admin

முகாம் வருவதற்கான வழி

ஞாயிறு (23.03.2014) அன்று காலை 9.30 மணிக்குக் கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் துவங்க இருக்கிறது இதற்காகத் தண்டரை வரை பயணம் செய்வதற்கான வாகனவசதி டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பைக் அல்லது காரில் வர விரும்புகிறவர்கள் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை பிரதான சாலையில் வந்து செங்கல்பட்டு பாலத்தின் கீழ் உள்ள பாதை வழியாக ஊருக்குள் நுழைந்து திருக்கழுகுன்றம் சாலையில் பயணிக்க வேண்டும், செங்கல்பட்டில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் தண்டரை உள்ளது, …

முகாம் வருவதற்கான வழி Read More »

மறக்கமுடியாத தருணங்கள்

2005-ம் ஆண்டில் குற்றாலத்தில் நான் நடத்திய இலக்கிய முகாமின் புகைப்படங்களை நண்பர் முரளிமனோகர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்செயலாக அதன் இணைப்பை நேற்று ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். புகைப்படங்களைக் காணும் போது பரவசமாக இருந்தது. குற்றாலச்சாரலில் நனைந்தபடியே இரண்டு நாட்களும் பகலிரவாகத் தொடர்ந்த உரையாடல்கள், வேடிக்கை கதைகள், தீவிர இலக்கிய விவாதங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன, அரிய தருணங்களைப் புகைப்படமாகச் சேகரித்து வைத்துள்ளதற்கு நன்றி முரளி. அந்த முகாமில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன், பூமணி, சோ,தர்மர், …

மறக்கமுடியாத தருணங்கள் Read More »

முகாம் குறிப்புகள் 2

கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் கலந்து கொள்பவர்களுக்காக  டிஸ்கவரி புக்பேலஸ் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. நான் தொகுத்துள்ள 100 சிறந்த கதைகள் புத்தகம் ரூ 650க்கு பதிலாக ரூ 550க்கு விற்பனை செய்யப்படும், 1100 பக்கங்கள் உள்ள இந்த தொகைநூல் தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை உள்ளடக்கியது, புதிதாக எழுத விரும்புகிறவர்கள், இலக்கிய ரசனையை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது. இம்முகாமில் எனது ஏழு இலக்கியப் பேருரைகளின் டிவிடி, மற்றும் அனைத்துப் புத்தகங்களும் சிறப்புவிலையில் விற்பனைக்குக் …

முகாம் குறிப்புகள் 2 Read More »

அவர்களின் கவிதை : வி.யோகேஷ்

இன்மை என்ற கவிதைக்கான இணைய இதழ் ஒன்றை கவிஞர் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார், மாதம் இருமுறை வலையேற்றம் செய்யப்படுகிறது, இந்த இணைய இதழில் சிறந்த கவிதைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள் வெளியாகின்றன,  அவசியம் படித்துப்பாருங்கள் https://www.inmmai.com/p/blog-page.html •• இன்மை இதழில் வெளியான தீராத நினைவு என்ற வி.யோகேஷ் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது,  கச்சிதமான, எளிமையான கவிதை. தலைப்பு ஒன்று தான் பழமையானது, ஆனால் கவிதை தரும் அனுபவம் விரிந்து கொண்டே செல்கிறது. கடந்தகாலங்களை அப்படியே …

அவர்களின் கவிதை : வி.யோகேஷ் Read More »

முகாம் குறிப்புகள்- 1

வருகிற ஞாயிறு (23/03/2014) அன்று நடைபெற உள்ள கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் விவாதிக்கபட உள்ள சிறுகதைகளின் பட்டியலை இணைத்திருக்கிறேன். இவற்றை பங்கேற்பாளர்கள் வாசித்து வந்தால் விவாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இக்கதைகள் அழியாச்சுடர்கள் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கின்றன காஞ்சனை – புதுமைப்பித்தன் துக்க விசாரணை-ஜி. நாகராஜன் பாம்பும் பிடாரனும் – வண்ண நிலவன் காசி-பாதசாரி மூங்கில் குருத்து – திலீப்குமார் வாசிக்க : https://azhiyasudargal.blogspot.in/ *** உலகச்சிறுகதைகள் பழுப்புக் காலை – ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்த குமார் …

முகாம் குறிப்புகள்- 1 Read More »

காந்தி

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கும் மாங்கா காமிக்ஸ் ஒன்று 2011ல் வெளிவந்துள்ளது, இதனை உருவாக்கியவர் Kazuki Ebine. இவர் தோக்கியோவில் வசிக்கும் இளம் ஒவியர், இந்த நூலின் விலை ரூ 400. பதின்வயதினர் காந்தியை அறிந்து கொள்வதற்கு உதவியாக இப்படக்கதை மகாத்மா வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை அழகாக விவரிக்கிறது, ஜப்பானில் பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை புரிந்துள்ளது இந்த நூல் இந்தப் புத்தகத்தை எனக்குத் தெரிந்த பள்ளி மாணவர்கள் சிலருக்குப் பரிசாக வாங்கித் தந்தேன், ஆச்சரியம். அவர்கள் …

காந்தி Read More »

உரை

வருகிற சனிக்கிழமை (15.03.2014 ) மாலை ஆறுமணிக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் ஹிரோஷிமாவிற்குச் சென்று வந்த எனது அனுபவங்கள் குறித்துப் பேச இருக்கிறேன். இந்த நிகழ்வில் சமீபமாக புகுஷிமாவிற்குச் சென்று வந்த கோ.சுந்தர்ராஜன் அணுஉலை அபாயங்கள் குறித்து உரையாற்ற இருக்கிறார் இடம் : கவிக்கோ அரங்கம் ரஹமத் வளாகம், சிஐடி காலனி 2வது மெயின்ரோடு, மயிலாப்பூர் சென்னை- 4

தோக்கியோ சுவடுகள் 5

புல்லட் ரயில் ஹிரோஷிமா நோக்கி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மனம் காலத்தின் பின்னே போய் ஜப்பானின் வரலாற்று நிகழ்வுகளில் சஞ்சரிக்கத் துவங்கியது, ஆகாயத்தில் ஒரு குடைக்காளான் மிதப்பது போன்ற அணுகுண்டு வீச்சின் புகைப்படத்தை எனது பள்ளி நாட்களில் முதன்முறையாகப் பார்த்தேன், அறிவியல் பரிசோதனைக்கூடத்தில் ஒரு போஸ்டராக ஒட்டப்பட்டிருந்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் போது அமெரிக்கா, ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசி ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொன்று குவித்தது என்று ஆசிரியர் விளக்கிச் சொல்லியிருந்தார், ஆனால் ஏன் ஹிரோஷிமாவில் …

தோக்கியோ சுவடுகள் 5 Read More »

எனது புத்தகங்கள்

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில், உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த எனது புதிய நாவல் நிமித்தம் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து அதன் அடுத்தபதிப்பு வெளிவர இருக்கிறது இது போலவே இலக்கில்லாத பயணி , எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, காந்தியோடு பேசுவேன் ஆகிய நூல்களும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளன. நான் தொகுத்து, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள நூறு சிறந்த தமிழ்சிறுகதைகளின் தொகைநூல் மிகச் சிறப்பாக விற்பனையாகி வருகிறது, எனது புத்தகங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் …

எனது புத்தகங்கள் Read More »

செல்லப்பாவின் கேமிரா

எழுத்தாளர் சி.சு. செல்லப்பா ஜல்லிக்கட்டு குறித்து அற்புதமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார், புகைப்படக்கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த செல்லப்பா கறுப்பு வெள்ளையில் நிறையப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார் மதுரையில் உள்ள மகனது வீட்டில் அவர் வசித்தபோது நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு, தனது புகைப்படங்களில் சிலவற்றைச் செல்லப்பா காட்டியிருக்கிறார், அந்தப் புகைப்படங்கள் என்னவாகின என்று தெரியவில்லை இன்று வரை அவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி எதுவும் நடத்தப்படவேயில்லை. செல்லப்பா முக்கியமான புகைப்படக்கலைஞர் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் சாட்சி …

செல்லப்பாவின் கேமிரா Read More »