admin

புத்தக கண்காட்சியில்

நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்து பதினைந்து புத்தகங்களை வாங்கினேன், இந்த முறை அதிகமான கடைகள் இருக்கின்றன, ஆனால் மிக குறைவாகவே அரிய புத்தகங்கள் உள்ளன, புதிது புதிதாக நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை குவித்திருக்கிறார்கள்,  அதில் பாதிக்கு மேலான புத்தகங்கள் சந்தைக்கு உருவாக்கபட்ட மலினமான சரக்குகள், இரண்டு நாட்களிலும் அதிக கூட்டமில்லை, நாளையில் இருந்து அதிக கூட்டம் வரக்கூடும், இந்த இரண்டு நாட்களில் நான் தேர்வு செய்த முக்கியமான புத்தகங்கள் 1)      ஒக்ககூரா காக்குஜோ எழுதிய ஜப்பானிய …

புத்தக கண்காட்சியில் Read More »

பிரமிளின் ஒவியங்கள்

கவிஞர் பிரமிள் நவீன கவிதையின் தனிப்பெருமை ஆளுமை என்பதோடு  அவர் ஒரு அசாத்தியமான ஒவியர், அவரது கோடுகளில் வெளிப்படும் தெறிப்பும் வலிமையும் விஷேசமானது, அவர் தன்னை வரைந்து கொண்ட ஒவியமும் அவரது நூலின் முகப்புச் சித்திரமாக வந்துள்ள ஒன்றிரண்டு ஒவியங்களையும் தவிர அவரது முழுமையான ஒவியங்கள், சிற்ப வேலைபாடுகள் இதுவரை தனித்துக் காட்சிக்கு வைக்கபடவேயில்லை, அவற்றை காலசுப்ரமணியம் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன், அவர் வரைந்த ஒவியங்களை நான் பார்த்திருக்கிறேன், வான்கோவின் கோடுகளில் உள்ள தெறிப்பைப் போல …

பிரமிளின் ஒவியங்கள் Read More »

பேருரைகளின் வீடியோ

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றிய ஏழு பேருரைகளும் தனித்தனி டிவிடிகளாக முறையாக எடிட் செய்யப்பட்டு எழுத்தாளர்களின் புகைப்படங்கள், மற்றும் நாவலின் திரைவடிவத்தில் இருந்து தேவையான காட்சிகள் இணைக்கப்பட்டு வெளியாகி உள்ளது இந்த வீடியோக்களை அட்சரம் வெளியிட்டிருக்கிறது, இரண்டுமணி நேரமுள்ள ஒரு டிவிடியின் விலை ரூ100, ஏழு டிவிடிகளும் மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ600 விலையில் கிடைக்கும், டிவிடி கூரியரில் அனுப்புவதற்கு ஒரு டிவிடிக்கு ரூ 25 சேர்த்து அனுப்பவும். டிவிடி தேவைப்படுகின்றவர்கள் 9445191114 என்ற எண்ணில் தொடர்பு …

பேருரைகளின் வீடியோ Read More »

புத்தகக் கண்காட்சி

ஜனவரி 5ம் முதல் 17 வரை சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது, இதில்  6 தேதி முதல் 11ம் தேதி வரை தினமும் மாலை 4. 30 மணிக்கு உயிர்மை அரங்கிற்கு வருகை தருவேன், சந்திக்க விருப்பம் உள்ள  வாசகர்கள் அவசியம் வரலாம் ••• இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F 35 அரங்கில் இந்த …

புத்தகக் கண்காட்சி Read More »

புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள், வாசகர்கள், அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்த ஆண்டு உங்களுக்கு பெரிய வெற்றிகளையும் நல்ல ஆரோக்கியத்தையும், மேன்மையான எண்ணங்களையும், சந்தோஷமான உறவுகளையும் தருவதற்கு வாழ்த்துகிறேன். ** புது வருசத்தை கவிதையோடு துவங்குவோம் ஒரம்போகியாரின் ஐங்குறுநூற்று கவிதையிது புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகள் இவள் பாணர் நரம்பினும் இன் கிளவியளே. நீராடும் பெண்கள் குளிப்பதற்கு முன்பாக தன்னுடைய அணிகலன்களை கழட்டிக் கரையில் …

புத்தாண்டு வாழ்த்துகள் Read More »

ஷரீபின் வரிகள்

கர்நாடகத்தில் வாழ்ந்த ஞானியான ஷரீஃப் பற்றி பாவண்ணன் மிகச்சிறப்பான ஒரு கட்டுரையை திண்ணை இணைய இதழில் எழுதியிருக்கிறார், நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மகத்தான ஞானி ஷரீஃப். கர்நாடகாவின் சிறுநகரம் ஒன்றில் தான் ஷரீஃப்பின் பாடல்களைக் கேட்ட அனுபவத்தை அற்புதமாக விவரித்திருக்கிறார், அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பாடலிது, இதை வாசித்த நேரத்தில் இருந்து குரங்கைக் கோழி விழுங்கியதே என்ற வரிகள் மனதில் ஒலித்தபடியே இருக்கின்றன, சாத்தியமற்ற ஒன்றைச் சொல்வதன் வழியே மின்னல்வெட்டென ஒரு அகதரிசனத்தை …

ஷரீபின் வரிகள் Read More »

தங்க வேட்டை

அமெரிக்க எழுத்தாளரான ஜாக் லண்டனின் (Jack London) ஒயிட் பேங்க் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட ஹாலிவுட் படத்தை நேற்றுப் பார்த்தேன் ஜாக் லண்டனின் கானகத்தின் குரல் (The Call of the Wild) என்ற நாவல் மிகவும் பிரபலமானது, அந்த நாவலின் தொடர்ச்சியைப் போல அமைந்துள்ளது ஒயிட் பேங் கானகத்தின் குரல் நாவலில் பழக்கபடுத்தப்பட்ட நாயின் உள்ளே மறைந்திருக்கும் உக்கிரமான மனநிலையை, இயல்பான மூர்க்கத்திற்குத்  திரும்ப முற்படும் ஆசையை எழுதிய ஜாக் லண்டன், அதற்கு நேர்எதிரான …

தங்க வேட்டை Read More »

ஆம் புருனோ – நாடகம்

எனது புத்தக வெளியீட்டு விழாவில் ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையின் நாடகவடிவம் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது,  தியேட்டர் லேப் சார்பில் ஜெயராவ் நாடகத்தை இயக்கியிருந்தார். இந்தச் சிறுகதை எனது புத்தனாவது சுலபம் சிறுகதைத்தொகுப்பில் உள்ளது புருனோ நாடகத்தினை 2012 புத்தாண்டு மாலை தியேட்டர் லேப் அரங்கில் மறுமுறை நிகழ்த்த இருக்கிறார். முதல் நிகழ்வு மாலை ஆறுமணிக்கு, அடுத்த நிகழ்வு ஏழு மணிக்கு என்று இருமுறை நாடகம் நிகழ்த்தப்பட இருக்கிறது விருப்பமான நண்பர்கள், பார்வையாளர்கள் அனைவரும் …

ஆம் புருனோ – நாடகம் Read More »

இனிதானது விழா

எனது ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பி நூறு பேருக்கும் மேலாக நின்று கொண்டே உரைகளைக் கேட்டார்கள், ஆம்புருனோ, அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையை ஜெயராவ் மிகச்சிறப்பாக நாடகமாக்கியிருந்தார், அறிவியல் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் உள்ள பள்ளிகள் தோறும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய நாடகமிது. புருனோவின் விசாரணையைச் சமகாலச் சூழலோடு பொருத்தி அவர்கள் நாடகமாக்கியிருந்தது சிறப்பாக இருந்தது, ஜெயராவ் தமிழ் சூழலின் தனித்துவமிக்க நாடக இயக்குனர் என்பதை …

இனிதானது விழா Read More »

பசித்த பொழுது

நாளை மறுதினம் மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதைத்தொகுப்பான பசித்த பொழுது வெளியாக இருக்கிறது, அந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேசுகிறேன், மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய கவிதைகளை ஒரே சேர வாசிக்கும் போது அது தமிழ் நவீன கவிதையின் அரிய குரலாக, கவித்துவ உச்சத்தைத் தொட்டிருப்பதை உணர முடிகிறது, இக்கவிதைகளை தமிழ் சமூகம் கொண்டாடி மகிழ வேண்டும் என்று தான் சொல்வேன். கவியின் குரலில் தான் எத்தனை மிருது, எத்தனை வன்மம், எவ்வளவு நெகிழ்வு, எவ்வளவு கருணை, எவ்வளவு ஆவேசம், …

பசித்த பொழுது Read More »