admin

காந்தி அவதூறுகள்

பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்கு பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் இது போன்ற அவதூறுகள் எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கபடுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன், அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும் போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது Mahatma Gandhi was invited to take participate in …

காந்தி அவதூறுகள் Read More »

காட்டப்படும் மறு கன்னம்

எனது சிறுகதை ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளேயின் நாடகநிகழ்வு பற்றி டாக்டர் ராமானுஜம் ஒரு நல்ல பதிவை எழுதியிருக்கிறார், அறிவியல் குறித்த விவாதங்களை உருவாக்கும் இந்த நாடகநிகழ்வு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது •• காட்டப்படும் மறு கன்னம் – டாக்டர். ராமானுஜம் கிறிஸ்துமஸுக்கு முந்தினம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரது எழுத்தில் வெளிவந்த சிறுகதையான ‘ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே!” என்ற சிறுகதையை ஜெயராவ் குழுவினர் அருமையான நாடக வடிவமாக்கி இருந்தனர். மனிதன் தோன்றிய …

காட்டப்படும் மறு கன்னம் Read More »

ஏழு பேருரைகள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா . தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும். பாஷோவின் ஜென் கவிதைகள். ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்.  ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் , ஹோமரின் இலியட் உள்ளிட்ட எனது உலக இலக்கியப்பேருரைகளின் ஏழு டிவிடிகளையும் வாங்குவதற்கு ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது உடுமலை டாட்காமில் இந்த டிவிடிகள் கிடைக்கின்றன https://udumalai.com/?name=&type_id=44 தமிழ்நாட்டிற்குள் தேவைப்படுகின்றவர்கள் attcharam@gmail.com முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பவும் , அல்லது 94451 91114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் **

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும்

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரம் திருவண்ணாமலை என்று எப்போதுமே சொல்வேன், அப்படித் திருவண்ணாமலையை ஒரு இலக்கிய சங்கமமாக மாற்றியமைத்தவர் எனதருமை நண்பர் பவா செல்லத்துரை. அவர் மீடியா வாய்ஸ் இதழில் எங்களது நட்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், வாசிக்கையில் மனம் நெகிழ்ந்து போனேன்.  அரஸ் வரைந்துள்ள எனது ஒவியம் மிக துல்லியமாக, சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. எத்தனையோ இரவுகளில் பவா வீட்டுக்கதவை தட்டி அவரது அம்மா சமைத்து தரும் உணவைச் சாப்பிட்டு விடிய விடிய இலக்கியம் பேசியிருக்கிறேன், எனக்கும் …

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும் Read More »

இயல் விருது

2011 ம் ஆண்டுக்கான இயல் விருது எனக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கனடா தேசத்தில் இருந்து வழங்கப்படும் புகழ்பெற்ற சர்வதேசிய இலக்கிய விருதாகும், வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருதாக வழங்கப்படுகிறது . 1500 கனேடிய டாலர் பரிசுத்தொகையும் பாராட்டு பத்திரமும் கொண்டது, இதற்கான விருது வழங்கும்விழா ஜுன் மாதம் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற உள்ளது, அதில் கலந்து கொண்டு விருது பெற இருக்கிறேன் சுந்தர ராமசாமி, ஜோர்ஜ் எல் ஹார்ட், அம்பை, கோவை ஞானி, …

இயல் விருது Read More »

பெரியார் விருது

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி, சமூகத்தில் சிறந்து விளங்கும் தமிழர்களைப் பாராட்டும் விதமாகப் “பெரியார் விருது” வழங்கி வருகிறது. திரு கி.வீரமணி அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் அமைப்பிது. இவ்வாண்டிற்கான ’பெரியார் விருது’ எனக்கு அளிக்கப்படுவதாக பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவித்துள்ளது இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 15 முதல் 17 வரை நடைபெற உள்ள பெரியார் முத்தமிழ் மன்றத்தின் தைப்பொங்கல் விழாவில் நடைபெறும். **

சவரக்குறிப்புகள்

கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற அரங்காடல் நாடக நிகழ்வில் எனது சிறுகதையை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட நாடகமான சவரக்குறிப்புகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது என்று கனடாவில் இருந்து நண்பர் நாராயணமூர்த்தி தகவல் அனுப்பியிருந்தார். நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றம் செய்த மனவெளி கலையாற்றுக்குழு மற்றும் இந்த நாடகப்பிரதியை உருவாக்கிய திரு. செழியன். நெறியாள்கை செய்த திரு. அ.புராந்தகன். ஆகியோருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் **

எழுத்தின் திசை

பத்திரிக்கையாளர் நந்தினி கிருஷ்ணன் சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்து நிறைய வாசித்து அறிந்தவர், ஆங்கிலத்தில் கதைகள் எழுதிக் கொண்டு வருகிறார் தற்போதைய தமிழ் இலக்கியப்போக்குகள், சவால்கள், மற்றும் எனது கதையுலகம் குறித்து என்னோடு கலந்துரையாடல் செய்து A writer’s road  என்ற விரிவான கட்டுரை ஒன்றினை Fountain Ink magazine ல் எழுதியிருக்கிறார், அதற்கான சுட்டி https://fountainink.in/?p=875 முழுமையான கட்டுரையை அவரது வலைப்பக்கத்தில் வாசிக்கலாம் அதற்கான சுட்டி https://disbursedmeditations.blogspot.com/2012/01/writers-road.html ••

வாசகர் கலந்துரையாடல்

இன்று புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற வாசகர் கலந்துரையாடலில் நான் பேசினேன், பாரதி புத்தகாலயத்தை சேர்ந்த நண்பர் நாகராஜன் அந்த நிகழ்வை ஒருங்கிணைவு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள், கூட்டம் நிரம்பி வெளியே  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டே கேட்டார்கள், இலக்கியம், புத்தகவாசிப்பு, சினிமா, பயணம், மகாபாரதம், கல்வி , ஏழு இலக்கியப்பேருரைகள், பௌத்தம் என்று பல்வேறு துறை சார்ந்த விஷயங்கள் குறித்துக்கேள்விகள் கேட்டார்கள், பத்திரிக்கையாளர் ஞாநி கலந்துரையாடலை ஒருங்கிணைப்பு செய்தார், ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பாக நடந்த கேள்வி …

வாசகர் கலந்துரையாடல் Read More »