குறுங்கதை 30 குற்றத்தின் மலர்
போலீஸ் ஸ்டேஷனுள் ஒரு மஞ்சள் ரோஜாச் செடியை யார் நட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தச் செடியில் நிறைய மஞ்சள் ரோஜாக்கள் பூத்திருந்தன. லாக்கப்பில் எவனோ ஒரு குற்றவாளி அடிவாங்கும் போது ஒரு ரோஜாப்பூ “கொடூரம் “என்றபடியே தலைகவிழ்ந்து கொண்டது. மகளைக் காணாமல் தேடும் தந்தை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்று கண்ணீர் விட்டபோது ரோஜாச் செடி சொன்னது “கண்ணீர் குருதியை விடக் கனமானது.“ சந்தேகத்தின் பேரில் அடித்து இழுத்துவரப்பட்ட இளைஞனின் தாயும் சகோதரிகளும் ஸ்டேஷன் …