியின் புதிய உடைகள் என்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தினமும் புதுப்புது மோஸ்தரில் ஆடைகளை அணிய ஆசை கொண்ட அரசனுக்குப் பாடம் கற்பிக்க இரண்டு நெசவாளிகள் அரூப அடை நெய்து தருவதாக வாக்களித்தார்கள். அதன்படியே அவர்கள் நெய்து தந்த கண்ணுக்குப் புலப்படாத ஆடையை அணிந்து கொண்ட சக்கரவர்த்தி தெருவில் ஊர்வலம் வந்த போது ஊரே கண்ணுக்குப் புலப்படாத உடையைப் பாராட்டியது. ஆனால். ஒரு சிறுவன் மட்டும், “சக்கரவர்த்தி ஆடையே அணியவில்லை. அம்மணமாக இருக்கிறார்“ என்று உண்மையை உரத்துச் சொன்னான். …

குறுங்கதை 17 அந்தச் சிறுவன் Read More »

நவீன சிற்பக்கலை

சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும் என்ற நூலின் அறிமுக விழா மார்ச் 3 (03.03.20) செவ்வாய்கிழமை மாலை சென்னை எஸ்பிளனேட் ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி குறித்து உரையாற்றுகிறேன் கும்பகோணத்தில் வசித்து வரும் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி உலகப்புகழ்பெற்றவர்.  கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் சிற்பத்துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். மரபும் நவீனமும் ஒன்று சேர்ந்த புதிய கலைப்படைப்புகளை உருவாக்கி வருபவர்.  இவரது படைப்புகள் குறித்து கலைவிமர்சகர் தேனுகா சிறப்பாக எழுதியிருக்கிறார். •• …

நவீன சிற்பக்கலை Read More »

குறுங்கதை 16 நினைவுகளின் குடுவை

விண்ணாரம் என்ற அந்த மலை மிக உயரமானது. பதினெட்டு வயது இளைஞனாக இருந்த அவன் உற்சாகமாக மலையேறினான். கடினமான பாதையில் கூட அவன் சோர்ந்து போகவில்லை. மலையின் உச்சிக்கு வந்து நின்றபோது மலை அவனிடம் கேட்டது. “எதற்காக இங்கே வந்திருக்கிறாய்“ “மனது நிறையச் சந்தோஷம் நிரம்பியிருக்கிறது. அதைக் கொடுத்துப்போகவே வந்திருக்கிறேன்“ என்றான் இளைஞன் “உன் சந்தோஷத்தைக் கொடு, அதை மேகங்களாக்கி வானில் மிதக்க விடுகிறேன்“ என்றது மலை. இளைஞன் அப்படியே செய்தான். அந்த இளைஞனுக்குச் சில ஆண்டுகளில் …

குறுங்கதை 16 நினைவுகளின் குடுவை Read More »

வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெறும் கே.வி .ஜெயஸ்ரீக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துக்கள் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள் நாவலின் மொழிபெயர்ப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதுணையாக இருந்த  நண்பர் பவா மற்றும் ஷைலஜாவிற்கு பாராட்டுகள்

குறுங்கதை 15 உடைவாளின் பாடல்

யுத்தம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போர்வீரனுக்குத் தனது உடைவாள் ஏதோ முணுமுணுப்பது போன்ற சப்தம் கேட்டது. சொல்வதற்கு உடைவாளிற்கு என்ன இருக்கப்போகிறது என அவன் கண்டுகொள்ளவில்லை. ஆற்றைக் கடப்பதற்காக அவன் படகிற்குக் காத்திருந்த போது அவனது உடைவாள் பாடத்துவங்கியது. மெல்லிய குரலில் வென்ற நிலத்தை,கொன்ற மனிதர்களைப் பற்றிய பெருமைகளைப் பாட ஆரம்பித்தது . உடைவாள் கூடப் பெருமை பேசுகிறதே என வியந்தபடியே அந்தப்பாடலை ரசித்தான் போர்வீரன். ஆற்றினைக் கடந்து மறுகரைக்குப் போன போது உடைவாள் சப்தமாக …

குறுங்கதை 15 உடைவாளின் பாடல் Read More »

எழுத்தின் பிறப்பு

“தி கிங்ஸ் லெட்டர்ஸ்” என்ற கொரியத் திரைப்படத்தைப் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான வரலாற்று திரைப்படம். ஹங்குல் எனப்படும் இன்றுள்ள கொரிய மொழியின் அகரவரிசை எழுதும் முறை எவ்வாறு மன்னர் செஜோங்கால் உருவாக்கப்பட்டது என்பதை மிக அழகாகச் சித்தரித்துள்ளார்கள். சினிமாவாக எடுப்பதற்கு மிகக் கடினமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்து எவ்வளவு நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார்கள் என்பது வியக்கவைக்கிறது. 1443 ஆண்டுவரை கொரிய மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. சீன மொழியின் எழுத்து வடிவத்தைக் கொண்டே கொரிய மொழி …

எழுத்தின் பிறப்பு Read More »

குறுங்கதை 14 புதுக்குரல்

திடீரென ஒரு நாளில் அந்த நகரிலிருந்த சுவர்க்கடிகாரங்கள் யாவும் தன் ஒலியைத் தானே மாற்றிக் கொண்டுவிட்டன. டிங் டிங் என அதன் ஒலிக்கும் ஓசை நீண்டகாலமாகவே ஒரே போலிருந்தது தான் காரணமா, இல்லை ஓசை எழுப்பாத கடிகாரங்கள் வந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படி மாறியதா எனத் தெரியவில்லை. ஆனால் சுவர்க்கடிகாரத்திலிருந்து க்கூ க்கூ என விசித்திரமாகப் பறவையின் ஒலி போலச் சப்தம் வர ஆரம்பித்தது. அரண்மனை அலங்கார கடிகாரம் ஒன்று இப்படிச் சபதமிடுவதாக மக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். …

குறுங்கதை 14 புதுக்குரல் Read More »

குறுங்கதை -13 பெருங்கோபம்

கூழாங்கல்லின் அளவிலே இருந்தது அந்தத் தவளை. ஆனால் அதன் கோபம் கருநாகத்தின் சீற்றம் போல வெளிப்பட்டது. தன்னைச் சுற்றி நடக்கும் மோசமான செயல்களைக் கண்டு அத்தவளை பெருங்கோபம் கொண்டிருந்தது. எதுவும் சரியாக நடக்கவில்லை. யாரும் சரியானவர்களில்லை என்று சதா புலம்பிக் கொண்டேயிருந்தது. சுயநலம், அப்பட்டமான சுயநலம் என்று மற்ற விலங்குகளைப் பார்த்துக் குற்றம் சாட்டியது. தவளையின் கோபம் கள்ளப்பார்வையுடன் திரியும் ஓநாய் மீது திரும்பியது “எவரையும் அடித்துக் கொல்வதிலே குறியாக இருக்கிறாய். உன் புத்தி அற்பமானது. நான் …

குறுங்கதை -13 பெருங்கோபம் Read More »