விமர்சனக்குறிப்பு

வேல்முருகன் என்ற இளம்வாசகர் தனது முகநூலில் பதிந்துள்ள விமர்சனக்குறிப்பு

•••

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, தஸ்தாயெவ்ஸ்கியின், “ குற்றமும் தண்டனையும்” நூலை பற்றி, உலக இலக்கியப் பேருரைகள்.. என்ற தலைப்பில் பேசிய பேச்சு சில இணைப்பு கட்டுரைகளுடன் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.

நேற்று மாலை விருதுநகரில் நலம் ஹோமியோ மருத்துவமனை சென்றேன் அங்கு நோயாளிகள் காத்து இருக்கும் நேரம் பயனுள்ளதாக இருக்கும் விதத்தில் நல்ல நூல்கள் படிக்க வைக்கபட்டு இருக்கும், அப்படி நான் காத்துயிருக்கும் நேரத்தில் படித்த நூல்தான் , எஸ்.ரா நூல்

குற்றமும் தண்டனையும் நாவலை பற்றியும், தஸ்தாயெவ்ஸ்கியை பற்றியும் அறிந்துகொள்ள மட்டும்மல்ல குற்றம் என்பது ஏன், எப்படி, எதனால் உருவாகிறது என்பதை மிக அழகாக அருமையாக எழுதியுள்ளார், எஸ்.ராவே என்னுடன் உட்கார்ந்து பேசுவதுபோல் இருந்தது அவரது எழுத்து நடை,

குற்றங்களை பற்றி இவ்வள்வு விளக்கங்களா? என ஆச்சரியம், நூலை படித்து முடித்த பின் மனதில் ஏதோ ஒரு தாக்கம், இப்போது வரை என் மனதில் நீண்டு கொண்டே இருக்கிறது, இன்னும் வெளியே வரமுடியவில்லை,

மிக சிறிய நூல் [112 பக்கம்] எவ்வளவு விஷயங்களை நம் மனதிற்குள் புதைத்து, செடியாக மாறி, மரமாக உருமாறி நம்மை ஆட்கொள்கிறது, சாதாரணவன் செய்த குற்றத்திற்கு தண்டனை உண்டு, அரசியல் குற்றம் அது அதிகாரத்தை கைபற்றும், பகத்சிங் செய்தது அன்று குற்றம், இன்றோ அது தியாகமாகி விடுகிறது , என் பல்வேறு தளங்களில் நம்மை அழைத்துசெல்கிறது,  படித்துபாருங்கள்……….. ……… நண்பர்களே

0Shares
0