admin

மச்சான்

2008ம் ஆண்டு வெளியான மச்சான் (Machan) என்ற சிங்களத் திரைப்படம் ஒன்றினை சமீபத்தில் பார்த்தேன், சென்னை திரைப்பட விழா, திருவனந்தபுரம் திரைப்பட விழா இரண்டிலும் இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது என்று ஒரு நண்பர் சொல்லி படத்தைக் காணும்படியாக தந்திருந்தார், மச்சான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் Death on a full Moon Day போன்ற சிறந்த சிங்களப் படங்களை இயக்கிய பிரசன்ன விதநாயகே, படத்தின் இயக்குனர் இத்தாலியை சேர்ந்த உபர்ட்டோ பசோலினி, படத்தயாரிப்பில் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு …

மச்சான் Read More »

துயில் – நாவலும், நோய்மை பற்றிய புரிதலும்

கடந்த சனிக்கிழமை டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய துயில் பற்றிய விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, நிறைய வாசகர்கள் துயில் குறித்து ஆர்வமான கேள்விகளைக் கேட்டார்கள், நேரலையின் வழியாகவும் இந்த நிகழ்ச்சி நிறைய நண்பர்களால் கேட்கப்பட்டிருக்கிறது. முனைவர் இராம குருநாதன் அவர்கள் துயில் விமர்சனக்கூட்டத்திற்கு தலைமையேற்று நாவல் குறித்து விரிவான அறிமுகவுரையை நிகழ்த்தினார் , தமிழின் மரபு இலக்கியங்களைப் பற்றிய நுண்மையான புலமை கொண்ட இராம குருநாதன் அவர்கள், நவீன இலக்கியப்படைப்புகளையும் ஆழ்ந்து வாசித்து பல்வகை விமர்சனக்கோட்பாடுகளைக் கொண்டு துல்லியமான …

துயில் – நாவலும், நோய்மை பற்றிய புரிதலும் Read More »

பறவைக்கோணம் 2

சொன்னது நீ தானா. ஊடகக்கலை பயிலும் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்காகச் சென்றிருந்தேன், விவாதம் ஹிட்ச்காக்  திரைப்படங்களைப் பற்றித் திரும்பியது, ஏன் தமிழில் சஸ்பென்ஸ் திரில்லர் வகை திரைப்படங்கள் அதிகம் வருவதில்லை என்று விவாதிக்கத் துவங்கிய போது, ஒரு மாணவர் தமிழில் உங்களுக்குப் பிடித்தமான திரில்லர் இயக்குனர் யார் என்று கேட்டார், எஸ் பாலச்சந்தர் என்று சொன்னேன், மாணவர்கள் உடனே கே.பாலச்சந்தரை நினைவில் கொண்டு அவர் என்ன திரில்லர் படங்கள் எடுத்திருக்கிறார் என்று மறுகேள்வி கேட்டார்கள், அந்த …

பறவைக்கோணம் 2 Read More »

துயில் கலந்துரையாடல்

சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், …

துயில் கலந்துரையாடல் Read More »

நல்லார் ஒருவர்.

அரசுப்பள்ளிகளைப் பற்றி எப்போதுமே நமக்கு இளக்காரமான மனநிலையே இருந்து வருகிறது, ஆனால் நான் அரசுப்பள்ளியில் பயின்றவன் என்ற முறையில் அதன் தரம் மற்றும் குறைபாடுகளை நன்றாக அறிவேன், பெரும்பான்மை தனியார்பள்ளிகள் கல்வியை முழுமையானதொரு வணிகமாக மாற்றியுள்ள சூழலில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியமான ஒன்று. பெரும்பான்மையான எனது பயணங்களில் அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்று அதன் தற்போதைய நிலையைக் கண்டறிந்து வருகிறேன், கற்றுத்தரும் முறை மிகவும் பலவீனமாக உள்ளது என்பதே நான் …

நல்லார் ஒருவர். Read More »

இலக்கியச்சுடர் விருது

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின்  மாநில மாநாடு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை குற்றாலத்தில் நடைபெற உள்ளது, அதையொட்டிக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெறுகின்றன. இதில் அக்டோபர் 1ம் தேதி காலை பத்துமணிக்கு  படைப்பும் படைப்பாளியின் அனுபவங்களும் என்ற தலைப்பில்  உரையாட இருக்கிறேன், இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கும் சமூகப்பணியாற்றியவர்களுக்கும் விருது வழங்கி வருகிறது, இந்த ஆண்டிற்கான  சிறந்த புனைகதை ஆசிரியருக்கான இலக்கியச்சுடர் விருதை எனக்கு அறிவித்துள்ளது, சிறந்த நல்லிணக்க எழுத்துப்பணிக்கான விருது எழுத்தாளர் …

இலக்கியச்சுடர் விருது Read More »

சாக்லேட் கனவுகள்

I am only 8 years old, I told myself. No little boy of 8 has ever murdered anyone. It’s not possible. Roald Dahl உலக அளவிலான சிறுவர்களுக்கான இலக்கியம் குறித்து தமிழில் அதிகம் பேசப்படுவதேயில்லை, அப்படி பேசப்பட வேண்டிய முக்கியமானவர்களில் ஒருவர் ரொவால்ட் டால் (Roald Dahl). சிறுவர்களுக்கான அவரது புனைகதைகள் உலகப்புகழ் பெற்றவை, அதே அளவிற்கு அவரது சிறுகதைகளும் முக்கியமானவை, திகில் ஊட்டும் சம்பவங்களைக் குடும்பச் சூழலின் பின்புலத்தில் …

சாக்லேட் கனவுகள் Read More »

அறிவிப்பு

சேர்தளம் மற்றும் திருப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வு 25ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4.30 முதல் இரவு 7.30 வரை அரோமா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பறவைக் கோணம்

உயிர்மை இதழில் பறவைக்கோணம் என்ற புதிய பத்தி ஒன்றினைத் துவங்கியிருக்கிறேன், அதில் வெளியான முதற்கட்டுரையிது •• பகலின் உன்னதப்பாடல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பாமா விஜயம் படத்திலுள்ள ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்ற பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன், எம்எஸ்வி இசையில் கண்ணதாசன் எழுதிய பாடலது, பி சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகிய மூவரும் பாடியிருக்கிறார்கள்,  திரைப்படத்தின் கதையோடு பாடல் எப்படிப் பொருந்திவர வேண்டும் என்பதற்கான முன்னுதாரணப் பாடலது, அழகாகப் …

பறவைக் கோணம் Read More »

பார்த்தேன் படித்தேன்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த மலையாளக் குறும்படமிது, Meals Ready https://youtu.be/9gZCwY9qJL4 •• அஸீஸ் பே சம்பவம் அய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம்,  கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று, துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத …

பார்த்தேன் படித்தேன் Read More »