கவிஞனும் காவல்துறையும்

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் பாரதியை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும். இந்தப் பெரும்பணியைச் செய்த சீனி.விசுவநாதன் மிகுந்த பாராட்டிற்குரியவர். இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு …

கவிஞனும் காவல்துறையும் Read More »

பாரதி விழாவில்

டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் கலந்து கொண்டேன். காலை பாரதியார் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினேன். பாரதி இல்லத்திலிருந்து நினைவு மண்டபம் வரை ஊர்வலம் சென்றது. நிறையப் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பாரதி மண்டபத்தில் நடைபெற்ற பாரதி தரிசனம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினேன். பாரதி அன்பர்கள் பலரும் வெளியூர்களிலிருந்து வந்திருந்தார்கள். எழுத்தாளர் பொன்னீலன் நிகழ்விற்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து உரையாடினேன். பொன்னீலனுடன் எழுத்தாளர் ராம் தங்கம் உடன் வந்திருந்தார். …

பாரதி விழாவில் Read More »

பறவைகளின் பாதை.

ஒரு படத்தின் துவக்கக் காட்சிகள் மிகுந்த கவித்துவமாக இருந்துவிட்டால் அது ஒட்டுமொத்த படத்திற்குமான மனநிலையை உருவாக்கிவிடும் என்பதற்கு நேற்று பார்த்த Birds of Passage படமே சான்று . சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இதுவே மிகச்சிறந்த துவக்கக்காட்சி கொண்டிருக்கிறது. கொலம்பியாவின் வயு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜைதா என்ற இளம்பெண் தன்னுடைய முகத்தை மறைத்தபடியே இறக்கை போலத் தன்மேல் போர்த்தப்பட்ட சிவப்பு ஆடையை,  விரித்து ஆடுகிறாள். அவளது அனுமதியுடன் ஒரு ஆண் அவளைப் பின்னோக்கி வட்டமிடுகிறான். …

பறவைகளின் பாதை. Read More »

எட்டயபுரத்தில்

நாளை  டிசம்பர் 11  புதன்கிழமை எட்டயபுரத்தில் நடைபெறவுள்ள பாரதி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். தினமணி இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது. காலை பத்துமணிக்கு பாரதி தரிசனம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றுகிறேன்.

மறுபதிப்புகள்

தேசாந்திரி பதிப்பகம் அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பை சென்னை புத்தகக் கண்காட்சிக்காக  வெளியிடுகிறது.

ஒமானில்

சோலை வாசகர் வட்டம் சார்பில் நேற்று இக்கூட்டம் ஒமானில் நடைபெற்றுள்ளது. துணையெழுத்து குறித்து உரையாற்றியவர்களுக்கும் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கும் நன்றி ••

மதுரையில்

மதுரை வாசகர் வட்டம் சார்பில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது இடக்கை நாவல் குறித்து உரையாற்றுபவர் :  A. சண்முகநாதன். ஒருங்கிணைப்பு : பேராசிரியர் ஜி. ராமமூர்த்தி நாள் : 14.12.2019 சனிக்கிழமை நேரம்: காலை 11 மணி இடம் : மதுரை பிரம்ம கான சபா. மேலப் பெருமாள் மேஸ்திரி தெரு ( சென்னை சில்க்ஸ் அருகில்)  மதுரை. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைக்கிறேன். ••

பறக்கும் புத்தகங்கள்

ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமான THE FANTASTIC FLYING BOOKS OF MR. MORRIS LESSMORE பார்த்தேன். புத்தகங்களின் முக்கியத்துவத்தை இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. இணையத்தில் இந்தப்படம் காணக்கிடைக்கிறது. குழந்தைகள் பெரியவர் என அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காண வேண்டும். படத்தின் துவக்கத்தில் புத்தகத்தை நேசிக்கும் திரு. மோரிஸ் லெஸ்மோர் ஒரு ஹோட்டலின் பால்கனியில் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் புத்தகங்கள் தான் உலகம். சொற்கள் தான் துணை. ஒவ்வொரு நாளும் தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவர் …

பறக்கும் புத்தகங்கள் Read More »

இன்னொரு பறத்தல்

சமகால உலக சினிமாவின் முக்கிய திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அன்னாகரீனினா பற்றிய புதிய ரஷ்யத் திரைப்படம். வான்கோ பற்றிய திரைப்படம், மற்றும் எழுத்தாளர்கள் குறித்த பல்வேறு உலகத் திரைப்படங்களை விவரிக்கிறது இந்நூல். டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

சொற்களின் புதிர்பாதை

இலக்கிய ஆளுமைகள்,  புத்தகங்கள்  குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இணையத்திலும், இலக்கிய இதழ்களிலும் வெளியான 24  கட்டுரைகளை உள்ளடக்கியது. ஒ.வி.விஜயன். அசோகன் செருவில். அஷ்டமூர்த்தி போன்ற மலையாளப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளும் இதில் உள்ளன. டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.