admin

செவி சாய்

ஆன்டன் செகாவின் “துக்கம்”  என்ற சிறுகதையைத் தழுவி “செவி சாய்” என்ற குறும்படத்தை பவித்ரன் இயக்கியுள்ளார். செகாவ் கதையை தமிழ் சூழலுக்குப் பொருத்தமாக மாற்றியமைத்து அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஆட்டோ டிரைவராகச் சிறப்பாக நடித்துள்ள மகேந்திர பாபுவிற்கு என் வாழ்த்துகள் பவித்ரன் மற்றும் அவரது தொழில்நுட்ப குழுவினர்களுக்கு   மனம் நிரம்பிய பாராட்டுகள் SEVISAAI https://youtu.be/MdYarZ_tpYM

சஞ்சாரம் பதிவுகள்

சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டத்தின் வீடியோ பதிவுகள் நன்றி – Shruti.tv எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவல் குறித்த விமர்சன கூட்டத்தில் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் உரை நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு Chithra Balasubramanian speech about S. Ramkrishnan’s ‘Sanjaram’ Novel https://www.youtube.com/watch?v=XiSuKE2_1lQ எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவல் குறித்த விமர்சனக்கூட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ஏற்புரை மற்றும் வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் எஸ்.ரா. நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் …

சஞ்சாரம் பதிவுகள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கி உரை

சேலத்தில் நான் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் மற்றும் வாழ்க்கை பற்றிய ஆற்றிய உரையின் காணொளி இதனைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ருதி டிவி ரத்னம் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய  பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் யூடியூப் பகிர்வு: தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’- எஸ் ராமகிருஷ்ணன் https://youtu.be/gGWn18aTc6g

தும்பி வா

நேற்றைய தி இந்து  நாளிதழில்  ஓ.என்.வி. குரூப்பிற்கான அஞ்சலியாக ஆதி வள்ளியப்பன் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதியிருக்கிறார். இப்பாடல் எனக்கு மிகவும் விருப்பமானது.  இளையராஜாவின் இசை சாதனைகளில் ஒன்றான இப்பாடலை பாலுமகேந்திரா மிகச்சிறப்பாக படமாக்கியுள்ளார். இக்கட்டுரையை எழுதிய ஆதி வள்ளிப்பனுக்கும் வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள். •••• நினைவலைகள்: ‘தும்பி வா’ தந்த ஓ.என்.வி. குரூப் – ஆதி வள்ளிப்பன் மலையாளம் – தெரியாது ஓ.என்.வி. குரூப் – தெரியாது பாலுமகேந்திராவின் ‘ஓளங்கள்’ – தெரியாது …

தும்பி வா Read More »

எனக்குப்பிடித்த கதைகள் 33

மணலில் மறைந்த நாணயம் எர்னெஸ்ட் பக்லர் தமிழில் : ராஜ் கணேசன். இறுதிச்சடங்கு நடப்பதற்கு முந்தைய நாள் மாலை நானும் எனது அக்காவும் வயல்வெளியில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருபவர்கள், தங்கள் சிறுவயது நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது போல நாங்கள் எங்கள் இளம்பிராயத்து நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அக்கா என்னிடம், “ஒரு நாள் மதியம் நீ தொலைந்து போனதாக நினைத்து நாங்கள் தேடினோமே உனக்கு நினைவிருக்கிறதா?” …

எனக்குப்பிடித்த கதைகள் 33 Read More »

தமிழ் புத்தக நண்பர்கள்

தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு  கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் தோறும் ஒரு புத்தக விமர்சனக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதம் 23ம் தேதி மாலை  5:45 மணிக்கு எனது சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெற உள்ளது. Date:   Tuesday, 23rd February, 2016, Time: 5.45 p.m. to 8.15 p.m. Venue:   Tag Centre, New No. 69, T.T.K.Rd., Alwarpet, (Opp. Narada Gana    Sabha), Chennai 600018 Book of …

தமிழ் புத்தக நண்பர்கள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம்

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் விதமாக தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் குறித்து சேலம் பாலம் புத்தகக் கடையில் பிப்ரவரி 21 ஞாயிறு காலை 10 மணிக்கு உரையாற்றுகிறேன். இந்த நாவலை எம்.ஏ.சுசீலா தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கிறது இடம் Paalam -The Book Meet No 35, Advaitha Ashramam Road, Fair Lands, Salem – 636004, Opposite Bus Stand +(91)-427-2335952  +(91)-8807402807, …

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் Read More »

பெரம்பலூர் புத்தகத் திருவிழா

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் நாளை (01. 02. 2016  திங்கள் கிழமை ) மாலை ஆறு மணிக்கு எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கிலும். பாரதி புத்தகாலய அரங்கிலும், புலம் அரங்கிலும், விகடன் பதிப்பக அரங்கிலும் எனது புத்தகங்கள் கிடைக்கின்றன