குறுங்கதை 36 கூந்தலில் வழியும் அருவி.
மலையுச்சியிலிருந்து பூமியை நோக்கி அருவி கொட்டுவதைப் போலத் தனது கூந்தலிலிருந்து பாதம் நோக்கி நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் ஒரு பெண் இருந்தாள். ஆம். கூந்தலில் அருவியைச் சூடியவள் என அழைக்கப்பட்ட அப்பெண்ணின் தலையிருந்து அருவி போலத் தண்ணீர் பகலிரவாக வழிந்தோடிக் கொண்டேயிருந்தது. அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட அந்தப் பெண்ணிற்கு முப்பது வயதிருக்கக் கூடும். வெண்கலச்சிலை போன்ற உடலமைப்பு. விளக்கின் சுடர் போன்ற கண்கள். திருமணம் செய்து கொண்ட மூன்று வாரத்தில் அவள் கணவன் கடலோடியாகப் போய்விட்டான். பதிமூன்று …