சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது
இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது
நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது,
விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, மேற்கு கேகே நகர், சென்னை 78, தொடர்பு எண் 99404 46650.
உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் கேட்கும்படியாக இந்த நிகழ்வு நேரலையாக ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, கலந்துரையாடலைக் கேட்பதற்கு இந்த இணைப்பிற்குச் செல்லவும்
https://www.talksintamil.com/2011/10/02/s-ramakrishnans-thuyil-novel-discussion/