மீனின் பாடல்

உதிரும் இலைகளின் பாடல் என்ற தலைப்பில் சீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்ட ப. கல்பனா தற்போது மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் எனக் கொரியக்கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவரும் புதுவையில் வசிக்கும் பேராசிரியர் பா. இரவிக்குமாரும் இணைந்து கொரியாவின் முக்கியக் கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் .பரிசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கொரியக்கவிஞரான கோ யுன் குறித்துத் தடம் இதழில் நான் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரை தங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்ததாக ரவிக்குமார் …

மீனின் பாடல் Read More »

பெருஞ்சுவரின் நிழல்

காணக் கிடைக்காத காட்சி என்பார்களே அது பிபிசி தயாரித்துள்ள – A Slow Odyssey: The Great Wall of China என்ற ஆவணப்படத்திற்குத் தான் பொருத்தமானது. வானில் பறந்தபடியே ஒட்டுமொத்த சீனப்பெருஞ்சுவரையும் கேமிரா வழியாக அங்குல அங்குலமாகக் காட்டுகிறார்கள். கூடவே சீனப்பெருஞ்சுவரின் வரலாற்றையும் விவரிக்கிறார்கள். அற்புதமான ஆவணப்படமிது. சீனப்பெருஞ்சுவரை எப்படிக் கட்டினார்கள் என்பதைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒரு ஆவணப்படம் போதும் அதன் முழுமையை நமக்குக் காட்டிவிடுகிறது. சீனப்பெருஞ்சுவர் ஒரு மன்னரால் …

பெருஞ்சுவரின் நிழல் Read More »

துறவியின் காதல்

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவல் ஒரு இளைஞன் வீட்டிலிருந்து வெளியேறி துறவு வாழ்க்கையை நோக்கிப் போவதை விவரிக்கிறது. ஞானத்தைத் தேடும் சித்தார்த்தன் முடிவில் அதை எப்படி அடைகிறான் என்பதை ஹெஸ்ஸே அழகாக விவரித்திருக்கிறார். சித்தார்த்தா நாவலின் மறுபக்கம் போன்றதே நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான அனடோல் பிரான்ஸ்(anatole france) எழுதிய தாயிஸ் (THAIS) இந்நாவலை தாசியும் தபசியும் என்ற தலைப்பில் எஸ். சங்கரன் மொழி பெயர்த்திருக்கிறார். தபசி என்ற சொல்லை இன்று எவரும் பயன்படுத்துவதில்லை. தவம் …

துறவியின் காதல் Read More »

கும்னாமி

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் கடைசி நாட்களையும், அவர் விமான விபத்தில் இறந்து போனது உண்மை தானா என்பதையும் ஆராயும் விதமாகப் பெங்காலியில் கும்னாமி (Gumnaami) என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக அப்படத்தைப் பார்த்தேன். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய இப்படம் நேதாஜியின் மரணம் குறித்து ஆராய உருவாக்கப்பட்ட முகர்ஜி கமிஷன் விசாரணையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் கறுப்பு வெள்ளையில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை …

கும்னாமி Read More »

சென்னையும் நானும் – 1

சென்னையும் நானும் என்ற வீடியோ தொடரின் முதற்பகுதி இன்று வெளியாகியுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இத் தொடர் வெளியாகும். தேசாந்திரி youtube சேனலில் இதைக் காணலாம் முதற்பகுதி : https://youtu.be/GFB_TvClSCQ 22/11/2019

மார்க்வெஸின் மஞ்சள் ரோஜாக்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வாழ்க்கையை விவரிக்கும் GABO: THE CREATION OF GABRIEL GARCIA MARQUEZ என்ற ஆவணப்படத்தினைப் பார்த்தேன். கொலம்பியாவின் வடபகுதியிலுள்ள அரகடகா என்ற சின்னஞ்சிறிய ஊரில் பிறந்து எவ்வாறு உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராக உருவானார் என்பதைப் படம் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மார்க்வெஸின் ஊருக்கு ரயில் வரும் காட்சியைக் காணும் போது அவரது செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம் என்ற கதை நினைவில் வந்து போனது. அரகடகா வாழைத்தோட்டங்கள் நிரம்பிய நிலப்பரப்பு. …

மார்க்வெஸின் மஞ்சள் ரோஜாக்கள். Read More »

வாசகர் சந்திப்பு

கோவை ஒடிஸி புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற வாசகர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. புத்தகக் கடையினுள் உள்ள சிறிய இடம் என்பதால் நிறைய பேருக்கு இருக்கை போட முடியவில்லை. நின்று கொண்டே உரையைக்கேட்டார்கள். ஒரு மணி நேர உரையும் அதைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடலும் நடைபெற்றது. அதிகம் ஆங்கிலப் புத்தகங்களை விற்கும் ஒடிஸி போன்ற நிறுவனம்  தமிழ் புத்தகங்களுக்குத் தனிப்பிரிவு அமைத்து சிறப்பு புத்தகக் கண்காட்சி நடத்துவது பாராட்டிற்குரிய விஷயம். 21.11.2019

கோடுகளின் உயிரியக்கம்

அ.பெருமாள் சாந்தி நிகேதனில் பயின்ற ஓவியர். மதுரையில் வசித்து வந்த அவர் ஓவியக்கலை குறித்த சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஓவியக்கலை- நந்தலால் போஸ். பெருமாள்  1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். தனது ஆசிரியரும் இந்தியாவின் பெருமைக்குரிய ஓவியருமான நந்தலால் போஸ் ஆற்றிய உரை மற்றும் அவரது கட்டுரைகளை பெருமாள் மொழியாக்கம் செய்திருக்கிறார் நந்தலால் போஸ் நவீன …

கோடுகளின் உயிரியக்கம் Read More »

தேசாந்திரி YouTube சேனலில்

சென்னையும் நானும் குறித்த புதிய  முன்னோட்டம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோத் தொடர் தேசாந்திரி YouTube  சேனலில் வெள்ளிகிழமை  தோறும் வெளியாகும். தொடரைக் காணுவதற்கு தேசாந்திரி YouTube சேனலை  subscribe செய்து கொள்ளுங்கள். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 •• சென்னையும் நானும் முன்னோட்டம் 2 LINK https://youtu.be/s4oIeSnDSSE DESANTHIRI CHANNEL SUBSCRIPTION LINK https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1

பணமே சாட்சி

ஜப்பானியர்கள் சிங்கப்பூரினைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது குறித்த வரலாற்றை மீளாய்வு செய்து ஹேமா எழுதியுள்ள வாழைமர நோட்டு என்ற புத்தகத்தை வாசித்தேன். ஹேமாவின் முதல் புத்தகம் இதுவென்று அறிய நேர்ந்த போது வியப்பாக இருந்தது. மிகச் சிறப்பாக வரலாற்றை எழுதியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஹேமா தனது பணியின் நிமித்தமாகத் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார். சிங்கப்பூரை ஏன் ஜப்பானியர்கள் தாக்கினார்கள். எவ்வாறு தாக்குதல் நடைபெற்றது என்பதைப் பற்றிய வரலாற்று உண்மைகளைத்  துல்லியமாக விவரித்திருக்கிறார். அத்துடன் சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானிய …

பணமே சாட்சி Read More »