குறுங்கதை-47 26ம் பக்கம்
அந்த நாவலின் 26ம் பக்கம் தனியே வீதியில் கிடந்தது. எப்படி நாவலிலிருந்து வெளியேறி வந்தோம் என அதற்குத் தெரியவில்லை. ஒரு நாவலை விட்டு வெளியேறிய பிறகு தனது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்றும் அதற்குத் தெரியவில்லை. நாவலின் பகுதியாக இருந்தவரை அதற்குப் பெரிய பொறுப்புகள் எதுவுமில்லை. 26ம் பக்கத்தில் ஒரேயொரு வீடும் அதில் வசிக்கும் பெண்ணும் மட்டுமே இருந்தார்கள். அந்தப் பெண் நாள் முழுவதும் தனித்தே இருந்தாள். எப்போதாவது அவளுக்கு ஒரு கடிதம் வரும். வெளிநாட்டிலிருந்த அவளது …