நேர்காணல்
கலைஞர் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான எனது நேர்காணலின் காணொளி. https://www.youtube.com/watch?v=AY66vEIcm8Y&feature=em-uploademail
கலைஞர் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான எனது நேர்காணலின் காணொளி. https://www.youtube.com/watch?v=AY66vEIcm8Y&feature=em-uploademail
எழுத்தாளர் போகன் சங்கருக்குக் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது அறிவிக்கப்பட்டுள்ளது . சிறிய எண்கள் உறங்கும் அறை என்ற கவிதைத் தொகுப்பு இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே தொகுப்பு 2018ம் ஆண்டிற்கான கவிஞர் ஆத்மாநாம் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போகன் சங்கருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். உரைநடையில் வண்ணநிலவனிடம் காணப்படும் கிறிஸ்துவ உலகம், தூய அன்புக்கான ஏக்கம், தன்னிருப்பு தொடர்பான இடையுறாத கேள்விகள் போகனின் கவிதை உலகிலும் வெளிப்படுகின்றன. போகனின் கவிதைகள் தனித்துவமான …
ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி திரைப்படத்தை இயக்குவதற்குப் பல ஆண்டுகள் முன்பாகக் காந்தி திரைப்படத்தை இயக்க விரும்பினார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் டேவிட் லீன். இதற்காக இந்தியாவிற்கு வருகை தந்து நேருவைச் சந்தித்து உரையாடி காந்தி குறித்து விரிவான ஆய்வுகளையும் செய்தார். ஆனால் அவர் விரும்பியது போலக் காந்தி திரைப்படத்தை உருவாக்க இயலவில்லை. ஆகவே காந்தியைக் கைவிட்டு தயாரிப்பாளர் விரும்பிய லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தை இயக்கினார். அப்படம் திரை வரலாற்றில் பெரும் காவியமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. ஒரு …
எனது இடக்கை நாவல் குறித்து நண்பர் பவா.செல்லத்துரை மதுரையில் சிறப்பான கதைசொல்லுதலை நிகழ்த்தியிருக்கிறார். நாவலின் முக்கியப்புள்ளிகளைத் தொட்டுப் பேசி கேட்பவர்களை இந்நாவலை வாசிக்கும்படி தூண்டியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது. நவீன கதைசொல்லியாக பவா தமிழ் இலக்கியத்தின் முக்கியச் சிறுகதைகள், நாவல்கள் குறித்து பேசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கதை சொல்லும் விதம் ஒரு நண்பன் நேரில் நம்மிடம் பேசுவது போல அத்தனை நெருக்கமாக, உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் பவா. நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த நண்பர் …
(சொல்வனம் இணையஇதழ் எழுத்தாளர் அம்பை அவர்களைக் கொண்டாடும் விதமாக சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. மிகச்சிறப்பான முறையில் அம்பையின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளுடன், நேர்காணலுடன் இதழ் தயாரிக்கபட்டுள்ளது. அந்த இதழில் வெளியான எனது கட்டுரை.) அம்பையின் கதையொன்றில் பன்றி பேசுகிறது. அதுவும் கறாரான தொனியில் மனிதர்கள் தங்களைக் குரூரமாகக் கொல்வதையும், விலங்குகளைக் கொண்டு நீதிக்கதைகள் சொல்ல வைக்கும் அபத்தத்தையும் பற்றி பன்றி கண்டிப்புடன் பேசுகிறது. அது ஒரு பெண்பன்றி. இருபது குட்டிகள் போட்ட பன்றி. சாக்கடையில் வசிக்கிறது. பாரதியார் தனது …
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இஸ்லாமியர்களை உரிமையோடு மாமா என்று தான் அழைப்பார்கள். பதிலுக்கு அவர்களும் மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். தோப்பில் முகமது மீரான் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நான் மாமா என்றே அழைப்பேன். அதைக் கேட்கும் போது அவரது முகத்தில் சொல்ல முடியாத சந்தோஷம் வெளிப்படும். அந்த மாமா இன்றில்லை என்பது தாள முடியாத துயரமே. கேரளாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக எழுத்தில் பதிவு செய்தவர்களாக வைக்கம் முகமது பஷீரையும் புனத்தில் குஞ்ஞப்துல்லாவையும் குறிப்பிடுகிறார்கள். இருவரது படைப்புகளும் …
என் பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் நூல்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பு வெண்ணிற இரவுகள் மட்டுமே தமிழில் வாசிக்கக் கிடைத்தது. மற்ற நாவல்களை, குறுநாவல்களை, சிறுகதைகளை ஆங்கிலம் வழியாகவே வாசித்தேன். இன்று என்னிடம் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய எல்லா நூல்களும் இருக்கின்றன. இதில் The Brothers Karamazov நாவல் ஐந்து வேறுபட்ட …
சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி படத்தில் அபு என்ற சிறுவனாக நடித்த சுபீர் பானர்ஜி பின்னாளில் என்னவானார். அவரது சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. ஏன் அவர் திரைத்துறையை விட்டு ஒதுங்கி வாழ்ந்தார் என்பதை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட வங்க மொழித் திரைப்படம் அபுர் பாஞ்சாலி( Apur Panchali ) இதனை இயக்கியிருப்பவர் கௌசிக் கங்குலி. சர்வதேச திரைப்படவிழாக்களில் முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள இப்படம் பதேர் பாஞ்சாலியின் பின்னால் மறைந்துள்ள அறியாக்கதையொன்றை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது சுபீர் பானர்ஜி பதேர் பாஞ்சாலி படத்தில் …
பாலம் கல்யாணசுந்தரம் மிகச்சிறந்த சமூகச் சேவகர்.. தன்னுடைய வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்தவர். சர்வதேச அளவில் சிறந்த மனிதர் என Man of Millinium என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றவர். அந்தப் பணம் முழுவதையும் ஏழை எளிய குழந்தைகள் நலனுக்காக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திவரும் அன்பு பாலம் என்ற சேவா அமைப்பு துறை தோறும் சாதனைகள் செய்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்த ஆண்டு …