admin

கதைகளைத் தின்னும் ஆடு

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரை பற்றி எப்போது நினைக்கும் போது கூடவே தா.மணியின் நினைவும் சேர்ந்துதான் வருகிறது. ஒரு வேளை எனக்கு பஷீரை அறிமுகம் செய்து வைத்தவர் என்ற காரணமாக இருக்ககூடும். இன்னொன்று அவரைப் போல பஷீரை நேசித்தவர்கள் எவரையும் இன்று வரை நான் காணவில்லை என்பதும் காரணமாக இருக்ககூடும் தா.மணி எழுத்தாளர் அல்ல. ஆனால் எழுத்தாளர் ஆவதற்கான அத்தனை குணங்களும் அவதானிப்புகளும் அவரிடமிருந்தன. விரும்பி எழுத்தாளர் ஆகாமல் இருந்தாரோ என்னவோ. தீவிரமான இலக்கிய வாசகர். …

கதைகளைத் தின்னும் ஆடு Read More »

பொம்மலாட்ட சினிமா

ஜெரி டிரிங்காவின் (Jiri Trnka))மூன்று அனிமேஷன் திரைப்படங்களைச் சமீபத்தில் பார்த்தேன். இவை Puppet animation வகையை சேர்ந்தவை. 1950களில் வெளியான இவை பெரியவர்களுக்கான அனிமேஷன் படங்கள். பெரியவர்கள் தங்கள் பால்யவயதோடு பொம்மைகளை விட்டு  விலகிப் போய்விடுகிறார்கள். அவர்களுக்கு பொம்மைகளை மறுநினைவு கொள்ள வைப்பதே தனது நோக்கம் எனும் டிரிங்கா, கதை கேட்பதில் குழந்தைகள் எப்போதும் ஆர்வமானவர்கள். பெரியவர்களை கதை கேட்க வைப்பது கடினம். ஆகவே தனது பொம்மலாட்ட சினிமாவை ஒரு சவாலான கலைவடிவம் என்கிறார். நிஜமான பொம்மைகளை …

பொம்மலாட்ட சினிமா Read More »

புத்தகம் படிப்பது எப்படி?

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன. இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ …

புத்தகம் படிப்பது எப்படி? Read More »

ஆடுகளின் நடனம்

பழனி அருகே ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது என்று பேருந்தில் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிறிய மலை. அதன் நிறம் பச்சை கலந்த சாம்பல். எல்லையற்ற பரந்த வெளி. பின்மதிய நேரம். உருண்டுகிடக்கும் பாறைகள். கூட்டமாக ஆடுகள் ஆங்காங்கே மேய்ந்துகொண்டிருந்தன. ஆடுகள் மேயும் காட்சி எப்போதுமே மிக பழமையானதொரு காலத்தை நினைவுபடுத்துகிறது. பார்க்க எளியதாக தோன்றும் ஆடுமேய்த்தல் மிக கடினமான வேலை. ஆடுகளின் மீது கண் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். ஆட்டு இடையர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது …

ஆடுகளின் நடனம் Read More »

காட்சிகளின் புதிர்பாதை

கிறிஸ்தபோர் நோலனின் இன்செப்ஷன் (Inception ‎)  திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு நிமிசம் எது நிஜம் எது கனவு என்று தெரியாதபடி நகரம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கனவிற்குள் போய் எண்ணங்களை திருடி வருபவனை பற்றிய படம். ஒரு கனவினுள் மற்றொரு கனவை உருவாக்கி அதன்வழியே புதிதாக ஒரு எண்ணத்தை புகுத்த முடியுமா என்று கதைகளத்தை எடுத்து கொண்டு சர்ரியலிச சினிமா போல உருவாக்கியிருக்கிறார்கள். அற்புதமான முயற்சி, காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன, ஆனாலும் படம் சற்று குழப்பமானது. …

காட்சிகளின் புதிர்பாதை Read More »

கனவின் மிச்சம்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் தி போப்ஸ் டாய்லெட்.(ThePope’s Toilet) உருகுவே நாட்டில் தயாரிக்கபட்ட படமிது. இயக்கியவர் Cesar Charlone and Enrique Fernandez. 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்குச் சிபாரிசு செய்யபட்டது. லத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் கதை நடைபெறுகிறது. மெலோ என்ற சிறிய ஊர். உருகுவே பிரேசில் எல்லையில் உள்ளது. இந்த ஊருக்கு 1988ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் விஜயம் செய்யப் போவதாக …

கனவின் மிச்சம் Read More »

வளரும் புத்தகங்கள்

மூன்று நாட்களுக்கு முன்பு என் கனவில் இரண்டாம் வகுப்பில் நான் படித்த பாடல் ஒன்று அப்படியே வரிமாறாமல் நினைவிற்கு வந்தது. அதைப் பாடிய டீச்சர் முகமும் குரலும் கூட எனக்கு துல்லியமாக கேட்டது. விடிந்து எழுந்து உட்கார்ந்தவுடன் அந்தப் பாடலை கடகடவென கணிணியில் அடித்துவிட்டேன். நம்பவே முடியவில்லை. எத்தனை வருசங்களாகிவிட்டது. எப்படி இந்தப் பாடல் மனதில் பசுமையாக இருக்கிறது. அதைப் பாடும்போது எங்கே கை அசைக்க வேண்டும் என்பது கூட நன்றாக நினைவிருக்கிறது. மறுபடி மறுபடி அதைப் …

வளரும் புத்தகங்கள் Read More »

என் உரை

9.7.2010 வெள்ளிக்கிழமை அன்று  உயிர்மை நடத்திய இந்திரா பார்த்தசாரதி் அவர்களுக்கு நடந்த விழாவில் நான் பேசிய உரையை நண்பர் பிரபு ராமகிருஷ்ணன் இணையத்தில் தரவிற்க்கம் செய்து கொள்ளும்படியாக இணைத்திருக்கிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி, என் உரை பற்றி தனது இணைய பக்கத்தில் எழுதி தன் அன்பை பகிர்ந்து கொண்ட நண்பர் சாரு நிவேதிதாவிற்கு நிறைந்த நன்றியும், அன்பும் தெரிவித்து கொள்கிறேன் இணைப்பு எஸ்.ராமகிருஷ்ணன்  விழாஉரை https://www.garageband.com/mp3player?|pe1|S8LTM0LdsaShZFazYW8

ஆயிரம் கொக்குகள்

டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்த கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக்கூடியவை  என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. அரிதாகிவரும் இந்தக் கொக்குகளை காப்பாற்றுவதற்காக   அரசு பெரும்முயற்சி எடுத்துவருகிறது. டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆன்மாவின் குறியீடாகவும், சமாதானத்தின் அடையாளம் போலவும் கொக்குகள் சித்தரிக்கபடுகின்றன. அதை ஜென் கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது. டிராகன் போல கொக்குவும் ஒரு புனிதபிம்பமே. நம் ஊரிலும் கொக்குகள் அதிர்ஷடத்தை கொண்டு வருகின்றன என்ற  நம்பிக்கையிருக்கிறது. …

ஆயிரம் கொக்குகள் Read More »

தேவதாஸைக் காதலிப்பவர்கள்

தேவதாஸ்  இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் தேவதாஸை பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் நாவலை வாசிக்கும் வரை நானும் காதலின் உன்னத நாயகனாகவே தேவதாஸை நினைத்திருந்தேன். நாவலை வாசித்தபிறகு அந்த எண்ணம் முழுமையாக மாறிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு வார காலம் தேவதாஸ் திரைப்படங்களாக பார்த்துக் கொண்டிருந்தேன். நாகேஸ்வரராவ் நடித்த தமிழ், தெலுங்கு தேவதாசு. பிமல்ராயின் தேவதாஸ்,  திலிப்குமார் நடித்த …

தேவதாஸைக் காதலிப்பவர்கள் Read More »