மோனேயின் மலர்கள்

பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே மற்றும் ஐரோப்பிய ஒவியர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. ஒவியங்கள் குறித்த எனது கட்டுரைத் தொகுப்புகளின் தொடர்ச்சியாக இதை எழுதியிருக்கிறேன்.  இதில் ஒவியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படங்களையும்  அறிமுகம் செய்திருக்கிறேன். டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

கவிதையின் கையசைப்பு

சமகால உலகக் கவிஞர்கள் குறித்து விகடன் தடம் இதழில் எழுதிய பத்தியின் தொகுப்பு.  கவிஞர் தேவதச்சனும் சமயவேலும் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்நூல் சமகால உலகக் கவிதைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான வழிகாட்டி. டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

டிசம்பர் 25

டிசம்பர் 25 புதன்கிழமை மாலை ஆறுமணிக்கு தேசாந்திரி பதிப்பகம்  சார்பில் சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வினை முன்னிட்டு இத்தாலிய இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான இதாலோ கால்வினோ (Italo Calvino) குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன் புனைவின் புதிய சாத்தியங்களைத் தனது எழுத்துகளின் மூலம் உருவாக்கிக் காட்டியவர் கால்வினோ.   இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. கால்வினோவின் புலப்படாத நகரங்கள்  நாவல் தமிழில் சா. …

டிசம்பர் 25 Read More »

சாத்தூர் கல்லூரியில்

நேற்று சாத்தூர் எஸ்.இராமசாமி நாயுடு  கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இலக்கியவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். கல்லூரியின் முதல்வர் டாக்டர். சே.கணேஷ்ராம் அவர்கள் தலைமை உரையாற்றினார். முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு.V.அழகிரிசாமி அவர்கள் முன்னிலை வகித்து  சிறப்பாகப் பேசினார். திரு.சந்திரகாந்தன் கல்லூரி மாணவ மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகளை அறிமுகம் செய்தார் இந்த நிகழ்வினை டாக்டர் அறம் ஏற்பாடு செய்திருந்தார். அவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் மகன்.  தந்தையைப் …

சாத்தூர் கல்லூரியில் Read More »

எழுத்தாளனுடன் வாழுவது

Living with  a Writer என்ற கட்டுரைத் தொகுப்பினை வாசித்தேன். எழுத்தாளனுடன் வாழ்வது குறித்துப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மனைவி அல்லது கணவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். BBC TV series ‘Walking with Dinosaurs’ எனத் தலைப்பே பயமுறுத்துகிறதே என்று ஒரு கட்டுரையின் துவக்க வரியுள்ளது. நிஜம் தானே. எழுத்தாளனுடன் சேர்ந்து வாழுவது என்பது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது போலாகும். எப்போது ஊஞ்சல் சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் எப்போது நரகத்தை நோக்கித் …

எழுத்தாளனுடன் வாழுவது Read More »

கல்லின் கனவு.

மைக்கேலாஞ்சலோ – இன்பினிடோ (Michelangelo-Infinito) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் இயக்குனர் Emanuele Imbucci . மைக்கேலாஞ்சலோவாக நடித்திருப்பவர் Enrico Lo Verso. ஓவியர்களையும் சிற்பிகளையும் பற்றிய திரைப்படங்களை எப்படி இத்தனை கலை நேர்த்தியாக உருவாக்குகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. தோற்றமும் உடையும் நடிப்பும் ஒளிப்பதிவும் அபாரம். இந்தத் திரைப்படம் மைக்கேலாஞ்சலோவின் முக்கியக் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டதின் பின்புலத்தையும் அவரது காலகட்டத்தைச் சேர்ந்த சக கலைஞர்களையும், அதிகார நெருக்கடிகளையும் முதன்மைப்படுத்துகிறது. படத்தின் சட்டகம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மைக்கேலாஞ்சலோ கதையை …

கல்லின் கனவு. Read More »

ஒளியே துணை

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது தேவமலர் மற்றும் மதகுரு ஆகிய நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நாவல்களை க..நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். தேவமலர் எனக்கு மிகவும் பிடித்த நாவல். தேசாந்திரி பதிப்பகம் மூலம் இதை மறுபதிப்புச் செய்திருக்கிறேன் ஸ்காண்டிநேவிய இலக்கியத்தில் செல்மாவின் இடம் தனித்துவமானது. தொன்மங்கள், நாட்டுப்புறக்கதைகள், தேவதை கதைகள் என மண்ணிலிருந்து உருவான கதைகளின் சரட்டினைக் கொண்டு புதிய புனைவுலகை உருவாக்கியவர் செல்மா. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் …

ஒளியே துணை Read More »

போலி மகள்

பெரிமேஸன் துப்பறியும் போலி மகள் என்ற புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். இந்நாவலைத் தமிழாக்கம் செய்தவர்கள் பெரிமேஸன் என்ற பெயரை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு மற்ற எல்லாக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கும் தாங்களே புதிய பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு வெளியாகும் டப்பிங் படங்களைப் போன்ற டப்பிங் நாவல் போலும். நான்சி என்ற பெண்ணின் பெயரை யசோதா என மாற்றியிருக்கிறார்கள். ஸ்டீவ் என்ற கதாபாத்திரத்திற்குப் பெயர் மோகனசுந்தரம், ஜான் என்பதற்கு மல்லையா, மன்றோ என்பதற்குச் சங்குண்ணி மேனன். …

போலி மகள் Read More »