தமிழ் இலக்கியப்பேரகராதி

வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப்பேரகராதி  ஐந்து தொகுதிகளை வாங்கினேன். வரலாற்று முறை அகராதி  என்பது ஒரு சொல் தமிழ் இலக்கியத்தில் எந்தெந்த இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.  என்ன பொருளைச் சுட்டுகிறது . அச்சொல்லை உரையாசிரியர்கள் எப்படி விளக்குகிறார்கள். சொல் அடைந்துள்ள மாற்றங்கள் எவை என விளக்கும் அகராதியாகும்.    இந்த இலக்கியப் பேரகராதியில் 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.  தமிழ் பேரறிஞர்களின் நாற்பது ஆண்டு கால கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த அகராதி தற்போது 50% தள்ளுபடி விலையில் …

தமிழ் இலக்கியப்பேரகராதி Read More »

கிழக்கும் மேற்கும்

கிழக்கும் மேற்கும் என்ற ஒலியேட்டில் எனது சிறுகதை “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ”  இடம் பெற்றுள்ளது. சிறப்பாக ஒலிவடிவம் தந்துள்ள ஞானா பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டுகள் •• ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து போன பெண்ணின் அவலத்தைச் சொல்லும் கதையிது •• கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது in an audio form: https://soundcloud.com/eastandwest-503731323/oct-2016

புனைவின் அடையாளம்.

சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை சத்யானந்தன் ** உயிர்மை அக்டோபர் 2016 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமலத்தின் தங்கை” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது. நவீன சிறுகதையின் காலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலும் ஆகி விட்டது. புதுமைப் பித்தன், மௌனி காலங்களில் அது நமக்கு அறிமுகமானது. இப்போது நவீனச் சிறுகதையின் சாத்தியங்கள் என்ன என்பதை – அதன் வீச்சின் நீள்வெளியில் எந்தப் புதிய தடங்களை நாம் கண்டடைகிறோம் என்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் கற்பனை …

புனைவின் அடையாளம். Read More »

IIT நிகழ்ச்சி

சென்னை IIT தமிழ் மன்றம் சார்பாக நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நவம்பர் 3 வியாழன் மாலை 5 30 மணிக்கு உரையாற்றுகிறேன்

விருட்சம் 100

எழுத்தாளர் அழகிய சிங்கர்  நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவருகிறார். இலக்கிய இதழ் ஒன்றை நடத்துவது எளிதான விஷயமில்லை. பொருளாதார ரீதியாக அது பெரும் சுமை. படைப்புகள் கிடைப்பதும் எளிதில்லை. ஆனால் தனது இலக்கிய ஈடுபாட்டின் காரணமாக  விருட்சத்தை சிறப்பாக நடத்திவருகிறார் சமீபத்தில் நவீன விருட்சம் 100 வது இதழ் வெளியாகியுள்ளது அழகியசிங்கருக்கு என் மனம் நிரம்பிய பாரட்டுகள் இதன் வெளியீட்டுவிழா அக்டோபர் 23  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு …

விருட்சம் 100 Read More »

கிரீடம் இல்லாத அரசன்

1957ல் சார்லி சாப்ளின் எழுதி இயக்கிய A King in New York திரைப்படம் 1973 வரை அமெரிக்காவில் வெளியாகவில்லை. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் எனக் குற்றம் சாட்டி அமெரிக்க அரசு அவர் மீது விசாரணை மேற்கொண்டது. இதனால் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். சாப்ளின் இயக்கிய The Great Dictator படத்தை விடவும் நேரடியாக அரசியல் பேசும்படமிது. இதுவே சாப்ளின் கதாநாயகனாக நடித்த கடைசிப்படம். அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளாகக் கருதப்பட்டவர்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் தேசத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனக் குற்றம்சாட்டி …

கிரீடம் இல்லாத அரசன் Read More »

சைக்கிள் கமலத்தின் தங்கை

கவிஞர் ஞானக்கூத்தன் நினைவாக சைக்கிள் கமலத்தின் தங்கை என்றொரு சிறுகதை  எழுதியிருக்கிறேன். இம்மாத உயிர்மை இதழில்  கதை வெளியாகியுள்ளது.   ஒரு வாரத்திற்குள்  ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கதையைப் பாராட்டித் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. கதையை உயிர்மைக்கு அனுப்பிய இரவு மனுஷ்யபுத்திரன் தொலைபேசியில் அழைத்து  இது மிக முக்கியமான கதை என தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சிறுகதை ஒன்று உயிர்மையின் அட்டையில் விளம்பரப்படுத்தபட்டிருப்பது இதுவே முதல்முறை. கதைக்கு  அரஸ் சிறப்பான ஒவியங்களை வரைந்துள்ளார்.  கதையைப் பாராட்டி …

சைக்கிள் கமலத்தின் தங்கை Read More »

மின்னங்காடி

என்நண்பரும் எழுத்தாளருமான தமிழ்மகன் மின்னங்காடி டாட் காம் என இணைய நூல்விற்பனையகம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழின் அனைத்துப் பதிப்பக நூல்களும் மின்னங்காடியில் கிடைக்கும். இந்தியாவுக்குள் என்றால் ஐந்து தினங்களுக்குள்ளும் வெளிநாடுகள் என்றால் பதினைந்து தினங்களுக்குள்ளும் நூல்களைச் சேர்ப்பிக்கப்படும். கார்டுகள் மூலமாகப் பணம் செலுத்திப் புத்தகங்களை வாங்க முடியும். இந்தியாவுக்குள் என்றால் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி நூல்களைப் பெறலாம். காசோலை, மணியார்டர் செலுத்தி மட்டுமே புத்தகம் பெற …

மின்னங்காடி Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 36

திருடன் – ஜினிசிரோ தனிஜகி ஜப்பானியச் சிறுகதை ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட் தமிழில் : தி. இரா. மீனா பல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது. நானும் அறைக்கூட்டாளிகளும் ‘மெழுகுவர்த்தி படிப்பு’ என்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகும் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி …

எனக்குப் பிடித்த கதைகள் 36 Read More »