இருவர்

The Zoo Story என்ற எட்வர்ட் ஆல்பியின் நாடகத்தை முப்பது வருஷங்களுக்கு முன்பு மதுரையில் பார்த்தேன். யதார்த்தா பென்னேஸ்வரன் உருவாக்கம் என்று நினைவு. பின்பு இந்த நாடகத்தின் ஆங்கில வடிவத்தைப் பெங்களூரில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத நாடகமது. இன்றுள்ள நாடகக்குழுவினர் யாரும் ஏன் இந்த நாடகத்தை மறுபடியும் நிகழ்த்தவேயில்லை என்று தெரியவில்லை. ஆனால் இரண்டே கதாபாத்திரங்கள் கொண்ட அழுத்தமான நாடகமது. நியூயார்க் நகரத்தின் பூங்காவில் பீட்டர் , ஜெர்ரி எனும் இருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். ,பீட்டர் …

இருவர் Read More »

வசந்தத்தில் ஓர் நாள்

திடீரென சில நாட்கள் காலையில் மனதில் ஒரு பாட்டு ஒடத்துவங்கிவிடுகிறது. அதை உடனடியாகக் கேட்க வேண்டும் என்ற உத்வேகம் உருவாகிறது. அப்படி இன்று காலை, வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடல் மனதில் ஒடி மறைந்தது. அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினேன். பாட்டு முடிந்து போகக்கூடாது என்பது போன்ற மனநிலை உருவானது. திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அது எனது வழக்கம். சில நாட்கள் ஒரே பாடலை நாற்பது ஐம்பது முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள் மறைந்து. …

வசந்தத்தில் ஓர் நாள் Read More »

நன்றி ஷாஜி

மலையாள இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் பற்றிய லிஜின் ஜோஸின் ஆவணப்படம் குறித்து நான் எழுதிய  கட்டுரையை நண்பர் ஷாஜி மலையாளத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அது இம்மாத மாத்யமம் இதழில் வெளியாகிறது. வாட்ஸ்அப் வழியாக அக்கட்டுரையை லிஜின் ஜோஸ் உள்ளிட்ட மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரையும் வாசிக்கச் செய்துள்ளார் ஷாஜி. இன்னொரு பெரிய சந்தோஷம் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளா சென்ற ஷாஜி இக்கட்டுரையை ஜே.ஜி. ஜார்ஜ் அவர்களிடம் வாசித்துக் காட்டியிருக்கிறார். அவரது பாராட்டு எனக்குக் கிடைத்த கௌரவமாகும். …

நன்றி ஷாஜி Read More »

எழுத்தாளனின் உலகம்

THE FRAGRANCE OF GUAVA கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விரிவான நேர்காணல் தொகுப்பு. 120 பக்கங்கள் கொண்டது. கொலம்பிய பத்திரிக்கையாளர் Plinio Apuleyo Mendoza எடுத்த நேர்காணலது. மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இதில் தான் எவ்வாறு எழுத்தாளராக உருவானேன் என்பதில் துவங்கி தனது நம்பிக்கைகள். எழுத்துமுறை, நட்பு. குடும்பம். அரசியல் என மார்க்வெஸ் விரிவாக உரையாடியிருக்கிறார். நான் அடிக்கடி வாசிக்கும் நூலிது. இதன் சில பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற …

எழுத்தாளனின் உலகம் Read More »

குறும்பட வெளியீடு

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள மை டியர் செகாவ் குறும்படத்தின் வெளியீட்டு விழா 28.4.2019 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் நான் ஆன்டன் செகாவ் சிறுகதைகள் பற்றி  சிறப்புரை நிகழ்த்த உள்ளேன். கூடுதல் விபரங்களை இரண்டு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்

விரான்ஸ்கியின் காதல்

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல் முப்பது முறைகளுக்கும் மேலாகத் திரைப்படமாக்கபட்டிருக்கிறது. இம்முறை பிரம்மாண்டமாக Anna Karenina: Vronsky’s Story என ரஷ்ய தொலைக்காட்சித் தொடராக உருவாக்கபட்டிருக்கிறது. இதன் முழுநீள திரைவடிவமும் வெளியிடப்பட்டுள்ளது. அன்னாவின் காதலன் விரான்ஸ்கியின் பார்வையில் உருவாக்கபட்டுள்ள இப்படம் அன்னாகரீனினா நாவலைப் புதிய கோணத்தில் அணுகுகிறது. நாவலில் அன்னா தற்கொலை செய்து கொண்டு இறக்கும் போது அவளது மகன் செர்ஜி கரீனினுக்கு எட்டு வயது. அவன் வளர்ந்து தற்போது ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறான். 1904ல் …

விரான்ஸ்கியின் காதல் Read More »

நன்றி

நேற்று எனது பிறந்த நாளுக்காக நேரிலும் அலைபேசியிலும் இணையத்திலும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. உங்கள் அன்பும் நட்புமே என் எழுத்திற்கான உறுதுணை.

நேர நெறிமுறை நிலையம்

நேர நெறிமுறை நிலையம் என்ற துருக்கி நாவல் நான்கு ஆண்டுகளின் முன்பாக வெளியாகியுள்ளது. காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. துருக்கியின் மிக முக்கிய எழுத்தாளரான அகமத் ஹம்தி தன்பினார் எழுதிய நாவலிது. தன்பினாரின் மொழியும் கதை சொல்லும் விதமும் அபாரம். தமிழில் எத்திராஜ் அகிலன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். எத்திராஜ் அகிலன் நான் பெரிதும் மதிக்கும் மொழிபெயர்ப்பாளர். மிகச்சிரத்தையாக, நுட்பமாக, மூலத்திற்கு மிகவும் நெருக்கமாக மொழியாக்கம் செய்யக்கூடியவர். இந்நாவல் அவரது மொழிபெயர்ப்பின் சாதனை என்றே சொல்வேன். தன்பினார் …

நேர நெறிமுறை நிலையம் Read More »

எட்டரை இடைவெட்டுகள்

மலையாள சினிமாவின் தனித்துவமிக்க இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ். சுவப்நாடனம், இரகல், பஞ்சவடிபாலம் , ஆதாமின்ட வாரியெலு, லேகயுடெ மரணம்:ஒரு ப்ளாஷ்பாக் , யவனிகா , கோலங்கள்,  உள்கடல், மேளா போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர். பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். எண்பதுகளில் மலையாள சினிமாவின் புதிய அலையை உருவாக்கியவர். கே. ஜி. ஜார்ஜின் திரைப்படங்கள் 1980களின் நிலவிய கேரள சமூகப் பண்பாட்டு, அரசியல் உலகை துல்லியமாகச் சித்தரிப்பவை. ஒருவகையில் அவையே கேரள வாழ்வின் சாட்சியங்கள். அரவிந்தன். பத்மராஜன். …

எட்டரை இடைவெட்டுகள் Read More »

சிறப்பு சலுகை

தேசாந்திரி பதிப்பகம் அறிவித்துள்ள  சலுகை ஏப்ரல் 12 முதல் 24 வரை தேசாந்திரி பதிப்பகத்தின் அனைத்து நூல்களுக்கும் இருபது சதவீதம் தள்ளுபடி தேசாந்திரி பதிப்பகத்தில் நேரடியாக வாங்குபவர்களுக்கு மட்டுமே இச்சலுகை. அலுவலக முகவரி ••• இச்சலுகையோடு தேசாந்திரி இணையதளத்தின் வழியே புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு கூரியர் செலவு  இலவசம் தொடர்புக்கு https://www.desanthiri.com/ விலைப்பட்டியல்