பெலினி காத்திருக்கிறார்

பெலினியின் நண்பரும், ஒவியரும், சக அலுவலருமான Ettore Scola இயக்கத்தில் உருவான ஆவணப்படமான How Strange to Be Named Federico பெலினியின் கலை மற்றும் திரைவாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது. குறிப்பாகப் பெலினியின் திரைப்படம் போலவே முன்பின்னாகவும், கனவுத் தன்மை கொண்டதாகவும் ஆவணப்படத்தை ஸ்கோலா உருவாக்கியிருக்கிறார். ஸ்கோலா இத்தாலிய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். மாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். பெட்ரிக்கோ பெலினி (Federico …

பெலினி காத்திருக்கிறார் Read More »

செசானும் எமிலி ஜோலாவும்

வாழ்வில் வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்துவிடுகிற விஷயமில்லை. அதுவும் இரண்டு நண்பர்களில் ஒருவன் பெயரும் புகழும் அடைந்த பிறகு மற்றவன் வெறும் ஆளாக, எந்த அங்கீகாரமும் வருமானமின்றி இருக்க நேரிடும் எனில் அவர்களுக்குள் உள்ள உறவில் கசப்பே மிஞ்சும். சிலரது மேதமை அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடையும் போது தான் அறியப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. வான்கோ வாழ்ந்த போது அவரது ஒரு ஒவியம் கூட விற்பனையாகவில்லை. பணமில்லாமல் அவதிப்பட்டார். இன்று ஒரு ஒவியத்தின் விலை ஐநூறு கோடிக்கும் மேல். …

செசானும் எமிலி ஜோலாவும் Read More »

நாசகார உலகம்.

தி.ஜானகிராமன் சிறுகதை ஒன்றினை இன்று வாசிக்கும் போது ஒரு வரி சட்டென்று நிறுத்தியது. அந்த வரியைக் கடந்து போக முடியவில்லை. வாசித்தவுடன் முதலில் சிரிப்பு வந்தது. பின்பு மெல்ல சிரிப்பு மறைந்து இது உண்மையிலே நாசகாரச் செயல் தான் என்று உறைக்கவும் செய்தது. சண்பகப் பூ என்றொரு சிறுகதை. 1948ல் எழுதியிருக்கிறார். கதை முழுவதும் ஒரு பெண்ணின் அழகைப் பற்றிய வியப்பு. ஆராதனை தான். லா.ச.ராவை படிக்கிறோமோ என்று எண்ணும்படியாக இருந்தது. ஆனால் லா.ச.ரா பெண்ணை தெய்வநிலைக்குக் …

நாசகார உலகம். Read More »

திரை எழுத்து -1

அகிரா குரசேவாவின் திரைப்படங்கள் இயக்குனர் பாலு மகேந்திரா மிகச்சிறந்த திரைப்பட நூல்களைத் தனது நூலகத்தில் வைத்திருந்தார். ஒருமுறை அவரிடம் எந்தப் புத்தகத்தை மிகவும் அதிகமான தடவை வாசித்திருக்கிறார் என்று கேட்டபோது அவர் Hitchcock -François Truffaut என்று சொல்லி அதன் பிரதியைக் கையில் கொடுத்தார். அது ஹிட்ச்காக்கோடு பிரெஞ்சு இயக்குனர் பிரான்சுவா த்ருபோ நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. அதை வாசித்திருக்கிறேன் என்று பாலுமகேந்திராவிடம் சொன்னேன். அவர் உற்சாகத்துடன் அதே நூலின் இரண்டு மூன்று பிரதிகள் தன்னிடமிருக்கின்றன. வீட்டில், …

திரை எழுத்து -1 Read More »

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

காலச்சுவடு இதழில் வெளியான எனது புதிய சிறுகதை. ** வின்சென்ட் போயர்பாக் என்ற ஜெர்மானிய ஒவியன் ஒரு சிறுநூலை எழுதியிருக்கிறான். மணலின் நடனம் என்று பெயரிப்பட்ட அந்த நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. போயர்பாக்கை பற்றி எவ்விதமான குறிப்புகளும் அந்த நூலில் இல்லை. ஆனால் அவன் 1912 முதல் 1919 வரை ஏழு ஆண்டுகள் இந்தியாவில் சுற்றியலைந்திருக்கிறான் என்பதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஒவியர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறான் என்பதும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளின் வழியாகப் புரிந்து கொள்ள …

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் Read More »

அசோகன் சருவிலோடு ஒரு நாள்

மலையாளச் சிறுகதையுலகில் மிக முக்கிய எழுத்தாளர் அசோகன் சருவில். இவரது இரண்டு புத்தகங்கள் என்ற சிறுகதை தொகுப்பு தமிழில் வம்சி வெளியீடாக வந்துள்ளது. சுகானா மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் புத்தகம் சென்றவாரம் புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலிற்கான விருதைப் பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த போது அசோகன் சருவில் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சிறந்த பண்பாளர். எளிமையானவர். சருவிலின் கதைகள் எளிய மனிதர்களின் துயரங்களைப் பேசுபவை. வடிவ உத்திகளை விடவும் வாழ்வின் …

அசோகன் சருவிலோடு ஒரு நாள் Read More »

எல்லை கடக்கும் சர்க்கஸ்

ஹாலிவுட்டின் நிகரற்ற இயக்குனர் எலியா கஸான். இவரது திரைப்படங்கள் இன்றும் திரைப்பள்ளிகளில் பாடமாகப் பயிலப்படுகின்றன. நடிகர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதிலும், காட்சிகோணங்களைப் புதிதாக வடிவமைப்பதிலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அழுத்தமாகக் கையாளுவதிலும் எலியா கஸான் தனித்துவமிக்கவர். மார்லன் பிராண்டோவை திரைநட்சத்திரமாக உருவாக்கியவர் இவரே. போரும் வாழ்வும், குற்றமும் தண்டனை, மேடம் பவாரி போன்ற செவ்வியல் நாவல்களை வாசிக்கும் போது நாம் கதாபாத்திரங்களின் உருவாக்கம் மற்றும் கதையை எடுத்துச் செல்லும் விதத்தைக் கண்டு வியக்கிறோம். பாராட்டுகிறோம். அதே அனுபவத்தைத் திரையில் …

எல்லை கடக்கும் சர்க்கஸ் Read More »

உண்டாட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற உண்டாட்டு நிகழ்வு இலக்கியத் திருவிழா போல நடைபெற்றது. பெங்களூர், கோவை, மதுரை,  சேலம். தஞ்சை, சென்னை, கொச்சி,  புதுச்சேரி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து இலக்கியவாசகர்களும், எழுத்தாளர்களும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பவாவின் ஏற்பாடு எப்போதும் ஆகச்சிறந்ததாகவே இருக்கும். இந்த முறை கொண்டாட்டத்தின் உச்சம். பவாவும், அவரது குடும்பமும் நண்பர்களும் இந்நிகழ்வை மறக்கமுடியாத பெரும் அனுபவமாக உருவாக்கினார்கள். காலை பத்து மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது வரை நிகழ்வுகள்.  வாசகர்கள் பலரும் எனது படைப்புகள் …

உண்டாட்டு Read More »

வாசகசாலை 100

தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பினை ஒரு பேரியக்கமாக உருமாற்றி வருகிறது வாசகசாலை. நூலகம் தோறும் அவர்கள் நடத்தி வரும் நிகழ்ச்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. சிறந்த கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரை என பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்தி இளம்வாசகர்களை படிக்க வைக்கும் அரிய செயலை மேற்கொண்டு வருகிறார்கள்.  இச்செயல்பாடு பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணை செய்கிறது என்பதே நிஜம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற வாசகசாலையில் சிறுகதை கொண்டாட்டம் 100 வது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இந்நிகழ்வில் …

வாசகசாலை 100 Read More »

அதிகதைகள் – ஒரு அறிமுகம்

சிங்கப்பூரில் உள்ள இளம் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து அரூ என்ற இணைய இதழைக் கொண்டுவருகிறார்கள். மிகச்சிறப்பான படைப்புகளுடன் இதழ் வெளியாகிறது. மிகைப் புனைவும் (fantasy fiction), அறிவியல் புனைவும்  கொண்ட படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் இணைய இதழது.  புதிய கதைவெளியை உருவாக்க முனையும் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். அரூ இதழில் வெளியான எனது சிறுகதை தொகுப்பு பற்றிய கட்டுரையிது. நண்பர் கணேஷ் பாபு தேர்ந்த இலக்கிய வாசகர்.  வெயிலைக் கொண்டு வாருங்கள் சிறுகதைத் தொகுப்பு பற்றி …

அதிகதைகள் – ஒரு அறிமுகம் Read More »