சினிமாவே வாழ்க்கை.

இசைவிமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்ட ஷாஜியை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். எப்போது சந்தித்தாலும் அவரது பேச்சின் ஊடே சினிமாவும் இசையும் இலக்கியமும் பீறிடும். இசையின் மீது இத்தனை பித்து கொண்ட ஒருவரை நான் கண்டதில்லை. ஆழ்ந்து கரைந்து இசை கேட்கக் கூடியவர். அது போலவே தான் சினிமாவும். உலகச் சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை ஆராய்ந்து பேசக்கூடியவர். மிஷ்கின் படங்களில் நடிக்கத் துவங்கி தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் தொடர்ந்து …

சினிமாவே வாழ்க்கை. Read More »

நன்றி ஜெயமோகன்

நண்பர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எனது சென்னையும் நானும் காணொளித் தொடர் பற்றி பாராட்டி எழுதியிருக்கிறார். கூடவே அதன் இணைப்புகளையும் தந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி. ஜெயமோகன் இணையதளத்தில் எழுதியுள்ள பதிவு. •• சென்னையும் எஸ்.ராமகிருஷ்ணனும் எஸ்.ராமகிருஷ்ணன் சென்னையும் நானும் என்ற தலைப்பில் தொடர்ச்சியாகப் பேச ஓர் ஆவணப்படத்தன்மையுடன் அமைந்த யூடியூப் காணொளித்தொடர் இதுவரை பத்து பகுதிகள் வெளியாகியிருக்கின்றன திடீரென்று யூடியூப் பிரபலமாகிவிட்டிருக்கிறது. அதை பலபேர் பார்க்கிறார்கள் – பணமும் வருகிறது. ஆனால் பார்க்கத்தக்க …

நன்றி ஜெயமோகன் Read More »

குறுங்கதை -12 இரண்டு பிரார்த்தனைகள்

புதிதாகத் திருமணமாகி கணவன் வீடு வந்த இளம்மனைவி சமையலறைக்குள் நுழைந்தாள். முதல்நாள் சமைக்கப்போகிறோம் என்ற பதைபதைப்பு அவளுக்குள்ளிருந்தது. அடுப்பின் முன்னால் வந்து நின்று இரண்டு பிரார்த்தனைகளைச் செய்தாள். ஒன்று நெருப்பிடம். மற்றொன்று உப்பிடம் நெருப்பிடம் அவள் பிரார்த்தனை செய்தாள். “மிகாமலும் குறையாமலும் துணையிருந்து சமைப்பதில் உதவி செய். உன் கோபத்தை காய்கறிகளிடம் காட்டாதே. உன் கருணையால் உணவினை வேகச்செய். பதமாக்கு. ருசிக்கச் செய்.“ உப்பிடம் இது போல அவள் பிரார்த்தனை செய்தாள். “கூடாமலும் குறையாமலும் துணையிருந்து சமைப்பதில் …

குறுங்கதை -12 இரண்டு பிரார்த்தனைகள் Read More »

பேரெழில் பனிமலை

மலையேற்றம் பற்றிய திரைப்படங்களைக் காண்பது எனக்குப் பிடிக்கும். உயிரைப் பொருட்படுத்தாமல் பனியில் வீரர்கள் மலையேறுவதைக் காணும் போது நாம் அறிந்துள்ள மலையும் அவர்கள் அறிந்துள்ள மலையும் வேறு என்பது நன்றாகப் புரியும். Cliffhanger என்ற படத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பாகப் பார்த்திருக்கிறேன். சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மலையேற்ற வீரராக நடித்திருப்பார். பரபரப்பான ஹாலிவுட் திரைப்படம். The Climbers என்ற 2019ல் வெளியான சீனப்படமும் எவரெஸ்ட் மலையேறும் சீன ராணுவக் குழுவின் முயற்சிகளையே விவரிக்கிறது. இந்த இரண்டு படங்களின் கலவையான …

பேரெழில் பனிமலை Read More »

இலக்கியச் சிந்தனை விருது

2019ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடனில் வெளியான எனது சிற்றிதழ் கதையை  இலக்கியச் சிந்தனை தேர்வு செய்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா ஏப்ரல் 14 அன்று நடைபெறவுள்ளது.  இந்த தகவலை இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப.லட்சுமணன் தெரிவித்துள்ளார். சிறுகதையை வெளியிட்ட ஆனந்தவிகடனுக்கும் விருது அளிக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் மிகுந்த நன்றி. எனது புதிய சிறுகதைத் தொகுதியான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன்.

யுத்தமுனையிலிருந்த இளம் போர்வீரன் ஒவ்வொரு நாளும் தனது மனைவியை, பிள்ளைகளை, தாயை, சொந்த வீட்டினை, வீட்டுச் சுவரில் ஓடியாடும் அணிலை, எப்போதாவது வந்து போகும் பச்சை கழுத்து புறாவை நினைவு கொண்டபடியே இருந்தான். சில வேளைகளில் அவன் நினைவில் வீட்டுப்பசுவின் கழுத்துமணி சப்தம் கூடக் கேட்கும். அடுப்பில் தாளிக்கும் மணம் கூட நாசியைத் தொடும். படியில் கிடந்த மனைவியின் செருப்பில் ஒட்டியிருந்த சேறு கூடத் துல்லியமாகத் தெரியும். இவ்வளவு ஏன் உறங்கும் குழந்தைகளின் சீரான மூச்சொலி கூட …

குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன். Read More »

வேண்டுகோள்

எனது புத்தக வெளியீடுகள்,  இலக்கிய நிகழ்ச்சிகள், இணையதளம், பேருரைகளுக்காக எப்போதும் கைப்பணத்தை தான் செலவழித்து வருகிறேன். மிக அரிதாக சில நண்பர்கள் உதவி செய்வார்கள்.  அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடைக்கவில்லை.  அதைப் பற்றி நான் பெரிதாக  கவலைப்படவில்லை. எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன் என்பதால் எனது கஷ்டங்கள் நான் உருவாக்கிக் கொண்டவை என்று புரிந்தே இருக்கிறேன். தற்போது தேசாந்திரி Youtube சேனலில் சென்னையும் நானும் என்ற வீடியோத் தொடரைப் பகிர்ந்து வருகிறேன். 12 பகுதிகளாக இதன் முதற்சீசன் …

வேண்டுகோள் Read More »

வீட்டிற்கு வந்த பறவை

World Literature Today என்ற இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமகால உலக இலக்கியப்போக்குகளை அறிந்து கொள்ளவும் சிறந்த மொழியாக்கங்களை வாசிக்கவும் உதவும் பத்திரிக்கை. இந்தியாவிற்கான இதன் ஆண்டுச் சந்தா 150 டாலர். இதன் பழைய இதழில் ஃபக்ரி காவர்(Fakhri Kawar) என்ற ஜோர்டான் எழுத்தாளரின் A Bird in My House என்ற கதையை வாசித்தேன். அற்புதம். மிக வித்தியாசமான கதை. இக்கதையை வாசித்தபிறகு ஃபக்ரி காவரின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் ஒன்றிரண்டே வாசிக்கக் கிடைக்கின்றன. …

வீட்டிற்கு வந்த பறவை Read More »

மும்பை இலக்கிய விழா

கடந்த மூன்று நாட்களாக மும்பை கேட்வே லிட்பெஸ்டிவலில் கலந்து கொண்டிருந்தேன். இந்தியா முழுவதுமிருந்து முக்கிய எழுத்தாளர்கள் பலரும் வந்திருந்தார்கள். இந்திய இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து நான்கு முக்கிய அமர்வுகள் நடைபெற்றன. NCPA அரங்கம் மிக அழகானது. பல்வேறு நாடக அரங்குகளை ஒன்றாகக் கொண்ட வளாகமது. அமர்வில் விவாதித்ததை விடவும் அரங்கிற்கு வெளியே எழுத்தாளர்களுடன் கூடிப் பேசி ஒன்றாக நாளைக் கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்விற்கு வந்திருந்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து உரையாடினேன். மலையாள எழுத்தாளர் உண்ணி, …

மும்பை இலக்கிய விழா Read More »