கோவையில்

எனது புதிய நாவலான ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை குறித்த கலந்துரையாடல்  கோவையில் நடைபெறவுள்ளது. வாசக சாலை நடத்தும் இந்த நிகழ்வு  டிசம்பர் 24 ஞாயிறு  மாலை பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

மய்யழிக் கரையோரம்.

ஞாயிற்றுகிழமை மாலை மாஹி போயிருந்தேன். மய்யழி ஆற்றின் கரையிலுள்ள அழகான ஊர். கேரளாவினுள் இருந்தாலும் புதுச்சேரி யூனியனுடன் இணைந்த பகுதி. இங்கே தான் எழுத்தாளர் எம். முகுந்தன் வசிக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். முகுந்தனின் புகழ்பெற்ற நாவல் மய்யழிக் கரையோரம். இந் நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை மாஹியிலுள்ள ஒரு பூங்காவில் புடைப்புச் சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் காணுவதற்காகவே சென்றிருந்தேன். மய்யழிக் கரையோரம் நாவல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மாஹியின் கதையில் …

மய்யழிக் கரையோரம். Read More »

கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் 16ம் மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள எழுத்தாளர் சங்க மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். நாளை கண்ணூர் செல்கிறேன்.

சென்னையும் நானும்

நான் சென்னைக்கு வந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனது சென்னை  அனுபவங்களை  ஒரு வீடியோ தொடராக வெளியிட நினைக்கிறேன். தேசாந்திரி யூடியூப் சேனலில் இந்தத் தொடர் வாரம் ஒன்றாக வெளியாகவுள்ளது. இதில்  சென்னை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் சந்தித்த எழுத்தாளர்கள், திரையுலக அனுபவம் மற்றும்  பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சென்னை குறித்து எழுதியது, பேசியது, சென்னையின் வரலாறு என யாவற்றையும் ஒருங்கிணைத்து உரையாற்றயிருக்கிறேன். இதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது சென்னையும் நானும் முன்னோட்டம் https://youtu.be/70svcZnlR9U ••• …

சென்னையும் நானும் Read More »

101 கடிதங்கள்.

கனேடிய எழுத்தாளர் யான் மார்டெல் (yann martel) அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். இந்தப் புத்தகங்களுடன் இதை ஏன் படிக்க வேண்டும் என்பது குறித்த கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதங்களில் அந்த நூலின் எழுத்தாளர் பற்றியும், அப் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் சுருக்கமாக எடுத்துச் சொல்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் என்ன புத்தகங்களை வாசிக்கிறார், எந்தப் புத்தகங்கள் …

101 கடிதங்கள். Read More »

கோவையில்

நவம்பர் 14 வியாழன் மாலை கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள ஒடிஸி புத்தகக் கடையில் வாசகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றுகிறேன். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

வெண்ணிற நினைவுகள்

இந்து தமிழ்திசை நாளிதழில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். வெண்ணிற நினைவுகள் என்ற இந்தத் தொடர்  ஞாயிற்றுகிழமை தோறும் வெளியாகும். தமிழ் சினிமாவின் அறியப்படாத  விஷயங்களை முதன்மைப்படுத்தி இந்தத் தொடரை எழுதவுள்ளேன். இந்தத் தொடரை https://www.hindutamil.in/ ஆன்லைனிலும் வாசிக்கலாம். •••

அஞ்சலி

நண்பர் அருண்மொழியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட எனது சிறுகதையை மையமாகக் கொண்ட நாடகம் ஒன்றை நிகழ்த்துவதாகச் சொல்லி அதைக் காணுவதற்காக அழைத்தார். வெளியூரில் இருக்கிறேன். வர இயலவில்லை என்றேன். தொலைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அருண்மொழியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். அவர் இயக்கிய காணி நிலம், ஏர் முனை  போன்ற  படங்கள் நிறையத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளன. சினிமா பயிலரங்குகள் நிறைய நடத்தியிருக்கிறார். திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகப் …

அஞ்சலி Read More »

காதம்பரி தேவியின் காதல்

ரவீந்திரநாத் தாகூருக்கும் அவரது அண்ணி காதம்பரி தேவிக்குமான நட்பையும் காதலையும் விவரிக்கும் காதம்பரி (Kadambari) என்ற வங்காளப்படத்தைப் பார்த்தேன். சுமன் கோஷ் இயக்கியது . காதம்பரி தேவியாக நடித்திருப்பவர் கொங்கனா சென். காதம்பரி தேவி பற்றிச் சுனில் கங்கோபாத்யாயா Pratham Alo நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். தாகூரின் இந்த காதல் உறவு குறித்தும் இன்றும் சர்ச்சை தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. தாகூரின் சகோதரர் ஜோதிரிந்திரநாத்தின் மனைவியே காதம்பரி தேவி. தாகூரை விடவும் இரண்டு வயது சிறியவர் . …

காதம்பரி தேவியின் காதல் Read More »

இன்னொரு நேர்காணல்

FIRST CITY டெல்லியிலிருந்து வெளியாகும் சுயாதீன கலை மற்றும் கலாச்சார இதழாகும், 19 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது THE FIRST CITY இதழ் பாரீஸ் ரிவ்யூ போலவே தொடர்ந்து எழுத்தாளர்கள், ஒவியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு THE FIRST CITY INTERVIEWS VOLUME 1 -6 வரை வெளியாகியுள்ளன. இதில் vol 5 தொகுதி ஓவியம் மற்றும் சிற்பக்கலைஞர்களின் நேர்காணல்கள் மட்டுமே கொண்டது. இந்தத் தொகுதி …

இன்னொரு நேர்காணல் Read More »