admin

ஈரோடு பயணம்

தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள வாசிப்பு இயக்கம் நிகழ்வில் கலந்து கொள்ள நாளை ஈரோடு வருகிறேன். கொல்லம்பாளையம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில்  நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் 5 வரை நடைபெற உள்ளது 8ம் தேதி செவ்வாய்கிழமை ஈரோட்டில் உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. **

பிடித்த கவிதை

சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இக்கவிதை, இதை எழுதியவர் என்.விநாயக முருகன், நவம்பர் 2010 சொல்வனம் இணைய இதழில் வெளியாகி இருக்கிறது இந்தக் கவிதையின் குரலும் சிறுவனின் அகச்சித்திரமும் அற்புதமாக வெளிப்பட்டிருகிறது சமகாலத் தமிழ் கவிதையில் ஒரு புதிய பாய்ச்சலாகவே இக்கவிதையைக் கருதுகிறேன் விநாயகமுருகனின் குஞ்சுண்ணி கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன, அவற்றை அவரது வலைத்தளத்தில் படியுங்கள் விநாயக முருகன் வலைத்தளம் https://nvmonline.blogspot.com/ கலைஞன் ————- இறைச்சிக்கடையொன்றில் உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு உண்மையில் அதுதான் …

பிடித்த கவிதை Read More »

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

-சிறுகதை. தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை, 1998, அப்போது அவளுக்கு வயது இருபத்திமூன்று, கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது, ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கின்றவராகயிருந்தால் உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க கூடும், ஆனால் தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவை சாலைவிபத்துக்களைக் …

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது Read More »

கலைஞனின் நாட்கள்

எனது கர்ணமோட்சம் குறும்படம் குறித்து பத்திரிக்கையாளர் கிராபியன் பிளாக் எழுதிய கட்டுரை. *** கலைஞனின் நாட்கள் – கிராபியன் பிளாக் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை, வசனத்தில் உருவான “கர்ண மோட்சம்’ தமிழ் குறும்படச் சூழலில் மிக முக்கிய பதிவு. அதற்கு இக்குறும்படம் பெற்றிருக்கும் எண்ணற்ற விருதுகளே சான்று! உலகமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பொருளாதரமற்ற கலைஞனின் நாட்கள், போரின் நாட்களை விடவும் மோசமானவை. அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும்பாடாய் போன இச்சமூகத்தில் கலைஞனின் இருப்பு அரிய பொக்கிஷம்தான். ஒவ்வொரு …

கலைஞனின் நாட்கள் Read More »

பால் எர்தோ

If there is a God, he’s a great mathematician.  ~Paul Dirac சில விஞ்ஞானப் புத்தகங்கள் மகத்தான நாவல்களை விட ஆழமாக வாழ்வின் தரிசனங்களை நமக்கு நுட்பமாக அறிமுகப்படுத்தி விடுகின்றன,  குறிப்பாக நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் பெயின்மெனைப் பற்றி அப்படியான வியப்பு எப்போதுமே எனக்குண்டு, அவரது உரைகள் தத்துவச் செறிவானவை. பெயின்மேனைப் போலவே அலாதியான மனப்போக்கு கொண்ட  கணித மேதையான பால் எர்தோவின் (Paul Erdos ) வாழ்க்கை வரலாற்றை …

பால் எர்தோ Read More »

குறும்பட விழா

நவம்பர் 5ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு ஏவிஎம் ஸ்டுடியோவின் உள்ளே அமைந்துள்ள ப்ரிவீயூ திரையரங்கினுள் நண்பர் அருண்பிரசாத் இயக்கி நான் கதைவசனம் எழுதியுள்ள ஐந்து குறும்படங்களின் திரையீட்டு விழாவும் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது நெய்வேலிபுத்தகக் கண்காட்சியும் தினமணியும் இணைந்து நடத்திய குறும்படப்போட்டியின் சிறந்த படம், சிறந்த எடிட்டிங். டான் குறும்படப்போட்டியில் சிறந்த படம். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்வின் சிறந்த குறும்படம், சிறந்த வசனம் உள்ளிட்ட பல முக்கிய விருதுளைப் …

குறும்பட விழா Read More »

இது அமெரிக்க சினிமா இல்லை

இன்டர்நேஷனல் தமிழ் பிலிம் அகாதமி மற்றும் செவன்த்சேனல் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து நடத்தும் சென்னை உலகத்திரைப்படவிழா நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன், நான் முன்னிலை வகிக்க, இயக்குனர் வசந்தபாலன் படவிழாவைத் துவங்கி வைத்தார். தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்,   அவர் தனது சொந்த முயற்சியில் ஆண்டுதோறும் சென்னையில் உலகத் திரைப்படவிழாவினை நடத்துகிறார், மாணவர்களும், உதவி இயக்குனர்களும், சினிமா ரசிகர்களும் பயன்பெற வேண்டும் என்பதே தனது முக்கியமான நோக்கம் என்கிறார் நாராயணன், இந்தத் திரைப்பட விழா …

இது அமெரிக்க சினிமா இல்லை Read More »

உலக இலக்கியக் கொண்டாட்டம்

உலகெங்கும் வாசகர்களால் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னாகரீனினா, தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், பாஷோவின் ஜென்கவிதைகள், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் , ஹோமரின் இலியட், ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஆயிரத்து ஒரு அராபிய இரவுகள். ஆகிய  ஏழு புத்தகங்கள் குறித்து  நான் விரிவான ஏழு சொற்பொழிவுகளை நடத்த இருக்கிறேன் உலக இலக்கியங்கள் குறித்து தமிழில் முதன்முறையாக இந்தத் தொடர் உரைகள் நடைபெற இருக்கின்றன. உயிர்மையுடன் ருஷ்யக் கலாச்சார மையமும், ஜெயகாந்தன் புஷ்கின் இலக்கியப்பேரவையும் இணைந்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருக்கிறன நவம்பர் …

உலக இலக்கியக் கொண்டாட்டம் Read More »

நீயா நானா

கடந்த வாரம் ஒளிப்பரப்பான  நீயா நானா விவாத நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருந்தேன், அதற்கான காணொளி இணைப்பு https://youtu.be/WLxIFBz8WNU https://youtu.be/PbllsPQnaFk **