admin

புத்தக வெளியீட்டு விழா

எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவும், தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டு விழாவும் செப்டம்பர் 4ம் தேதி மாலை ஆறுமணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற உள்ளது,  உயிர்மை பதிப்பகம் இந்த விழாவினை நடத்துகிறது, அழகர்கோவில் செல்லும் பிரதான சாலையில் உள்ளது இந்த அரங்கு, வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். நாள் 4.9.2011 ஞாயிற்றுக் கிழமை நேரம் மாலை 6  மணி இடம்: ஹோட்டல் தமிழ் நாடு அழகர் கோயில் சாலை மதுரை …

புத்தக வெளியீட்டு விழா Read More »

ஐந்து இணையதளங்கள்

இவை சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்த முக்கியமான ஐந்து இணையதளங்கள். ஒவ்வொன்றும் தனித்துவமானவை, முக்கியமான இந்த இணையதளங்களின் வழியே வாசிப்பு அனுபவத்தை நாம் மேம்படுத்திக் கொள்ளலாம். தமிழ்தொகுப்புகள் தமிழ் இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது, கட்டுரைகள், சிறுகதைகள். ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்புமுறை இதன் தனிச்சிறப்பு, இம்முயற்சிக்கு காரணமாக இருந்த சிங்கமணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் https://thoguppukal.wordpress.com/ மலேசியாவிலிருந்து ரெ.கா மலேசியாவின் முக்கிய எழுத்தாளரான ரெ.கார்த்திகேசுவின் இணையதளம், அவரது சிறுகதைகள், …

ஐந்து இணையதளங்கள் Read More »

நல்லி-திசை எட்டும் இலக்கிய விருது

2011 ஆண்டிற்கான நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, இதில் ஆங்கிலத்தில் இருந்து நான் மொழியாக்கம் செய்த குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருதினைப்பெற்றிருக்கிறது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில் இயற்கையைப் பற்றி பல்வேறு இனக்குழுவினரிடம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். இந்த விருதிற்கு ரொக்கப் பரிசு ரூ.10,000. மற்றும் பாராட்டுப் பத்திரம் அளிக்கப்படுகிறது. இதற்கான விழா அக்டோபரில் நடைபெற உள்ளது. **

பசியாறிட்டீங்களா.

ஒரு வார கால மலேசியப் பயணத்திலிருந்து இன்று சென்னை திரும்பினேன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நான் நடத்திய மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள், காலை எட்டு மணிக்குத் துவங்கிய பயிலரங்கு இரவு 11 மணிவரை நடைபெற்றது, உற்சாகத்துடன் கூடிப்பேசி விவாதித்தது சிறப்பாக இருந்தது, ஒரு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளில் இருந்து சிறந்த  ஒன்றைத் தேர்வு செய்து ஆயிரம் ரிங்கட் பரிசு தருகிறார்கள், அந்த தேர்வுக்குழு தலைவராக …

பசியாறிட்டீங்களா. Read More »

படித்ததும் பார்த்ததும்

What I Talk About When I Talk About Running என்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமியின் புத்தகம் அவரது ஒட்டப்பந்தய அனுபவங்களை விவரிக்கிறது, முராகமி மராத்தன் ஒட்டத்தில் ஈடுபாடு கொண்டவர், தனது மத்திய வயதில் ஒட்டப்பந்தயங்களில் ஆர்வமாகிய முராகமி அதை ஒரு விளையாட்டு என்பதை தாண்டிய ஆன்மீக அனுபவமாக விவரிக்கிறார், ஒட்டப்பந்தயத்தில் ஒருவன் அடையும் வெற்றி என்பது அவன் எவ்வளவு நிமிசங்களுக்கு ஒடி வெற்று பெறுகிறான் என்பது மட்டுமில்லை, மனிதர்களின் உடல் எவ்வளவு வேகமாக …

படித்ததும் பார்த்ததும் Read More »

மதுரையில் புத்தகவெளியீட்டு விழா

எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழாவும் தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டுவிழாவும் மதுரையில் நடைபெற உள்ளது. உயிர்மை நடத்தும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை ஆறுமணிக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபறெ உள்ளது, இதில் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள், நிகழ்ச்சி பற்றிய முழுமையான விபரங்களை சில நாட்களில் தெரிவிக்கிறேன், செப்டம்பர் 2 முதல் நடைபெறும் மதுரை புத்தக கண்காட்சியில் 3 மற்றும் 4ம்தேதிகளின் பகலில் …

மதுரையில் புத்தகவெளியீட்டு விழா Read More »

கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது

நேற்று பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனைச் சந்திப்பதற்காக சென்றிருந்தேன், என்னோடு வில்லியனூர் பழநி என்ற நண்பரும் வந்திருந்தார்,  பழநி உற்சாகமான வாசகர், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் வாழ்க்கையைப் பற்றி கவிதை வடிவில் ஒரு நூலை எழுதியிருக்கிறார், கி.ராஜநாராயணன் வீடு விமானநிலையம் செல்லும் சாலையில் உள்ள லாஸ்பேட் ஏரியாவின் அரசுக் குடியிருப்பில் உள்ளது, பைக்கில் அவரது வீட்டை தேடிச் சென்று கொண்டிருந்தோம், மழைக்குப் பிந்திய சாலைகளில்  ஆங்காங்கே நீர்தேங்கியதால் வாகனநெருக்கடி அதிகமாக இருந்தது. முந்திய இரவு நல்ல மழை பெய்திருந்தது, …

கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது Read More »

கதைகள் அறிவோம்

குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்களை கடந்த இரண்டு மாதங்களில் மதுரை, திருச்சி, ராஜபாளையம். சென்னை, ஆத்தூர் என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் அறிமுகப்படுத்தியும் கதைசொல்லியும் வருகிறேன். ராஜபாளையத்தில் உள்ள ஆனந்தா பள்ளியில் நடைபெற்ற புத்தக அறிமுக நிகழ்வில் ஏழு பள்ளிமாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாசித்து தங்களின் கருத்துரைகளை வழங்கியது சிறப்பாக இருந்தது திருச்சி எஸ்ஆர்வி பள்ளியில் ஆசிரியர்களுக்குக் கதை சொல்வதற்கான ஒரு நாள் பயிலரங்கினை நடத்தினேன், கதை சொல்வதை கல்வியோடு இணைந்த ஒரு பாடமாகவே …

கதைகள் அறிவோம் Read More »

வரலாறும் இலக்கியமும்

Writing History and Literature: Ideas and Practice என்ற தேசியக்கருத்தரங்கு  பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டில் ஆகஸ்ட் 10,11,12 ஆகிய மூன்று  நாட்களில் நடைபெற உள்ளது,  இதில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி செல்கிறேன். •• சேலம் தமிழ்சங்கம் நடத்துகின்ற கவிஞர்மீரா நினைவு நவீன இலக்கியப் பயிலரங்கில் கலந்து கொள்ள 13,14 ஆகிய இரண்டு நாட்கள் சேலம் செல்ல இருக்கிறேன் ••

கவிதையில் நுழைந்த திருடன்

திருடன் விட்டுச் சென்றிருக்கிறான் நிலவை என்னுடைய ஜன்னலில், என்ற ரியோகானின் ஜென்கவிதையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போது நிலவை விடத் திருடனே மிக வியப்பாக இருக்கிறான், ஜென் கவிதையுலகின் மாஸ்டர்களில் முக்கியமானவர் துறவி ரியோகான், 1758ல் ஜப்பானின் இசிகோ பகுதியில் பிறந்தவர், இளவயதிலே பௌத்த துறவியாகி அலைந்து திரிந்தவர், இவரது மூன்று கவிதைகளில் திருடன் வருகிறான், பௌத்த நீதிக்கதைகளில் வரும் திருடனைப்போலவே தான் இவனும் இருக்கிறான், இந்தக்கவிதையை ஆழ்ந்து வாசிக்கையில் யார் அந்தத் திருடன் என்ற கேள்வி …

கவிதையில் நுழைந்த திருடன் Read More »