வாசிப்பின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய புத்தக தின நாள் வாழ்த்துகள் புத்தக வாசிப்பு குறித்த கவனமும் செயல்பாடுகளும் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ச் சூழலில் தீவிரமாக நடந்து வருகின்றன. வாசகசாலை போன்ற அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணம். அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது மனம் நிரம்பிய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலுள்ள மாவட்ட நூலகங்கள் அத்தனையிலும் வாசகர்கள் சந்திப்பு நடைபெறுகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று புத்தக வாசிப்பு ஒரு இயக்கமாகச் …