admin

வாசிப்பின் நுழைவாயில்.

அனைவருக்கும் இனிய புத்தக  தின நாள் வாழ்த்துகள் புத்தக வாசிப்பு குறித்த கவனமும் செயல்பாடுகளும் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ச் சூழலில் தீவிரமாக நடந்து வருகின்றன. வாசகசாலை போன்ற அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணம். அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது மனம் நிரம்பிய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலுள்ள மாவட்ட நூலகங்கள் அத்தனையிலும் வாசகர்கள் சந்திப்பு நடைபெறுகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று புத்தக வாசிப்பு ஒரு இயக்கமாகச் …

வாசிப்பின் நுழைவாயில். Read More »

அழைப்பிதழ்

என் விருப்பத்திற்குரிய சிறுகதை ஆசிரியரான ஆன்டன் செகாவின் முக்கியச் சிறுகதைகள் குறித்து விரிவான உரை ஒன்றை நிகழ்த்த இருக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஆன்டன் செகாவ் குறித்து ஒரு உரை நிகழ்த்தினேன். LLA நூலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு செகாவ் வாழ்கிறார். மற்றும் செகாவின் மீது பனி பெய்து கொண்டிருக்கிறது என்ற இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். இதில் செகாவ் வாழ்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல்.  இரண்டும் தேசாந்திரி பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. …

அழைப்பிதழ் Read More »

இருவர்

The Zoo Story என்ற எட்வர்ட் ஆல்பியின் நாடகத்தை முப்பது வருஷங்களுக்கு முன்பு மதுரையில் பார்த்தேன். யதார்த்தா பென்னேஸ்வரன் உருவாக்கம் என்று நினைவு. பின்பு இந்த நாடகத்தின் ஆங்கில வடிவத்தைப் பெங்களூரில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத நாடகமது. இன்றுள்ள நாடகக்குழுவினர் யாரும் ஏன் இந்த நாடகத்தை மறுபடியும் நிகழ்த்தவேயில்லை என்று தெரியவில்லை. ஆனால் இரண்டே கதாபாத்திரங்கள் கொண்ட அழுத்தமான நாடகமது. நியூயார்க் நகரத்தின் பூங்காவில் பீட்டர் , ஜெர்ரி எனும் இருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். ,பீட்டர் …

இருவர் Read More »

வசந்தத்தில் ஓர் நாள்

திடீரென சில நாட்கள் காலையில் மனதில் ஒரு பாட்டு ஒடத்துவங்கிவிடுகிறது. அதை உடனடியாகக் கேட்க வேண்டும் என்ற உத்வேகம் உருவாகிறது. அப்படி இன்று காலை, வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடல் மனதில் ஒடி மறைந்தது. அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினேன். பாட்டு முடிந்து போகக்கூடாது என்பது போன்ற மனநிலை உருவானது. திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அது எனது வழக்கம். சில நாட்கள் ஒரே பாடலை நாற்பது ஐம்பது முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள் மறைந்து. …

வசந்தத்தில் ஓர் நாள் Read More »

நன்றி ஷாஜி

மலையாள இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் பற்றிய லிஜின் ஜோஸின் ஆவணப்படம் குறித்து நான் எழுதிய  கட்டுரையை நண்பர் ஷாஜி மலையாளத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அது இம்மாத மாத்யமம் இதழில் வெளியாகிறது. வாட்ஸ்அப் வழியாக அக்கட்டுரையை லிஜின் ஜோஸ் உள்ளிட்ட மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரையும் வாசிக்கச் செய்துள்ளார் ஷாஜி. இன்னொரு பெரிய சந்தோஷம் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளா சென்ற ஷாஜி இக்கட்டுரையை ஜே.ஜி. ஜார்ஜ் அவர்களிடம் வாசித்துக் காட்டியிருக்கிறார். அவரது பாராட்டு எனக்குக் கிடைத்த கௌரவமாகும். …

நன்றி ஷாஜி Read More »

எழுத்தாளனின் உலகம்

THE FRAGRANCE OF GUAVA கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விரிவான நேர்காணல் தொகுப்பு. 120 பக்கங்கள் கொண்டது. கொலம்பிய பத்திரிக்கையாளர் Plinio Apuleyo Mendoza எடுத்த நேர்காணலது. மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இதில் தான் எவ்வாறு எழுத்தாளராக உருவானேன் என்பதில் துவங்கி தனது நம்பிக்கைகள். எழுத்துமுறை, நட்பு. குடும்பம். அரசியல் என மார்க்வெஸ் விரிவாக உரையாடியிருக்கிறார். நான் அடிக்கடி வாசிக்கும் நூலிது. இதன் சில பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற …

எழுத்தாளனின் உலகம் Read More »

குறும்பட வெளியீடு

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள மை டியர் செகாவ் குறும்படத்தின் வெளியீட்டு விழா 28.4.2019 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் நான் ஆன்டன் செகாவ் சிறுகதைகள் பற்றி  சிறப்புரை நிகழ்த்த உள்ளேன். கூடுதல் விபரங்களை இரண்டு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்

விரான்ஸ்கியின் காதல்

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல் முப்பது முறைகளுக்கும் மேலாகத் திரைப்படமாக்கபட்டிருக்கிறது. இம்முறை பிரம்மாண்டமாக Anna Karenina: Vronsky’s Story என ரஷ்ய தொலைக்காட்சித் தொடராக உருவாக்கபட்டிருக்கிறது. இதன் முழுநீள திரைவடிவமும் வெளியிடப்பட்டுள்ளது. அன்னாவின் காதலன் விரான்ஸ்கியின் பார்வையில் உருவாக்கபட்டுள்ள இப்படம் அன்னாகரீனினா நாவலைப் புதிய கோணத்தில் அணுகுகிறது. நாவலில் அன்னா தற்கொலை செய்து கொண்டு இறக்கும் போது அவளது மகன் செர்ஜி கரீனினுக்கு எட்டு வயது. அவன் வளர்ந்து தற்போது ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறான். 1904ல் …

விரான்ஸ்கியின் காதல் Read More »

நன்றி

நேற்று எனது பிறந்த நாளுக்காக நேரிலும் அலைபேசியிலும் இணையத்திலும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. உங்கள் அன்பும் நட்புமே என் எழுத்திற்கான உறுதுணை.